சசிகலா நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் – பிப் முதல்வாரம் சென்னை வருகை
சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது
எனக்கும் என் மகளுக்கும் பெயர் சூட்டியது அம்மாதான் – ஒரு எம்.பியின் இனிய நினைவு
1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறார் அந்த நபர்.
தன் மனைவியை அழைத்துக் கொண்டு, கைக்குழந்தையோடு ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்று தன் குழந்தைக்கு நீங்கள்தான் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.
ஜெயலலிதா அப்போது குழந்தையை வாங்கி முத்தம் கொடுத்து,உச்சிமுகர்ந்து ஜெயவர்தன் என்று பெயரிடுகிறார்.இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்தக் குழந்தையின்…
Read Moreஎங்கள் தேர்தல் திட்டங்களைப் போல் ஆசியாவில் யாரும் வகுக்கவில்லை – கமல்
தேர்தலுக்காக நாங்கள் வகுத்துள்ள திட்டங்களை ஆசியாவில் வேறு எந்த கட்சியும் வகுக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
ஐந்தாம்கட்டமாக கோவையில் நடைபெறும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மசக்காளிபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:
“நமது வெற்றிக்கு ஆதரவாக செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். இது சினிமாக்காரனைப் பார்ப்பதற்காக கூடும் கூட்டம் என சிலர் சொல்கிரார்கள். ஆனால், அது பொய் என்பது மக்களுக்குத் தெரியும். அதை தேர்தலில்…
Read Moreஅச்சம் இருந்தால் தியேட்டருக்கு வராதீர்கள் – குஷ்பூ செய்தி
நடிகையும், பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கமெண்ட்…
“தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படம் திரையிட அனுமதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் மிக்க நன்றி.
இதன்மூலம் அதிக அளவு பொருளாதாரத்தை உருவாக்கும் துறையான திரைத்துறை நன்றாக செழிக்கும். பொழுதுபோக்கை மீண்டும் தரும்.
பாதுகாப்பு குறித்து கவலைப்படுபவர்களுக்கு ஒரு அறிவுரை, திரையரங்குகளால் பெரிய அளவில் தொற்று ஏற்படவில்லை. எனெனில் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தியேட்டர்களுக்கு வருபவர்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மையான பொறுப்பு.
அச்சம் இருந்தால்…
Read Moreகமல்ஹாசன் அரசியலில் ஜீரோ – எடப்பாடி பழனிச்சாமி தாக்கு
தமிழக சட்டசபை தேர்தல் 2021 இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அரசின் சாதனைகளை விளக்கினார்
அதிமுக ஆட்சியில் சென்னையில் 86 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது
சென்னைக்கு அதிமுக எதுவும் செய்யவில்லை என்பது பொய்யான அறிக்கை வெளியிட்டார் மா.சுப்பிரமணியம்
ஸ்டாலின்…
Read Moreஅதிமுகவின் கொடிகாத்த அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்!
எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் வடசென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாட்டின் பேரில் நிகழ்ச்சிகள் நடந்தன.
ஒரே நாளில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகம் கட்சி நிர்வாகிகள் பலருக்கும் ஏற்பட்டிருந்த நிலையில் காரில் வந்தால் சரிப்பட்டு வராது,நேரத்திற்கு செல்ல…
Read Moreஅதிமுக மாநில மீனவர் அணி செயலாளர் நீலாங்கரை முனுசாமி அமமுகவில் இணைந்தார்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பணியை தொடங்கி விட்டனர்.
இந்த சூழலில் கட்சிகளுக்கிடையே கட்சி தாவல் என்பது மிகவும் சாதாரணமான ஒன்று தான்.
ஆனால் இன்று அதிரடி செய்தியாக அதிமுக மாநில மீனவர் அணி செயலாளர் நீலாங்கரை முனுசாமி அதிமுக கட்சியிலிருந்து விலகி தினகரனின் அ.ம.மு.க வில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை மர்மத்தையும் ஏற்படுத்தி உள்ளதாம் .
இந்த முனுசாமி அதிமுக-வின் ஸ்போக் மேனாக வலம் வரும்…
Read Moreபலப்படுத்தப் படும் ரஜினி மக்கள் மன்றம்
அரசியல் கட்சி அறிவிப்புக்கு பிறகு ரஜினி தன் மக்கள் மன்றத்தை பலப்படுத்தும் பணியில் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறாராம்.
“போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என தனது அரசியல் வருகை பற்றி அவர் ஏற்கனவே கூறியது போல் வரும் தேர்தலில் தனது கட்சி போட்டியிடுவதை போர் புரியும் தோற்றம் ஏற்படுத்த பார்க்கிறாராம்.
அந்த காரணத்தாலேயே வரும் தேர்தலில் தனது கட்சியை பலப்படுத்த அதிதீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறாராம்.
அந்த வகையில் ரஜினியின் தீவிர ரசிகரும், அவரின் ரசிகர் மன்ற தூண்…
Read Moreவரி இல்லா தமிழகம் – இலவச தண்ணீர், மருத்துவம், கல்விக்கு வழிவகுக்கும் மை இந்தியா பார்ட்டி
இந்தியாவின் முன்னணி நிறுவனமான எஸ்எல்ஓ குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அணில் குமார் ஓஜா, தொழில்துறை மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
புல்லாதேவி அறக்கட்டளையின் அறங்காவலரான அணில் குமார் ஓஜா, இந்த அறக்கட்டளையின் மூலம் மக்களுக்கு பெரும் தொண்டாற்றி வருகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றம் மற்றும் கல்விச் சேவையில் பல காலம் தொண்டாற்றி வருகிறார்.
தமது தொழிலில் மாற்றத்தை கொண்டுவந்து முன்னேற்றத்தை கண்ட அணில் குமார் ஓஜா, தற்போது அதே முன்னேற்றத்தை தமிழகத்திலும் ஏற்படுத்தி, தமிழ்நாட்டையும் தமிழக…
Read More