April 23, 2024
  • April 23, 2024
Breaking News
October 19, 2019

கைதில நடிக்க கார்த்திக்கு நிறைய தைரியம் – நரேன்

By 0 647 Views

கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகும் ‘கைதி’ பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் டிரைலரை கொண்டாடி வருகின்றனர்.

‘அஞ்சாதே’ புகழ் நரேன் படத்தில் இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை டிரைலர் சொன்னது.

அவருடன் பேசியதிலிருந்து…

“நல்ல படத்திற்காக காத்திருந்தேன். நான் கடைசியாக நடித்த படம் ‘யூ டர்ன்’. அதற்குப் பிறகு அதர்வாவுடன் ‘ஒத்தைக்கு ஒத்தை’ படத்துல ஒரு கேரக்டர் நடிச்சிருக்கேன். சுசீந்தரன் சாரோட சாம்பியன் படத்தில நடிச்சுருக்கேன். இதுக்கிடையில் வந்த ‘கைதி’தான் பெரிய படம். எனக்கு ஒரு செகண்ட் இன்னிங்ஸ்ஸா இந்தப்படம் இருக்கும்னு தோணுது.

ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் போலீஸா இதுல வர்ரேன். கார்த்தியும் நானும் நெருக்கமான நண்பர்கள். பர்ஸனலா எல்லாமே பேசிப்போம். இயக்குநர் இந்தக் கேரக்டருக்கு என் பேர சொன்னவுடனே கார்த்தி நான் போன் பண்றேன்ன்னு சொல்லி கூப்பிட்டிருக்கார்.

‘அஞ்சாதே படத்துக்கப்புறம் நிறைய போலீஸ் கேரக்டர் அது மாதிரியே இருக்கும்னு நான் பண்ணல. இதுல எப்படி..?’னு கேட்டேன். ‘நல்ல கேரக்டர்…’னு சொன்னார். ‘நீங்க பண்றீங்களா..?’னு கேட்டேன் ‘ஆமா…’னு சொன்னார். உடனே நான் ஒத்துக்கிட்டேன்.

Naren

Naren

கார்த்தி ஒரு படத்த அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டார் அவர் இருக்கார். அப்புறம் டைரக்டர் லோகேஷோட மாநாகரம் நான் பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சது. லோகேஷ் கதை சொன்ன பத்து நிமிஷத்துல தெரிஞ்சுடுச்சு கண்டிப்பா சூப்பாரா இருக்கப்போகுதுனு.

படமே ஒரு ஆபரேஷன்ல தான் ஆரம்பிக்கும். பரபரனு ஓடிட்டே இருக்கும். ஒரு சிச்சுவேஷன்ல மாட்டிக்கிற நல்ல போலிஸ் எப்படி இருப்பான்.. அவ்வளவுதான். ரெண்டாவது அவனுக்கு அடி பட்டிருக்கும் நீங்க டிரெய்லர்ல பாத்திருப்பீங்க. அந்தக்கையோட அவன் என்ன பண்றான் அது தான் படம்.

முழுக்க நைட் ஷூட் தான். சென்னை தாண்டி செஙகல்பட்டு பக்கத்தில, அப்புறம் கேரளா பார்டர் வரைக்கும் ஷீட் பண்ணினோம். குளிர் தான் ரொம்ப புதுசா இருந்தது. ஒரு நாள் தூங்கலைனாலும் நமக்கு சோர்வா இருக்கும் தொடர்ந்து 40, 50 நாள்னா பார்த்துகங்க. ஆனா படத்திலேயும் அந்த கேரக்டர் சோர்வா இருக்கும் அதனால அத மெயிண்டைன் பண்ணிட்டேன். கார்த்தி கூட இருந்ததால ரொம்ப ஈஸியா இருந்துச்சு.

கார்த்திக்கு ஜோடி கிடையாது. எனக்குத் தெரிஞ்சு ஒரு பெரிய கமர்ஷியல் படத்தில ஹிரோயினே இல்லாத படம் இது தான். கார்த்திக்கு நிறைய தைரியம் வேணும் இப்படி படம் பண்ண.

ஷூட்ல கார்த்திகூட நிறைய பேசினேன். ஒன்னா இவ்வளவு நாள் கூட இருந்தது இந்தபடத்தால தான் நடந்தது. கார்த்தி ரொம்ப தெளிவா இருக்கார். என்ன பண்றோம்கிறது அவருக்கு தெரிஞ்சுருக்கு. அவரோட படங்கள பார்த்தாலே தெரியும். இந்தப்படத்தில அவருக்கும் எனக்கும் நிறைய காட்சிகள் இருக்கு. அதே மாதிரி அவருக்கு ஒரு எமோஷனல் பக்கம் இருக்கும் அதில சூப்பரா ஃபெர்ஃபார்ம் பண்ணிருக்காரு.

சினிமா மட்டுமே வாழ்க்கையா நேசிக்கிற ஒரு ஆள் லோகேஷ். அதைத் தவிர எதுவும் பேச மாட்டார். எப்பவும் வேலைதான். நான் ஒரு கமல் ஃபேன் அவர் என்னவிட பெரிய ஃபேன். நிறைய ஹாலிவுட் படம் பார்ப்பார். அதப்பத்தி பேசுவோம். வித்தியாசமா பண்ற அதே நேரத்தில இங்க இருக்க ஆடியன்ஸ்க்கு என்ன பண்ணனும்னு தெளிவு இருக்கார். அவர் பெரிய இடத்துக்கு போவாரு.

படம் எடுக்கும் போதே தெரியும் சூப்பரா வந்திருக்கு. முக்கியமான காரணம் கேமராமேன் சத்யன். முகமூடில அவர் கூட வேலை பார்த்திருக்கேன். இந்தப்படத்தில விஷுவலா மிரட்டிருக்கார். லோகேஷ், கார்த்தி எல்லாரும் டிஸ்கஸ் பண்ணி ஒவ்வொரு ஷாட்டையும் புதுசா முயற்சி பண்ணி எடுத்திருக்காங்க. இப்படிப்பட்ட டீம்ல இருந்ததே சந்தோஷம்தான்.

இந்த தீபாவளி கொண்டாட்டமா இருக்கும். கைதி கமர்ஷியல் படம்தான் ஆனா வித்தியாசமா இருக்கும் புதுசா இருக்கும். ‘பிகில்’, ‘கைதி’ ரெண்டும் பாருங்க பிடிக்கும்..!”