தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்கள் விபரம்
தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி – கமல் கடும் தாக்கு
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில் மே 7ஆம் தேதி தமிழக அரசு. டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்தது.
மாநிலம் முழுவதும் இதற்கு எதிர்ப்புகள் எழுந்த்துடன் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.
இதன் விளைவாக டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட் உத்தரவிட, இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறை செய்துள்ளது தமிழக அரசு.
இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வரும நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன்…
Read Moreஇந்த ஆட்சியின் முடிவு அசிங்கமாகாமல் இருக்க சிறிய வாய்ப்பு – கமல் காட்டம்
தமிழர்காள் வணக்கம்.
ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன்?
ஓட்டுக்கு காசு வாங்கி, 5 வருடம் நம் வாழ்வை இவர்களுக்கு குத்தகைக்கு விட்டோமே அதன் விளைவு தான்.
பஞ்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மதுக்கடைகளை திறந்து விட்டால் மக்களின் கவனம் திரும்பிவிடும் என நம்பும் அரசுக்கு பெயர் “அம்மாவின் அரசா” ? தாயுள்ளம் கொண்டோர் அனைவருக்கும் அவமானமல்லவா அது?
இலவசமாக எத்தனை…
Read Moreஜோதிகாவை இழிவு படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்
நடிகை ஜோதிகாவை இழிவுபடுத்துவோர் மீது தமிழக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஏப்.28) வெளியிட்ட அறிக்கையில், “விருது வழங்கும் விழா ஒன்றில் திரைக்கலைஞர் ஜோதிகா பேசியதை, அண்மையில் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
தஞ்சாவூருக்கு படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது அங்குள்ள அரசு மருத்துவமனையின் அவலமான நிலையைக் கண்டு தாம் வருந்தியதாகவும், கோயில்களுக்கு செலவு செய்து பராமரிப்பது போல அரசு…
Read Moreசென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு
அம்மா உணவகங்களை பொறுத்தவரை சென்னை மாநகரில் 407 உணவகங்களும் மற்ற மாநகராட்சி பகுதிகளில் 247 உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த உணவகங்களில் காலையில் இட்லி, பொங்கல், மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், மல்லி சாதம் போன்ற சாத வகைகளும் மாலையில் சப்பாத்தியும் விற்கப்படுகிறது. மிகக் குறைந்த விலையில் விற்கப்படும் இந்த உணவு வகைகள் ஊரடங்கு நேரத்தில் பணத்தட்டுப்பாட்டால் சிரமப்படும் சாதாரண மக்களுக்கு கைகொடுத்து வருகிறது.
இதனால் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு இலவச…
Read Moreஉதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம் – முக ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் சற்றுமுன்னர் தனியார் தொண்டு நிறுவனங்கள் உணவுப்பொருட்களை தாங்களாகவே விநியோகம் செய்ய கூடாது என்றும், மாவட்ட நிர்வாகம் மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
லாக்டவுன் காலத்தில்…
Read Moreஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க நாளை அமைச்சரவை கூட்டம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 19 மருத்துவர்கள் குழுவுடன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அதில் தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாநில முதல்வர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்….
Read Moreதமிழகத்தில் கொரோனா மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்பு – முதல்வர்
சென்னை தலைமை செயலகத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள 12 பணி குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
தமிழகத்தில் 738 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதியான நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. 19 ஆய்வகங்கள் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. 6,095 பேருக்கு இதுவரை சோதனை நடைபெற்றுள்ளது. 344…
Read Moreபிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா – செங்கல்பட்டில் 1000 குடும்பத்துக்கு கொரானா நிவாரணம்
PMJKYPPA பிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா பிரச்சார இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஜெய்கணேஷ் ஆலோசனையின்படி காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவியாக மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி பொருட்கள் மாவட்ட நிர்வாகி கண்ணன் தலைமையில் வழங்கும் நிகழ்வு கேளம்பாக்கம் மாவட்ட அலுவலகத்தில் துவங்கப்பட்டது .
இதன் மூலம் கேளம்பாக்கம், புதுப்பாக்கம் சாவடி சிறுதாவூர் , மடத்தூர், திருப்போரூர் , பையனூர் , காரணை , தட்சிணாபுரம், குன்னபட்டு ,…
Read More