சென்னை, 16 அக்டோபர் 2025: சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் [Sundram Fasteners Ltd] நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘வைல்ட் தமிழ்நாடு ‘ எனும் ஆவணப்படம் [‘Wild Tamil Nadu’], அக்டோபர் 16, 2025 அன்று சென்னையிலுள்ள பி.வி.ஆர் சத்யம் திரையரங்கில் முதன்முறையாக திரையிடப்பட்டது. திரு. கல்யாண் வர்மா இயக்கத்தில், நேச்சர் இன் ஃபோகஸ் [Nature inFocus] மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் [Tamil Nadu Forest Department] ஆதரவுடன் இந்த முற்போக்கான வனவிலங்கு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஆச்சர்யமூட்டும் சுற்றுச்சூழல் […]
Read Moreகோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேகடரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இது விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் ரகத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் சித்து, தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, அருள்ஜோதி, ஜெயக்குமார், ஷரண், ஜானகிராமன் ,விஜய் சத்யா, ஆர்த்தி, சுமித்ரா, அலெக்ஸ், தீபன், சிவ சதீஷ்,டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். இந்தப் படத்தின் டீசர் […]
Read Moreபூமர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாத ஜூமர்ஸ் கதை. எனில்… சீனியர் சிட்டிசன்களால் எப்படி இந்தக் கதையை ஏற்றுக் கொள்ள முடியும்..? நாயகன் பிரதீப்பின் முதல் காதல் புட்டுக் கொள்கிறது. திருமணம் முடிந்து ரிசப்ஷனில் நிற்கும் எக்ஸ் – இடம் போய் “ஏன் என்னைக் கழற்றி விட்டாய்..?” என்று கேட்டதும் மட்டுமல்லாமல் தவறுதலாக அவள் தாலியையும் கழுத்தில் இரந்து பிடுங்கி அவர் பண்ணும் அதகளம் போலீஸ் ஸ்டேஷனில் அவரைக் கொண்டு வைக்கிறது. முறைப்பெண் மமீதா பைஜூ வந்து அவரை […]
Read Moreகாடுகளைக் காப்பதற்கு குரல் கொடுத்து பல படங்கள் வந்தாயிற்று. முதல் முதலாகக் கடல் வளங்களைப் பாதுகாக்கச் சொல்லி வந்திருக்கும் படம் இது. அத்துடன் நாம் கேள்விப்பட்டிருக்கும் அண்டர்கிரவுண்ட் மாபியா, மெடிக்கல் மாபியாவைத் தாண்டி ஆயில் மாபியா என்ற நாம் அறியாத உலகத்தைக் காட்டி இருக்கிறார் இயக்குனர் சண்முகம் முத்துசாமி. அப்படி கடற்கரையில் எண்ணெய்க் குழாய்களைப் பதிக்கும் அரசின் ஒரு திட்டத்தால் வாழ்வாதாரங்களை இழந்த மீனவர்களில் ஒருசிலர் அந்த எண்ணையையே திருடி கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்ய ஆரம்பிக்கிறார்கள். […]
Read Moreதன் அடுத்தடுத்த படங்களில் வளர்ந்து கொண்டே இருக்கும் மாரி செல்வராஜ், தன் அடுத்த உயரத்தைத் தொட்டிருக்கிறார்..! அந்த உயரத்தில் சிகரமான விஷயம், சாதிய விஷயங்களை சமன் செய்து சீர்தூக்கி பார்த்திருப்பது. யாரும் யாருக்கும் உயர்ந்தவர் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை என்பதை அவரவர்களுக்கே உரிய அறத்துடனும், அழுத்தத்துடனும் சொல்லி இருக்கும் நேர்மை சிறப்பு. நசுக்கப் பட்டவர்கள் தன் திறமையால் உயரும்போது எந்த இடத்திலும் நிதானத்தை இழந்து விடாமல் இலக்கை அடைவதுதான் தங்கள் சந்ததிக்கு செய்யும் மகத்தான செயல் என்பதையும் […]
Read Moreசென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலத்தில் வட்டார ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (RICCC) நிறுவப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையம் 24 × 7 செயல்படும். 1000+ கேமராக்கள், மழை மற்றும் வெள்ள சென்சார் கருவிகள், அவசர அழைப்பு, Wi-Fi வசதிகள், பொது அறிவிப்பு ஒலிபெருக்கிகள் என குடிமக்கள் பாதுகாப்பையும் வசதியையும் கண்காணித்து மேலாண்மை செய்யும் மக்கள் சேவைக்கான வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகும்.
Read More