June 30, 2025
  • June 30, 2025
Breaking News
June 25, 2025

காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தும் ‘ஜீவன் செயல்திட்டம்..!’

By 0 25 Views

வசதியற்ற, தேவையில் உள்ள குழந்தைகளுக்கு இலவச முதுகுத்தண்டு அறுவைசிகிச்சைகளை வழங்க மித்ரா ரோட்டரி கிளப்-ன் ஒத்துழைப்போடு செயல்படுத்துகிறது..!

சென்னை, 24 ஜூன் 2025: இந்நாட்டில் பன்முக சிறப்பு பிரிவுகளுடன் உயர்சிகிச்சை வழங்குவதில் பிரபலமான காவேரி மருத்துவமனை பிறவி குறைபாடான முதுகுத்தண்டு சீர்குலைவுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு முதுகுத்தண்டு பிரச்சனைகளை சரிசெய்யும் அறுவைசிகிச்சைகளை குறைந்த கட்டணத்திலும் மற்றும் இலவசமாகவும் வழங்குவதற்கான ஒரு விரிவான முன்னெடுப்பு திட்டத்தை பிராஜெக்ட் ஜீவன் செயல்திட்டம் என்ற பெயரில் தொடங்கியிருக்கிறது. மித்ரா ரோட்டரி கிளப் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மற்றொரு ரோட்டரி கிளப்-ன் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்போடு இச்செயல்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. முள்ளந்தண்டு பிளவு, வடவுறைப்பிதுக்கம், இணைக்கப்பட்ட வட நோய்க்குறி, பக்க வளைவு மற்றும் தண்டுவடக் கழலைகள் போன்ற பாதிப்புகளால் அவதியுறும் வசதியற்ற சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அவர்களது வாழ்க்கையையே மாற்றி மேம்படுத்துகின்ற அறுவைசிகிச்சையை சாத்தியமாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். சிக்கல் நிறைந்த இந்த மருத்துவச் செயல்முறைகள் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்டது.

ரோட்டரி பவுண்டேஷன் மற்றும் பங்கேற்கும் ரோட்டரி கிளப்கள் வழியாக திரட்டப்பட்டிருக்கும் ரூ. 85 இலட்சம் என்ற நிதி உதவியின் ஆதரவோடு இந்த முன்னெடுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் முதல் கட்டத்தில் எவ்வித கட்டணமோ, செலவோ இன்றி குறைந்தது 35 குழந்தைகளுக்கு முதுகுத்தண்டு பிரச்சனைகளை சரிசெய்வதற்கான அறுவைசிகிச்சைகள் ஜீவன் செயல்திட்டத்தின் கீழ் செய்யப்படும். ரோட்டரி கிளப்களுடன் இணைந்து இதற்கு முன்பு நடத்தப்பட்ட வெற்றிகரமான ஒத்துழைப்பின் கீழ் 100-க்கும் அதிகமான இத்தகைய அறுவைசிகிச்சைகள் கட்டணமின்றி இலவசமாக குழந்தைகளுக்கு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

“இந்த குழந்தைகளுள் பலர், குறைபிரசவத்தில் உரிய காலத்திற்கு முன்பே பிறந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள். உரிய நேரத்திற்குள் சிறப்பு சிகிச்சை இக்குழந்தைகளுக்கு வழங்கப்படாவிட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்களை பாதிக்கிற ஊனம்/திறனிழப்பு அல்லது உயிரிழப்பை இக்குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஜீவன் செயல்திட்டத்தின் வழியாக இக்குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவதுடன் இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை இவர்கள் நடத்துவதற்கு உதவுவதும் எமது நோக்கமாகும். இத்தகைய அறுவைசிகிச்சைகள் மிகவும் நுட்பமானவை; இவற்றை செய்வதற்கு நல்ல ஒருங்கிணைப்புள்ள மருத்துவர்கள் குழு தேவைப்படுகிறது. இச்சிகிச்சைகளின் மூலம் சாத்தியமுள்ள மிகச் சிறந்த விளைவுகளை வழங்குவதற்கு காவேரி மருத்துவமனை முழுமையான வசதிகளையும் தொழில்நுட்ப சாதனங்களையும் கொண்டிருக்கிறது” என்று காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும் & செயலாக்க இயக்குநருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறினார்.

தென்னிந்தியாவில் உயிருடன் பிறக்கும் ஒவ்வொரு 1000 குழந்தைகளில் 10 முதல் 15 குழந்தைகளுக்கு நரம்புக் குழல் குறைபாடுகள் இருப்பதும் மற்றும் குறைந்த வருவாய் உள்ள பின்புலங்களைச் சேர்ந்த குழந்தைகள் மிக அதிக அளவில் இதனால் பாதிக்கப்படுவதும் பிராஜெக்ட் ஜீவன் உருவாக்கப்பட்டது. அறுவைசிகிச்சையின் மூலம் இக்குறைபாட்டை முறையாக சரிசெய்யாவிட்டால், கடுமையான ஊனங்களுடன் இக்குழந்தைகள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும்; அக்குடும்பங்கள் மட்டுமன்றி சமூகங்கள் மீதும் உணர்வு ரீதியான மற்றும் நிதி சார்ந்த பெரும் சுமையை இது சுமத்தும்

“சரியான நேரத்தில் செய்யப்படும் சரியான இடையீட்டு சிகிச்சையின் மூலம் இக்குழந்தைகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும். இந்த முன்னெடுப்பானது வெறுமனே அறுவைசிகிச்சைகள் குறித்தது மட்டுமல்ல; ஒவ்வொரு குழந்தையும் பெறுவதற்கு தகுதியுள்ள சிறப்பான எதிர்காலம், கண்ணியம் மற்றும் சாத்தியத்திறனை அவர்கள் பெறுமாறு செய்வதே இதன் நோக்கமாகும்” என்று டாக்டர். G பாலமுரளி மேலும் விளக்கமளித்தார். 

இச்செயல்திட்டத்தில் பல களப்பணி மற்றும் விழிப்புணர்வுக்கான கல்வி நடவடிக்கைகளும் உள்ளடங்கும். பிறக்கும்போது முதுகுத்தண்டு குறைபாடுகள் இருப்பதை பிரசவத்திற்கு முன்பு ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதை மேம்படுத்த சோனாலஜிஸ்ட்களுக்கான (ஒலியியல் நிபுணர்கள்) பயிற்சி திட்டமும் இதில் உள்ளடங்கும். இப்பகுதியில் குழந்தைகளுக்கான முதுகுத்தண்டு சிகிச்சை பராமரிப்பை வலுப்படுத்த பிறவிக் கோளாறுகள் ஏற்படாமல் தடுப்பது மீது கருவுற்ற தாய்மார்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களும், அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கும், செவிலியர்களுக்கும் திறன் மேம்பாடு பயிலரங்குகளும் இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும். 

மேலும் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் இத்திட்டம் பற்றி பேசும்போது “காவேரி மருத்துவமனை, 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக மேம்பட்ட நவீன சிகிச்சை பராமரிப்பை வழங்குவதில் முன்னணியில் இருந்து வருகிறது. நிதி வசதி இல்லாத காரணத்தால் உயிர்காக்கும் சிகிச்சை எந்த குழந்தைக்கும் மறுக்கப்படக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். மித்ரா நோட்டரி கிளப் உடனான எமது கூட்டாண்மை, மிக அவசியமாக தேவைப்படும் குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை வசதி கிடைப்பதை உறுதி செய்கிறது. மேலும் முதுகுத்தண்டு மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். G பாலமுரளி அவர்களின் சிறப்பான சேவைக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். 

மித்ரா ரோட்டரி கிளப்-ன் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் சரவணன் பேசுகையில், “ஜீவன் செயல்திட்டம் என்பது அர்த்தமுள்ள நடவடிக்கை வழியாக குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நோட்டரி பவுண்டேஷனுக்கும் மற்றும் பெங்களூரில் உள்ள எமது பார்ட்னர் கிளப்-க்கும் அவர்களின் மதிப்புமிக்க ஆதரவுக்காக எமது நெஞ்சார்ந்த நன்றியை இத்தருணத்தில் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

ஜீவன் செயல்திட்டம் மூலம் அதிகம் பாதிக்கக்கூடிய நிலையிலுள்ள வசதியற்ற, பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவது என்பதையும் கடந்து அவர்களின் வாழ்க்கையை மேம்பட மாற்றியமைக்கும் திட்டத்தை காவேரி மருத்துவமனை மேற்கொள்கிறது. ஆரோக்கியம் என்ற வெகுமதியை வழங்குவதோடு, சாதிக்கும் சாத்தியங்கள் நிறைந்த நல்ல எதிர்காலத்திற்கான வாக்குறுதியையும் இக்குழந்தைகளுக்கு வழங்குகிற ஒரு ஆத்மார்த்தமான செயல்திட்டம் இது. செய்யப்படும் ஒவ்வொரு அறுவைசிகிச்சையும் வலி, கட்டுப்பாடுகள் மற்றும் அச்சத்திலிருந்து விடுபட்டு ஒவ்வொரு குழந்தையும் பெறுவதற்கு தகுதியான நம்பிக்கை, கண்ணியம் மற்றும் சிறந்த வாழ்க்கை என்ற இலக்கை நோக்கிய ஒரு முன்னேற்ற நடவடிக்கையாகும். இந்த உன்னதமான முனைப்பு திட்டத்தின் மூலம் கனிவும், அக்கறையான பராமரிப்பும் வாழ்க்கையின் போக்கையே மாற்றும் திறன் கொண்டது என்று நமக்கு நினைவூட்டும் விதத்தில் குணமாக்கலுக்கான ஒரு வலுவான தூணாக காவேரி மருத்துவமனை தலைநிமிர்ந்து நிற்கிறது.