April 24, 2024
  • April 24, 2024
Breaking News

Tag Archives

சசிகலாவுக்கு தற்கொலை படை தயார் போஸ்டரால் மதுரையில் பரபரப்பு

by on October 29, 2020 0

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டியால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ள நிலையில், பசும்பொன்னில் உள்ள தேவரின் சிலைக்கு தங்கக் கவசம் வழங்கிய, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர் இருவரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சுவரொட்டியில், பாண்டிய நாட்டின் மன்னர் வாரிசு பசும்பொன் […]

Read More

தமிழகத்தை மீட்க வந்த இரண்டாம் பிரபாகரன் விஜய் – மதுரை போஸ்டரால் சர்ச்சை

by on June 23, 2020 0

நேற்று நடிகர் விஜய்யின் பிறந்த நாள் இந்த கொரோனா காலத்திலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வசூலில் ரஜினியை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் விஜய் இருப்பதால் அவரது பலம் தெரிந்த அத்தனை சினிமாக்காரர்களும் அவரை வாழ்த்த தயங்கவில்லை. சினிமா பிரபலங்களே அப்படி என்றால் ரசிகர்களை பற்றி சொல்லத்தேவையில்லை. அதில் எல்லாவற்றிலும் உச்சமாக மதுரை பீ பீ குளத்தைச் சேர்ந்த ரசிகர் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள போஸ்டர் புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தமிழின தலைவர் வே பிரபாகரன் அவர்களுடன் விஜய் […]

Read More

கொரோனா தடுப்பு வாலண்டியராக சாலையில் இறங்கிய சசிகுமார் வீடியோ

by on April 19, 2020 0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களை வீட்டினுள் இருக்கும்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் காவல்துறைக்கு இடையூறு தரும் வகையில் ரோடுகளில் சுற்றி திரிகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான சசிகுமார் அவர்கள் இன்று கொரோனா தடுப்புக்காக மதுரை காவல்துறையுடன் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றியுள்ளார். ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் திரியும் மக்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். “நாம் நலமாக இருக்க இவர்கள் […]

Read More

பரவை முனியம்மா வுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஓடி வந்து உதவிய ஹீரோ

by on October 31, 2019 0

இளம் நடிகைக்கு ஒன்று என்றால் ஓடி வந்து உதவ பலபேர் தயாராக இருக்க, பரவை முனியம்மாவுக்கு ஓடி வந்து உதவியிருக்கிறார் ஒரு ஹீரோ. அவர் அபி சரவணன். நடிகை அதிதிமேனனுடன் திருமண சர்ச்சைகளில் நிறைய அவர் மீது விமர்சனங்கள் வந்தாலும், அவ்வப்போது சமூக சேவைகளில் ஆர்வம் காட்டிவருகிறார் அபி சரவணன். சில தினங்களுக்கு முன் மதுரையிலிருக்கும் பரவை முனியம்மா உடல் நலமின்றி இருப்பதைக் கேள்விப்பட்டு மதுரை சென்ற அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரவை முனியம்மாவுக்கு பரிசுகள், […]

Read More

சென்னை – மதுரை ஒருவாரத்தில் நவீன தேஜஸ் ரயில்

by on December 1, 2018 0

சென்னை-மதுரை இடையே ரெயில்களில் கடும் இட நெரிசல் நிலவுகிறது. பகலில் குருவாயூர், வைகை ஆகிய 2 ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்நிலையில் ஐ.சி.எப்பில் தயராஜ ‘தேஜஸ்’ ரயில் பெட்டிகளைக் கொண்ட அதிநவீன ரயில் சென்னை – மதுரை இடையே பயணிகவிருப்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். முதலாவது தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு மும்பையை தலையிடமாகக் கொண்டு செயல்படும் மேற்கு ரெயில்வேக்கு வழங்கப்பட்டது. இந்த தேஜஸ் ரெயில் மும்பை-கோவா இடையே கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து […]

Read More

மதுரை தேனி வாழ் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

by on August 17, 2018 0

கனமழை காரணமாக கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டது. இதனால் தற்போது வைகை அணைக்கு 4 ஆயிரத்து 941 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. வைகை அணையின் முழு கொள்ளளவு 71 அடியாக இருக்க, இன்று காலை நிலவரப்படி, வைகை அணை 66 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து மதுரை, தேனி மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தற்போது விடப்பட்டுள்ளது. வைகை நதிக்கரையோரம் வாழும் மதுரை மற்றும் தேனி மாவட்ட மக்கள் […]

Read More

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி சீமராஜா இசையை மதுரையில் வெளியிடச் செய்தது – ஆர்டி ராஜா

by on July 21, 2018 0

நம்பிக்கை நட்சத்திரம் சிவகார்த்திகேயன் நடிக்க பொன்ராம் இயக்கும் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துகிறார் 24ஏஎம் தயாரிப்பாளர் ஆர்டி ராஜா. ஆகஸ்டு 3ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த இசை விழா திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுசரி… மதுரையில் ஏன் இசை வெளியீடு..? காரணம் சொல்கிறார் ஆர்டி ராஜா… “தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம் மதுரை. நாங்கள் படத்தைத் தொடங்குவதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில்தான் நடத்துவது என்பதில் […]

Read More

மதுரை வங்கியில் பட்டப்பகலில் 10 லட்சம் கொள்ளை

by on May 1, 2018 0

மதுரை விளக்குத்தூண் பகுதியில் கிழக்கு ஆவணி மூலவீதியில் இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகமும், கிளை அலுவலகமும் இயங்கி வருகின்றன. அத்துடன் முதல் தளத்தில் கிளை அலுவலகமும் இயங்கி வருகிறது. இந்நிலையில் இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கான பிரிவுபசார விழா 4-வது மாடியில் நடக்க, அதில் பங்கேற்பதற்காக ஊழியர்கள் அனைவரும் சென்றிருந்தனர். காசாளரும் கேபினை பூட்டி விட்டு சென்று விட்டார். இதைப் பயன்படுத்தி ஒரு மர்மநபர் வங்கிக்குள் புகுந்து, கேபினுக்கு மேல் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு இருந்த […]

Read More