இங்கே வீடியோவில் இடம் பெற்றிருக்கும் இருவரும் தங்களை விஜய் ரசிகர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். கையில் ஆளுக்கொரு அரிவாளும் வைத்திருக்கிறார்கள். சென்னை காசி தியேட்டரில் சர்கார் பேனரைக் கிழித்த அதிமுகவினருக்கு சவால் விட்டு ஏகவசனத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசும் இவர்கள் குறித்து விவரம் கேட்டிருக்கிறது காவல்துறை. இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் 044-23452348 மற்றும் 044-23452350 ஆகிய எண்ணுக்கோ அழைத்துத் தெரிவிக்கலாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அறிவித்துள்ளது. ஆனால், நேற்று சர்கார் சக்சஸ் பார்ட்டியில் […]
Read Moreஇயற்கை வேளாண் துறையில் முக்கியமாக அறியப்படும் ஓரு பெயர் ‘நெல் ஜெயராமன்’. பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிக்கும் இவர் 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டறிந்து அவற்றை இயற்கை முறை விவசாயத்தில் பெருக்கி பிற விவசாயிகளும் பயன் பெறும் விதத்தில் பயிற்சியும் அளித்து வருபவர். ஆனால், சமூகம் போலவே இயற்கையும் அவரை வஞ்சித்துவிட கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடும் புற்றுநோயுடன் போராடி வருகிறார். உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் ஆதரவால் சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ புற்றுநோய் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் தங்கி […]
Read Moreதீபாவளிக்கு விஜய்யின் ‘சர்கார்’ வெளியாகும் என்று அறிவித்த நிலையிலும் தன் படமான ‘திமிரு புடிச்சவன்’ வந்தே தீரும் என்று அறிவித்திருந்தார் விஜய் ஆண்டனி. அதற்கு தயாரிப்பாளர் சங்கமும் அனுமதி அளித்திருந்தது. ஆனால், விஜய் படத்தை அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து வினியோகஸ்தர்களால் விஜய் ஆண்டனி படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட முடியாத நிலைமை ஏற்படவே, அவர்கள் கையை விரிக்க ‘திமிரு புடிச்சவன்’ம் படம் தீபாவளிக்கு வெளியாகாமல் பின்வாங்கியது. அதற்கு அடுத்த வாரம் நவம்பர் 16ம்தேதி ‘காற்றின் மொழி’, ‘செய்’, […]
Read Moreஎங்கு பார்த்தாலும் டெங்கு, பன்றிக் காய்ச்சல் என்று பரவி வரும் நிலையில் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் விசேஷ வார்டுகள் இதற்கென்று நிறுவப்பட்டுள்ளன. எந்த நோயும் ஆள் பார்த்தோ அந்தஸ்து பார்த்தோ வருவதில்லை. அதுபோல்தான் நடிக, நடிகையரும் கூட எந்த நோய்க்கும் விதிவிலக்கில்லை. இப்போது பிரபல நடிகர் சரவணனுக்கு இந்தப் பன்றிக் கய்ச்சல் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. பல ஆண்டுகள் முன்பே சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து இருந்தாலும் பாலாவின் ‘நந்தா’ படத்தில் மறுபிறவி எடுத்த சரவணன், […]
Read More‘ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்சன்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் மன்னு தயாரித்திருக்கும் திரைப்படம் ‘செய்’. இந்தப் படத்தில் நக்குல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி, ப்ளாரன் பெரைரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்பாபு. ‘செய்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் நாயகன் நக்குல், நாயகி அன்ஷால் முன்ஜால், படத்தின் இயக்குநர் ராஜ்பாபு, தயாரிப்பாளர் மன்னு, நடிகர் ப்ளாரன் பெரைரா, நடிகை அஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் நாயகன் நக்குல் […]
Read More