ஹாரர் படமோ என்று நினைக்க வைக்கும் ஆரம்பம்… முதல் காட்சியில் காட்டுக்குள் வரும் ஒரு கார் பயங்கரமான விபத்துக்குள்ளாகிறது. பின்னர் காட்டுக்குள் துரத்தப்படும் ஒரு இளம்பெண் ஒரு சக்தியால் தாக்கப்படுகிறார். அதே போல் காவல் அதிகாரி ஒருவரும் அதே காட்டுக்குள் அதே சக்தியால் தாக்கப்படுகிறார். இதைத் தொடர்ந்து தென்காசியில் இருந்து அருகில் உள்ள அந்தக் காட்டுப் பகுதிக்கு சுற்றுலா வரும் ஒரு காதல் ஜோடி அன்று இரவு அந்த நடுக்காட்டில் தங்குகின்றனர். அப்போதும் அதே சக்தி அவர்களைத் […]
Read Moreஆவிகளை வைத்துக் காமெடி படங்கள் எடுக்கப்படும் ட்ரெண்டில் முந்தி எடுக்கப்பட்ட படம் இது. ஆனால் பிந்தி வந்திருப்பதில் தலைப்பைப் போலவே ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற நிலை பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு தியேட்டரில் நடக்கும் அமானுஷ்யத்தைக் காட்டி முடிக்கிறார்கள். அதன் பின்னர் தற்போதைய நிகழ்வில் சத்தியமூர்த்தி, கோபி, சுதாகர் மற்றும் தனது நண்பர்களுடன் வசித்து வர. அவர்களில் இரண்டு பேர் இயக்குனர் ஆக முயற்சி செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் யாஷிகா ஆனந்த்தும், ஹரிஜாவும் ஐடி […]
Read Moreஇயக்குநர் பிரபுராம்.செ இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடிக்கும் படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’. வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபேவின்ஸ் பால் தயாரிக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நாயகன், நாயகியாக நடிப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம், ரொமான்ஸ் காமெடி ஜானரில் நகர்ப்புற பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் […]
Read Moreமதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் 80 களின் இறுதியில் நடக்கும் கதை. அங்கே ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த இரு பங்காளிக் குடும்பங்களுக்குள் வருடக் கணக்காக பகை இருந்து வருகிறது. அதுதான் களம். ஆனால், ஒரு காதல் கதையாக படம் நிறைவு பெறுகிறது. படத்தின் தலைப்புக்கு நியாயம் சேர்ப்பது போல், மதுரை மண்ணின் வட்டார வழக்கு அற்புதமாக படத்தில் கையாளப்பட்டிருக்கிறது. இதுவரை எவ்வளவோ படங்களை மதுரை வட்டார வழக்கில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த அளவுக்குத் துல்லியமாக […]
Read Moreஉருவக்கேலி செய்வது பொதுவான மனிதர்களின் இயல்பு. ஆனால் அங்கத்தைப் பார்க்காதீர்கள்… அவர்களின் அறிவைப் பாருங்கள் என்று அடித்துச் சொல்ல வருகிற படம். அதற்கேற்றாற் போல் மூன்றே அடி உயரம் உடைய கதாநாயகனை வைத்து முழு படத்தையும் முடித்திருக்கிறார் இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன். தென் தமிழ் மாவட்டத்தில் நடக்கிற கதை. அங்கே தபால்காரராக இருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அவருக்குப் பிறக்கும் இரண்டு குழந்தைகளில் பெண் குழந்தை இயல்பான உயரத்துடன் வளர, ஆண் குழந்தை மட்டும் குள்ளமாகவே வளர (?) அது […]
Read Moreதமிழ்நாட்டின் செஞ்சி பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் ஒருவர் புதையலைத் தேடி வர மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இப்படி ஆரம்பிக்கிறது படம். அவரைக் கொன்ற ஆயுதம் எது என்று தடயவியல் துறையாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அகழ்வாராய்ச்சித் துறையை சேர்ந்த அதிகாரியான நிழல்கள் ரவி, அகழ்வாராய்சியாளர் போஸ் வெங்கட் தலைமையில் ஒரு மாணவர் குழுவை அந்த இடத்துக்கு அகழ்வாராய்ச்சி செய்ய அனுப்பி வைக்கிறது. இரவில் அந்த ஊர் மக்கள் அந்தப் பகுதியில் நடமாடுவதைத் தவிர்த்து வந்திருக்க, ஒருவர் கொலையும் […]
Read Moreஅந்த ஊரின் பெயரே ‘மூத்த குடி’ என்கிறார்கள். அந்த ஊரின் ‘மூத்த குடி’யாக கே. ஆர். விஜயாவும், அவரது தம்பி ‘யார் கண்ணனு’ம் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லுக்கு அந்த ஊர் மக்கள் எல்லாம் கட்டுப்படுகிறார்கள். ஊருக்கு ஊர் அரசாங்கமே மதுபானக்கடைகளைத் திறந்து நடத்தும் இந்தக் காலகட்டத்தில் தொடங்குகிறது கதை. தங்களது ஊருக்குள் மதுபானக் கடை திறக்கப்பட கூடாது என்று ஊர்மக்களைத் திரட்டி உண்ணாவிரதம் இருக்கிறார் சரக்குட்டி என்கிற பெரியவர். ( அவர் பெயரிலேயே சரக்கு இருக்கிறதே என்று […]
Read More