September 13, 2025
  • September 13, 2025

Simple

விஜய் படத்துக்கென்று சிறப்பு அனுமதி இல்லை – எஸ்.எஸ்.துரைராஜ்

by on March 20, 2018 0

தமிழ்சினிமாவின் ஒட்டுமொத்த துறைகளும் வேலை நிறுத்தத்தில் இருக்க, வர்ம் 23 தேதி முதல் வெளியூரில் நடந்து வரும் படப்பிடிப்புகளையும் நிறுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தியிருக்கிறது. இந்நிலையில் காலையிலிருந்து பரபரப்பாகி வருவது விஜய் நடிக்க, சன் டிவி தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது என்பதுதான். இதுதெரிந்து ஏ.வெங்கடேஷ், ஜேஎஸ்கே உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கொதிப்புடன் விஜய் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி என்று சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.  […]

Read More

தாய்லாந்தில் கவர்ந்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழு..!

by on March 20, 2018 0

‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்கிற வசீகரத் தலைப்பு கொண்ட படத்தை போப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் ‘கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கின்றது. கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசாண்டரா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சந்தோஷ் பிரதாப், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், சதிஷ், விஜி சந்திரசேகர், ஜகன் மற்றும் ‘மைம்’ கோபி ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையில், ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில், டி.எஸ்.சுரேஷ் படத் தொகுப்பில், ஜக்கியின் கலை […]

Read More

இளையராஜா, தோனி இன்று ‘பத்ம விருது’ பெறுகின்றனர்

by on March 20, 2018 0

‘பத்ம விருது’ அறிவிக்கப்பட்ட 84 வெற்றியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று (மார்ச் 20) பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். ஆண்டுதோறும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படுகின்றன.  2018 ம் ஆண்டைப் பொறுத்த அளவில் 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இசையமைப்பாளர் இளையராஜா உட்பட மூன்று பேருக்கு ‘பத்ம விபூஷண்’, கிரிக்கெட் வீரர் தோனி […]

Read More

இந்தியா வெல்லாமல் போயிருந்தால் துரதிருஷ்டம் – அதிரடி தமிழன் தினேஷ் கார்த்திக்

by on March 19, 2018 0

இலங்கையின் 75வது சுதந்திர தினத் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கை, இந்தியா, வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகள் கலந்து கொண்ட ‘நிதாஹஸ் கோப்பை’ கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நேற்று இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் இந்தியா வெற்றி பெற கடைசி ஒரு பந்தில் ஆறு ரன்கள் தேவைப்பட, அப்போது பேட்டிங்க் செய்த தினேஷ் கார்த்திக் கடைச் பந்தில் ஆறு ரன்கள் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்து இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும் […]

Read More

பழைய 500, 1000 நோட்டுகளை மறுசுழற்சி செய்யவில்லை – ரிசர்வ் வங்கி

by on March 19, 2018 0

கடந்த 2016, நவம்பர் மாதம் 8ம் தேதி, , 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து புதிய, 500 – 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. செல்லாத, பழைய 500 , 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டு அனைத்து மக்களிடமும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டன. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட […]

Read More