March 28, 2024
  • March 28, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அதர்வாவை மிரட்ட நந்தா… படப்பிடிப்பை மிரட்டிய கொரோனா
March 20, 2020

அதர்வாவை மிரட்ட நந்தா… படப்பிடிப்பை மிரட்டிய கொரோனா

By 0 644 Views

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். இயக்குநர்கள் பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர் இவர்.

இப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க, லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார், படத்தில் இருக்கும் வில்லன் பாட்த்திரத்துக்கான நீண்ட தேடலில் இருந்தார் இயக்குநர். 

சமீபத்தில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பான ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் இரட்டை வேடத்தில் மிரட்டலான நடிப்பை தந்திருந்தார் நந்தா. தற்போது மேற்படி திரில்லர் படத்தில் அதர்வாவை மிரட்டும் வில்லன் பாத்திரத்துக்கு நந்தா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

நந்தா எப்படி இதனுள் வந்தார் என்பது குறித்து இயக்குநர் ரவீந்தர மாதவ் கூறியது…

“இப்படம்  துவங்கப்பட்டபோதே படத்தில் இருக்கும் கனமான வில்லன் கதாபாத்திரம் குறித்து கூறியிருந்தேன். திரையில் அந்த கதாபாத்திரத்தினை உயிர்பிக்க திறமை வாய்ந்த ஒருவர் தேவைப்பட்டார். மிகச்சரியான ஒருவரை தேடுவதென்பது மிக நீண்ட பயணமாக இருந்தது. இறுதியாக அசாத்திய திறமை கொண்ட நடிகர் நந்தா எங்களுடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார்.

அனைவரையும் கவர்ந்திழுக்கும் அவர் நடிப்பிலும் சிறந்து விளங்குபவராக இருக்கிறார். எந்த ஒரு பாத்திரம் ஆனாலும் எளிதில் அந்த பாத்திரமாக மாறிவிடும் திறமை அவருக்கு இருக்கிறது. மேலும் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் வெறும் உடல் வலிமை மட்டும் கொண்டு செயல்படுபவன் அல்ல, மகா புத்திசாலித்தனமாக செயல்படுபவன்.

நடிகர் நந்தா ஏற்கனவே இந்த இரு தளங்களிலும் தன்னை நிரூபித்தவர். மகச்சிறந்த நடிகர்கள் படத்தில் இணைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் இணைந்து பணிபுரிய வெகு ஆவலுடன் காத்திருக்கிறோம். கொரோனா வைரஸ் பாதிப்புகள் முடிந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது..!”

அதான்… கொரோனா உலகத்தையே மிரட்டிடுச்சே..?