August 17, 2026
  • August 17, 2026

லாக் டவுனில் இசை கற்றுக் கொள்ளும் வாணி போஜன் வீடியோ

by on April 18, 2020 0

‘ ஓ மை கடவுளே ‘ படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் வாணி போஜன். ஏற்கெனவே சின்னத்திரையில் தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர். இதனால் இவரது சினிமா  ரசிகர்கள் இவரை பார்ப்பதற்கு சீரியல் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சின்னத்திரையின் மூலம் பல நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாணிபோஜனை , தொகுப்பாளினி ஒருவர் சின்னத்திரையில் இவர் தான் நயன்தாரா என்று கூப்பிட, சின்னத்திரை நயன்தாரா ‘ ஆனார் வாணி. வாணி தெலுங்கில் 2019 ஆம் ஆண்டில், ‘ மீக்கு […]

Read More

தென்னிந்திய தியேட்டர்களின் தலைமகன் சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்தநாள்

by on April 18, 2020 0

1895ம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதர் சாமிக்கண்ணு வின்சென்ட். அதாவது தமிழ்நாட்டில் முதன்முதலாக “டுபாண்ட்” எனும் பிரெஞ்சுக்காரர் ஒரு நவீன படக் கருவியுடன் வந்து இறங்கியிருந்தார். அவர் சென்று பயாஸ்கோப் நடத்திய இடங்களில் எல்லாம் மக்கள் கூடி வியப்புடன் பார்த்தனர். அப்போது சாமிக்கண்ணுக்கு யோசனை ஏற்பட்டது. அதை வாங்க வேண்டும் என்று நினைத்தார். அப்பொழுது பிரெஞ்சுக்காரர்கள் படக் கருவியை விற்க முடிவு செய்தனர். உடனே சாமிக்கண்ணு மனைவியின் நகைகளை […]

Read More

கொரோனா பணக்காரர்கள் நோயா? – முதல்வர் பேச்சுக்கு கஸ்தூரி கமெண்ட்

by on April 18, 2020 0

சமீபத்திய முதல்வரின் பேச்சுக்கு நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரியின் கமெண்ட் –  “தமிழக முதலமைச்சர் EPS அவர்களின் சமீபத்திய பேச்சு பொதுமக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் உள்ளது என்பது நல்ல விஷயம். ஆனால், அதற்காக சரியான சில விவரங்களை மறைப்பதும் தவறான தகவல்களை அறிவிப்பதும் ஆபத்து. இன்னும் மூன்றே நாட்களில் கொரோனா இறப்புக்கள் நின்றுவிடும் என்பது பாசிட்டிவ் பேச்சு என்றால் ஓகே; ஆனால் அது நடக்காமல், மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் நிலை வந்தால் ? கொரோனா பணக்காரர்கள் […]

Read More

லாக் டவுன் மத்தியிலும் பர பரப்பாகும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்

by on April 17, 2020 0

லாக் டவுன் முடிந்து எப்போது சினிமா படப் பிடிப்புகள் தொடங்கும் என்று தெரியாத நிலையிலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவர், 2 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள், பொருளாளர் அடங்கிய நிர்வாகிகள் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு தேர்தல் ஜூன் மாதம் நடக்கப் போகிறதாம். இதை தேர்தல் அதிகாரியும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார். இது தொடர்பான தேர்தல் அட்டவணையையும் அவர் இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி 11.05.2020 காலை 10 மணி முதல் […]

Read More

அள்ளிக் கொடுத்த ஆந்திர ஹீரோக்களை விளாசும் டான்ஸ் மாஸ்டர் வைரல் வீடியோ

by on April 17, 2020 0

கொரோனா லாக்டவுன் அறிவிக்கப் பட்ட உடனேயே முன்வந்து அள்ளிக் கொடுத்த ஆந்திர ஹீரோ க்களையே சவுக்கெடுக்காமல் விளாசி தள்ளி இருக்கிறார் ஆந்திர சினிமாவில் 40 ஆண்டுகாலம் நடிக நடிகையரை ஆட்டுவித்த டான்ஸ் மாஸ்டர் ராகேஷ். தெலுங்கு ஹீரோக்கள் மொத்தமாக சுமார் 25 கோடிக்கு மேல் பிரதமர், முதமைச்சர் நிதிக்கு மட்டுமல்லாமல் தெலுங்கு பட உலகுக்கும் உதவி இருக்கிறார்கள். அதற்குப்பின் வந்தாலும் பாலிவுட் ஹீரோக்கள் வாரிக் கொடுத்தார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், தெலுங்கு நடிகர்களின் உதவி ஒன்றும் […]

Read More

உள்ளுக்குள் சோகம் வைத்து உலகை சிரிக்க வைத்த சார்லி சாப்ளின்

by on April 16, 2020 0

உலகையே சிரிக்கவைத்தவர் சார்லி சாப்ளின்! ஆனால், அவரது வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததே இல்லை. பிறந்ததில் இருந்தே துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள் இவைதான் அவரின் நண்பர்களாக இருந்தது. 1889 ஆம் ஆண்டு லண்டன் நகரில் சாப்ளின் பிறந்து, ஓரிரு வருடங்களிலேயே பெற்றோரிடையே சண்டை வந்து டிவோர்ஸ் ஆகிவிடவே, பேசத்தொடங்கும் முன்பே, தாயுடன் சேர்ந்து மேடையில் பாடவேண்டிய நிர்ப்பந்தம். ஐந்து வயதுச் சிறுவனின் பாட்டுக்குக்கிடைத்த அமோக வரவேற்பு, ஏழு வயதிலேயே பறிபோனது. காரணம், அவரது தாயாரின் மனநிலை பாதிக்கப்பட்டதுதான். குடும்பத்தைக் […]

Read More

ஒரே நாளில் அமெரிக்காவில் அதிகபட்சமாக 2600 கொரோனா பலி

by on April 16, 2020 0

உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் உயிர்கொல்லி தொற்றான ‘கொரோனா வைரஸ்’ தாக்கத்தால் இதுவரை 20 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 5 லட்சத்து 10 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 6 லட்சத்து 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 28,529 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்லும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து […]

Read More

இந்திய கொரோனா ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் – தமிழகம் முதலிடம்

by on April 16, 2020 0

இந்தியா முழுவதும் கொரோனா ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் அறிவிப்பு; தமிழகத்தில் 22 மாவட்டங்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாநிலங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம்பிடித்துள்ளன. நாடு முழுவதும் 170 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 207 மாவட்டங்கள் வெள்ளை மண்டலமாகவும், 353 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் […]

Read More
CLOSE
CLOSE