August 7, 2026
  • August 7, 2026
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

தெலங்கானாவில் அதிக விலை திரையரங்குகளுக்கு அபராதம், சிறைத் தண்டனை

by by Jul 30, 2018 0

இப்போதைய சினிமா ரசிகர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதே திரையரங்குக் கட்டணம்தான். டிக்கெட் கட்டணத்தைவிட கேன்டீன் பொருள்கள் திரையரங்குகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதுதான் அநியாயயமாக இருக்கிறது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதே இல்லை.

ஆனால், இப்படி தாறுமாறான விலையில் தியேட்டர்களில் பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க பல்வேறு விதிமுறைகளை விதித்து தெலங்கானா மாநிலத்தின் திரையரங்க கண்காணிப்பு ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கு மேல் உணவுப்பொருட்களை விற்றால் அதற்கு அபராதம், சிறை தண்டனை…

Read More

பாரம்பரிய இசையில் சரித்திரம் படைக்கும் ரமேஷ் வினாயகம் – அருணா சாய்ராம் புகழாரம்

by by Jul 18, 2018 0

தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய இசை அறிந்த இசையமைப்பாளர்களில் ரமேஷ் வினாயகமும் ஒருவர். திரையிசை தாண்டி கர்நாடக இசை எனப்படும் நம் பாரம்பரிய இசையில் நல்ல அனுபவமும், தேர்ச்சியும் பெற்றவர்.

அவர் வெறும் இசையமைப்பாளர் மட்டுமல்லாமல் நல்ல பாடகர் இசை பயிற்றுவிக்கும் ஆசிரியர் மற்றும் ஒரு இசை ஆராய்ச்சியாளர் ஆவார். 
தமிழ் தவிர ஒரு ஹாலிவுட் திரைப்படத்திற்கு (பென் கிங்க்ஸ்லீ நடித்த ‘A Common Man’) இசையமைத்திருக்கும் இவர் இந்திய பாரம்பரிய இசைக்கு notation எனும் இசை…

Read More

செரினாவை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை வென்ற கெர்பர்

by by Jul 14, 2018 0

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடைபெற்றது.

இதில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய கெர்பர் முதல் செட்டை 6-3 என்ற நிலையில் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டிலும் கெர்பரின் கை ஓங்கியே இருந்தது. அதிரடியாக விளையாடிய கெர்பரின் ஆட்டத்துக்கு செரினா வில்லியம்சால் ஈடுகொடுக்க முடியவில்லை. இரண்டாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கெர்பர் கைப்பற்றினார்.

இரண்டு நாஎர்…

Read More

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்தது

by by Jul 9, 2018 0

2012 டிசம்பர் 16-ந் தேதி இரவில் தலைநகர் டெல்லியில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பஸ்சில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட ஆறு பேரில் முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்து கொள்ள, மற்றொருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனை பெற்றான்.

மற்ற நான்கு குற்றவாளிகள் முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதன்பின், மேல்முறையீட்டில் இந்த தண்டனையை…

Read More

தர்மபுரி பஸ் எரிப்பு, நாவரசு கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய பரிசீலனை

by by Jul 8, 2018 0

எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி நீண்டகாலம் ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்து வரும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் அதற்குத் தகுதியான கைதிகள் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அ.தி.மு.க.வினர் நெடுஞ்செழியன், மது, முனியப்பன் ஆகியோர் கடந்த 18 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதால அவர்களை விடுவிக்க ஆலோசனை நடந்து வருகிறது.

2000 ஆம் ஆண்டு இவர்கள்…

Read More

அரசு ஆணைக்கு எதிராக ஸ்டெர்லைட் கேட்ட இடைக்கால தடைக்கு பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு

by by Jul 5, 2018 0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம், போலீஸாரின் துப்பாக்கிச்சூடு என்று தொடர்ந்ததில் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியாது என்று தமிழக அரசு சார்பில் சொல்லப்பட்டது.

ஆனால், இந்த அரசாணையை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டத்துக்குப் புறம்பானது. ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம்…

Read More

அறிஞர் அண்ணாவை நீங்கள் எம்.ஜி.ஆர் கட்சியா என்றார்கள் – சைதை துரைசாமி

by by Jul 1, 2018 0

‘உலக எம்.ஜி.ஆர் பேரவை’ பிரதிநிதிகள் இணைந்து நடத்தும் மாநாடு மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 15ஆம் தேதி சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

விழா பற்றிய தகவல்களை வெளியிடும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உலக எம்ஜிஆர் பேரவை முக்கிய பிரதிநிதிகளான முருகு பத்மநாபன், சைதை துரைசாமி, ஐசரி கணேஷ், நடிகை லதா கலந்து கொண்டு பேசினர்.

முருகு பத்மநாபன் –

“கடந்த ஆண்டு ஃபிரான்ஸில் எம்.ஜி.ஆர் பக்தர்களின் மாநாடு நடத்தினோம். அதில் சைதை…

Read More

ஜூலை 20 முதல் 68 லட்சம் லாரிகள் ஓடாது..!

by by Jun 30, 2018 0

தென் மாநில மோட்டார் போக்குவரத்து உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் வரும் ஜூலை 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.சண்முகப்பா கூறியதிலிருந்து…

“சுங்கச் சாவடிகளை முற்றிலும் அகற்ற வேண்டும். நாடு முழுவதும் இயங்கும் 68 லட்சம் லாரிகளுக்கு ஒரு லாரிக்கு ரூ.50 ஆயிரம் வீதம் சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் நாங்கள் செலுத்துவதாக கூறுகிறோம். இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்காமல் உள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே மூன்று…

Read More

எலைட் குடிமகன்களுக்கு இடி விழும் செய்தி

by by Jun 28, 2018 0

நேற்று (27-06-2018) மாலை 4.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடியது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட அனைத்து அமைச்சர்களுடன் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், வணிக வரித்துறை செயலாளர் பாலச்சந்திரன், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிரிலோஷ்குமார் ஆகியோரும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறையைக் குறைத்து வருவாயை அதிகரிக்கவும், வெளிநாட்டு இறக்குமதி மதுக்களுக்கான ஆயத்தீர்வையை அதிகரிப்பது…

Read More

பிக் பாஸ் 2 விவகாரம் – பெப்ஸி போராட்ட அறிவிப்புக்கு கமல் ஒத்துழைப்பாரா?

by by Jun 24, 2018 0

இப்போது எண்டமால் நிறுவனம் தயாரித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் பெப்ஸி தொழிலாளர்கள் குறைந்த அளவே பயன்படுத்தப்படுவதால் அவர்களை நிறுத்திக் கொண்டு இதன்மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று ‘பெப்ஸி’ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பெப்ஸி கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது…

“பிக் பாஸ் முதல் சீசன் நடந்தபோதே அதில் பெப்ஸி தொழிலாளர்களை வேலைக்கு வைக்காமல் மும்பை தொழிலாளர்களை வைத்தே வேலைகள் நடந்தன….

Read More