January 30, 2026
  • January 30, 2026

Simple

காற்றுள்ளபோதே வீட்டைக் கட்டிய யோகிபாபு

by on January 30, 2019 0

சென்னையில் குடியேறிய அனைவருக்குமே இங்கு ஒரு வீட்டைக் கட்டிவிட வேண்டுமென்ற கனவு இருக்கும். அதில் சினிமாக் காரர்களின் கனவு கொஞ்சம் பிரமாண்டமாகவே இருக்கும். வடிவேலுவும், சந்தானமும் விட்ட கேப்பில் ‘மள மள’வென்று முன்னேறியவர்கள் சூரியும், யோகிபாபுவும். இதில் சூரி சொந்த வீட்டைக் கட்டிவிட்டார். அவரைவிட கொஞ்சம் பின்னால் வந்தாலும் யோகிபாபுவின் வளர்ச்சி அபரிமிதமானது. அவர் இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்கிற அளவில் முன்னேறியவர் வளர்ச்சிக்குத் தக்கவாறு சம்பளத்தையும் சமீபத்தில் உயர்த்திக் கொண்டிருக்கிறாராம். இந்நிலையில் நேற்று அவர் […]

Read More

இளையராஜா 75 க்கு தடை கேட்ட வழக்கு ஒத்தி வைப்பு

by on January 30, 2019 0

இளையராஜாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் நிதி தவறாகக் கையாளப்படுகிறது என்ற குற்றச்சாட்டு கூறி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்திரம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, துணைத் தலைவர் செங்குட்டுவேல் ஆஜராகினார். அவர் சார்பில் வழக்கிறஞர்கள் கிருஷ்ணா ரவிந்திரன், சார்லஸ் டார்ன் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் கூறுகையில், தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலும், அடிப்படை ஆதாரங்கள் இன்றி […]

Read More

பாண்டி முனி கதைக் கேட்டுட்டு ஜாக்கி ஷெராப் என்ன செஞ்சார்? கஸ்தூரி ராஜா விளக்கம்!

by on January 29, 2019 0

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் பாண்டி முனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. படப்பிடிப்பில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப் .. சாதாரண நடிகர்கள் கூட தன்னை மிக உயர்ந்தவர்களாக காட்டிக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் மிக உயர்ந்த இடத்தில் மதிக்கக் கூடிய நிலையில் இருக்கும் ஜாக்கி சாதாரண மனிதனாக எல்லோ ருடனும் பழகிக் கொண்டிருந்தது ஆச்சர்யம் தான்.. எல்லோருடனும் செல்பி எடுத்துக் கொண்டிருந்த அவரை மடக்கி, ‘ இந்த படம் […]

Read More

பிளாஸ்டிக் தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? ஐகோர்ட் கேள்வி!

by on January 29, 2019 0

ஒருமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகம், மகாராஷ்டிரம், உத்தப் பிரதேசம் மாநிலங்களில் தடை விதித்திருப்பது தைரியமான நடவடிக்கை என மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் பிளாஸ்டிக் தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 விதமாக பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலில் உள்ளது. இந்நிலையில் பிஸ்கட், சாக்லேட், சாம்பூ மற்றும் அழகு […]

Read More