ஒரே படத்தில் உச்சத்துக்குப் போன இயக்குநர் கார்த்திக் நரேனின் இரண்டாவது (வெளியாகும்) படமாக ஆனதால் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம். இந்தப்படத்தில் வழக்கமான முறையில் இல்லாமல் முன்பின்னான திரைக்கதை உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார் கார்த்திக் நரேன். போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் அதிகாரியாக வரும் அருண்விஜய்யின் மிடுக்கும், அவருக்கான கெட் அப்பும் அபாரமாக இருக்கிறது. அவரும் அணிந்து கொண்டிருக்கும் ஆடைகளுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் பாத்திரத்தை உள்வாங்கி நடிக்க நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். அவர் மேற்கொண்ட பணியில் தொடர்ந்து பின்னடைவு […]
Read More’குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு ராஜூமுருகன் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ஜிப்ஸி’. ஜீவா, நடாஷா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ட்ரெய்லரில் மதவெறிக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றிருந்தது. இந்தப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் இந்த படம் சென்சார் சிக்கல் காரணமாக ரிலீஸ் செய்ய […]
Read Moreதலைவி படத்தில் ஜெயலலிதா வாக நடித்து வருவதாலோ என்னவோ கங்கனா ரணாவத் துக்கு பக்தி அதிகமாகி விட்டது. ராமேஸ்வரம் கோவிலின் 22 புனித தீர்த்தங்கள பற்றி கேள்விப்பட்டு அங்கே விசிட் அடித்தவர் அங்கே பக்தி பரவசத்துடன் அனைத்து புண்ணிய தீர்த்தஞளிலும் நீராடி இருக்கிறார். கோவிலில் தலைவிக்கு ஏக மரியாதை கிடைத்த காரணம் தலைவி படம் மட்டுமில்லை. ஒரு 2000 நோட்டு கட்டு முழுதும் கரைந்ததாம் டிப்ஸ் கொடுத்து. தலைவி ஆகரதுன்னா சும்மாவா? கீழே கங்கனா நீராடிய வைரல் […]
Read Moreநடிகர் திலகம் சிவாஜி கணேசனை முதல்முறையாக இயக்கும் வாய்ப்பு பாரதிராஜாவுக்குக் கிடைத்த போது சிவாஜி கணேசன் வயோதிகத்தின் தொடக்கத்தில் இருந்தார். எனவே அவரை வைத்து வழக்கமான காதல் கதையைப் புனைய முடியாத பாரதிராஜா, வாழ்ந்து முடித்த ஒரு மனிதன் மீது வாழத் தொடங்கிய பெண்ணொருத்தி கொண்ட காதலை ‘முதல் மரியாதை’யாகக் கொடுத்தார். அப்போதே அதைக் காதல் என்று சொல்ல அவருக்கே தயக்கமாக இருக்க, அது காதலுக்கும் மேலான புனிதம் என்றெல்லாம் சொன்னார். ஆனால், படம் அந்த நியாயத்தைத் […]
Read Moreநல்ல திரைக்கதைக்கு உதாரணம் முதல் காட்சி நம்மை நிமிர்ந்து உட்காரவும், படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்துக்குள் கதை பயணிக்கும் திசையை நாம் இனம் கண்டுகொள்ளவும் வேண்டும். அந்த வகையில் நடிகர் வெங்கட் போஸ் இயக்குநராகியிருக்கும் இந்தப்படம் முதல் காட்சியிலேயே கவர்கிறது. நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் கொலையாளியாக போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்திருக்க, அவர் ஏன், யாரை கொலை செய்தார் என்பது பிளாஷ்பேக்கில் சொல்லப்படுகிறது. அதில் வரும் முதல் காட்சியில் சென்னைக்கு அதிகாலையில் வந்திறங்கும் விஷ்ணு, சாயாதேவி […]
Read More