கொரோனா பாதித்த கோலிவுட் பிரபலங்களில் நடிகை ரோகிணியும் ஒருவர். இப்போது தொற்றிலிருந்து மீண்டு விட்டார் என்றாலும் எப்படி மீண்டேன் என்பதை நெகிழ்ச்சியான ஒரு பதிவாக இட்டு இருக்கிறார் அவர். அது கீழே…
“இன்றுவரை இதை எழுதும் மனநிலையில் இல்லாமலிருந்தேன். ஆனால் பலரின் மருத்துவமனை அனுபவங்கள் வாசித்தபோது மௌனம் பாலிக்க இயலவில்லை.
27ஆம் தேதி எனக்கு கோவிட் பாசிட்டிவ் என்று வந்தது. இருமல், காய்ச்சலுடன் துவங்கியது.
மூன்று நாட்கள் காய்ச்சலுக்கு மருந்தும், ஆவி எடுப்பது, நல்ல உணவு, கபசுரக்குடிநீர் என பார்த்தேன்….
சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் ‘ப்ளூ சட்டை’ மாறன் முதன்முறை கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் “ஆன்டி இண்டியன்”.
2021 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்சார் குழுவினர் இத்திரைப்படத்தை பார்த்தனர்.
ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் ‘ஆன்டி இண்டியன்’ படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்தனர்.
அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி என்று சொல்லப்படும் மறு தணிக்கைக்கு இப்படம் அனுப்பப்பட்டது. பெங்களூரில் பிரபல…
Read Moreதமிழ் சினிமாவில் இரட்டை இயக்குனர்களாக பயணித்து வருபவர்கள் ஜேடி ஜெர்ரி. சினிமாவின் தொழில்நுட்பம் தெரிந்த இவர்களை மற்ற சினிமா இயக்குனர்களும் தங்கள் படங்களில் பயன்படுத்திக் கொள்வதுண்டு.
இந்நிலையில் இந்த இருவரில் ஜெர்ரியின் தாயாரான சூசையம்மாள் இன்று காலை கொடைக்கானலில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 78.
அதேபோல பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின தாயாரான எஸ்.முத்துலஷமி இன்று சென்னையில் வயது மூப்பின் காரணமாக மரணமடைந்தார். அவருக்கு…
Read Moreநினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் தினசரி ஒன்று இன்று நம்மைச் சுற்றி மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன இந்தவாரம் அதுவே ஒன்றுக்கு மேற்பட்ட மரணங்கள் ஒரேநாளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
கோலிவுட்டை பொறுத்த வரையில் கொரோனா மரணம் தினசரி நிகழ்வாகவே இருந்து வருகிறது.
யாருமே எதிர் பார்க்காத நிலையில் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா இன்று…
Read Moreதென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி. எஸ்.முருகன் முன்னணி நடிக, நடிகைகளுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது,
‘முன்னணி நடிக, நடிகைகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்…
வணக்கம்.
திரைத்துறையினருக்கு இது கடுமையான சோதனைக்காலம். கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு சுமார் 8 மாதங்கள் பணிகள் எதுவும் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர்.
குறிப்பாக 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 80 சதவீதம் பேர் வறுமைகோட்டுக்கு கீழ் இருந்துக்கொண்டு அன்றாட வருமானத்தை…
Read More‘பப்ளிக் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உலா வரும் வழக்கறிஞர் துரை சுதாகர் நடித்துள்ள படம் “நான் ஒரு முட்டாள்”.
இந்த படத்துக்காக முதல் முறையாக துரை சுதாகரே பாடகர் அவதாரம் எடுத்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
இப்படம் குறித்து அவர், ” இது இன்றைய தலைமுறையின் ஒரு குடும்பஸ்தனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயார் ஆகி இருக்கிறது. பொதுவாக இப்போதைய ட்ரெண்டாகி விட்ட மதுப்பழக்கத்தால் கல்லீரல் , கணையம் போன்ற உடல் உறுப்புகள் கெட்டுப்போகும் என்பது எல்லோருக்கும் தெரியும்…
Read Moreமறைந்த பிரபல திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான தேனாண்டாள் பிலிம்ஸ் ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமி.
இவரும் பிரபல தயாரிப்பாளர் ஆவார். தேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் என்ற பெயரில் பிரமாண்ட படங்களை தயாரித்து வருகிறார். விஜய் நடித்த மெர்சல் படத்தைத் தயாரித்தவர் இவர்தான்.
இவருக்கு இன்று லேசான மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு அப்போது கண்டறியப்பட்ட ரத்த நாள அடைப்பு இன்று இரவு நடந்த ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் சரி செய்யப்பட்டது.
இப்போது அவர் நலமுடன்…
Read Moreஅன்றாடம் ஒரு சினிமா பிரபலம் இறந்து வருவது கோலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இன்று மாலை பிரபல காமெடி நடிகர் நெல்லை சிவா மரணமடைந்தார்.
வடிவேலின் கிணத்தை காணும் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்த நெல்லை சிவா பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். சில வருடங்களுக்கு முன் வெளியான பாபநாசம் படத்திலும் கூட நெல்லை சிவா நடித்து இருந்தார்
இப்போது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சொந்த ஊரான திருநெல்வேலியில் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது….
Read Moreசமீபத்தில் கொரோனா தொற்று காரணமாக தன்னுடைய எதிர்மறை செய்திகளை பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகர் மன்சூர் அலிகான். கொரோனா என்னும் நோயே இல்லை என்பது இவர் வாதம்.
இந் நிலையில் அவருக்கு இன்று திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு முதலில் கொரானா இருக்கிறதா என்று கண்டறியும் சோதனை செய்தார்கள். நல்லவேளையாக அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
பிறகு அவருக்கு நோய் கண்டறியும் சிகிச்சையில் அவரது…
Read More