பைரசி தியேட்டர் மீதான தனிநபர் போராட்டம் வெல்லுமா..?
நெல் ஜெயராமனின் சிகிச்சை செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்
இயற்கை வேளாண் துறையில் முக்கியமாக அறியப்படும் ஓரு பெயர் ‘நெல் ஜெயராமன்’. பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிக்கும் இவர் 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டறிந்து அவற்றை இயற்கை முறை விவசாயத்தில் பெருக்கி பிற விவசாயிகளும் பயன் பெறும் விதத்தில் பயிற்சியும் அளித்து வருபவர்.
ஆனால், சமூகம் போலவே இயற்கையும் அவரை வஞ்சித்துவிட கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடும் புற்றுநோயுடன் போராடி வருகிறார்….
Read Moreஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப்படுகிறாரா – கோர்ட்டில் முன் ஜாமீன் மனு
‘சர்கார்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிக்ளை நீக்க வேண்டுமென்று ஆளும் கட்சியினர் போராட்டங்களை நடத்துவதைத் தொடர்ந்து அந்தக் காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் மீடியாக்களிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால், இது குறித்து சர்கார் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்தோ, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் தரப்பிலிருந்தோ எந்த விளக்கமும் இல்லை.
ஆனால், சர்காருக்கு எதிரான போராட்டங்கள் குறித்து கமலும், ரஜினியும் தணிக்கை செய்யப்பட்ட படத்தின் மீதான போராட்டங்கள் தேவையில்லை என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் இன்று காலை முதலே…
Read Moreசர்கார் படத்துடன் கூடிய ஹர்பஜன் சிங்கின் தமிழ் தீபாவளி வாழ்த்து
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் தமிழ் ரசனை பற்றியும் அவரது தமிழ் ட்வீட்டுகளையும் தமிழகம் நன்றாகவே அறியும்.
இந்நிலையில் இன்று இந்தியாவெங்கும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினாலும் தமிழ் நாட்டு மக்களுக்காக தமிழில் தீபாவளி வாழ்த்துச் சொல்லி ட்வீட் செய்திருக்கிறார் ஹர்பஜன்.
அதில் சர்க்கார் படத்தையும் சேர்த்துக்கொண்டு அதில் வாழ்த்தியிருப்பதுதான் ஹைலைட். அந்த ட்வீட் கீழே…
#தீபாவளி திருநாள் வாழ்த்துகள் தமிழ் உறவுகளே.புத்தாடையுடன் புன்னகையும் இனிப்புடன் மகிழ்ச்சியும் பரிமாறும் முன்னே சரவெடியோடு ஆரம்பமாகும் #தீபஒளி ஆனந்தம்.செந்தமிழ் தரணியெங்கும் #விவசாயம்…
Read Moreஓவியா திறக்கும் சீரமைக்கப்பட்ட அரசுப் பள்ளிகள்..!
அரசாங்கத்தோடு இணைந்து மக்களும் தரம் உயர்த்தினால்தான் பள்ளிகளில் படிக்கும் மாணவர் மாணவிகள் நல்ல கல்வியை கற்க முடியும்.
இதை வலியுறுத்தி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விட்டிருந்தார். அரசாங்க பள்ளிகளில் படித்த முன்னாள் மாண மாணவிகள் பள்ளிகளை தத்தெடுத்து சீரமைத்து தந்தால் உதவியாக இருக்கும் என்று அவர் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
அதை கேட்ட ராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். பழைய கட்டிடமாக…
Read Moreபாலியல் தொல்லை – அர்ஜுன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்கு
அர்ஜூன் கதாநாயகனாக நடித்த ‘விஸ்மயா’ (தமிழில் நிபுணன்) படத்தில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ருதி ஹரிஹரன் கதாநாயகியாக நடித்தார். படப்பிடிப்பின் போது அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ‘மீ டூ’ தொடர்பாக பாலியல் புகார் கூறினார்.
அந்தப் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து இருந்ததுடன் தான் திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், குற்றம்சாட்டிய நடிகை ஸ்ருதி ஹரிஹரனுக்கு எதிராக பெங்களூர் நகர் சிவில்…
Read Moreதியாகராஜனின் அதிரடி அறிவிப்பும், பிரித்திகா மேனனின் எதிர்வினையும்
தொடர்ந்து வரும் ‘மீ டூ’ புகார்களில் நேற்றைய செய்திகளில் நடிகரும், தயாரிப்பாளர் – இயக்குநருமான தியாகராஜனையும் குற்றம் சாட்டியிருந்தார் பிரித்திகா மேனன் என்ற புகைப்படக் கலைஞர்.
இந்த விவகாரத்தில், “என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை, குற்றம் சாட்டிய பெண் எங்கள் யூனிட்டில் இஅரண்டு நாள்கள்தான் வேலை செய்தார். மூன்றாம் நாள் உடல்நிலை சரியில்லை என்று வெளியேறிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை சமூக வலைத்தளப்பக்கங்கள் முடங்கியுள்ளன. அவர்மீது சட்டப்பூர்வமாக அவதூறு வழக்குத் தொடுப்பேன்…” என்று…
Read Moreநெல் ஜெயராமன் குறித்த நடிகர் கார்த்தியின் நெகிழ்ச்சிக் கடிதம் – தவிர்க்காமல் படியுங்கள்
“திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தான் பிறந்த ஆதிரெங்கம் கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வழித்தோன்றலாய் இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி யானைக்கவுனி, கருங்குருணை உள்ளிட்ட150-க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்து அதனைத் தனது பண்ணையில் விளைவித்து வந்தார்.
ஆண்டுக்கொரு முறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் பல்வேறு ஆய்வாளர்களைப் பங்கேற்க செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி…
Read Moreஇந்த உலகம் பொறுக்கிகளுக்கு உகந்தது – லீனா மணிமேகலைக்கு சுசி கணேசன் பதில்
‘மீ டூ’ பதிவுகள் வலுப்பெற்ற பிறகு பிரபல பெண் கவிஞரும், டாகுமென்டரி பட இயக்குநருமான லீனா மணிமேகலை சமீபத்தில் தனக்கு ஒரு இளம் இயக்குநரிடம் இருந்து 2005-ல் அவரது காரில் வைத்து பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாகவும், கத்தியைக் காட்டி அதிலிருந்து மீண்டதாகவும் பதிவிட்டிருந்தார்.
பிறகு அந்த இயக்குநர் சுசி கணேசன்தான் என்று கூற, வெகுண்டெழுந்த சுசி கணேசன் அந்தக் குற்றச்சாட்டுக்கு முகநூலில் கீழ்வருமாறு பதிவிட்டிருக்கிறார்.
“லீனா மணிமேகலை- உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. சேற்றில் உருளும்…
Read Moreநான் நல்லவனா கெட்டவனா என்று இப்போது முடிவெடுக்காதீர்கள் – வைரமுத்து
நாடெங்கும் புயல் வீசிக்கொண்டிருக்கும் ‘மி டூ’ விவகாரத்தில் சமீபத்தில் கவியரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி தொடுத்திருந்த பாலியல் குற்ற ச்சாட்டுகள் கவிஞரைப் பார்த்து ‘யூ டூ..?’ என்ற கேள்வியை முன்வைத்தது.