March 28, 2024
  • March 28, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அப்பாவுடன் நடித்த சின்னி ஜெயந்த் என் படத்திலும் கல்லூரிக்கு வருகிறார் – அதர்வா
September 17, 2022

அப்பாவுடன் நடித்த சின்னி ஜெயந்த் என் படத்திலும் கல்லூரிக்கு வருகிறார் – அதர்வா

By 0 222 Views

பிரமோத் பிலிம்ஸ் சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி, ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “ட்ரிகர்”

இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது.

இப்படம் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழு செப்டம்பர் 16 அன்று ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் அருண் பாண்டியன் பேசியதாவது..,

நான் நீண்ட வருடங்களுக்குப் பிறகு என் மகளுடன் ஒரு படம் நடித்தேன் அதை இயக்குநர் சாம் ஆண்டன் பார்த்துவிட்டு என்னைப்பார்க்க வந்தார். நல்ல கதையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நான் யோசித்த போது தான் இந்தக்கதை வந்தது.

இந்த டீமுடன் பணிபுரிந்த அனுபவம் எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படம் கண்டிப்பாக சுவாரஷ்யமான படமாக இருக்கும் சாம் ஆண்டன் மிக அழகாக படத்தை இயக்கியுள்ளார்.

என் நண்பர் சின்னி ஜெயந்துடன் மீண்டும் நடித்தது மகிழ்ச்சி. அதர்வா மிகத்திறமையான நடிகர் மிக்க்கடின உழைப்பைத் தந்துள்ளார் இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும்..!” என்றார்.

நடிகர் சின்னி ஜெயந்த் பேசியதாவது…….

“இந்தப்படத்தில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தை இயக்குநர் வடிவமைத்துள்ளார். ஒரு ஆக்‌ஷன் நிறைந்த ஆங்கிலப்படத்தில் நடித்த அனுபவம் போல் இந்த படம் இருந்தது. அதர்வா உடன் எனக்கு இது முதல் படம். ஆக்சனில் தமிழில் சிலர் மட்டுமே ஜொலிப்பார்கள் விஜயகாந்த் போல் அதர்வாவின் ஆக்‌ஷன் நடிப்பில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.அவர்களில் குறிப்பிடத்தக்கவர் விஜயகாந்த். வருங்காலத்தில் அதரவா, ஜூனியர் விஜயகாந்த் என்றழைக்கப்படுவார்.

இந்தப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்தப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றியடையும்..!” என்றார்.

நடிகர் அதர்வா பேசியதாவது…….

“ட்ரிகர், நானும் இயக்குநரும் இணையும் இரண்டாவது படம். நல்ல கதைக்கரு உடைய திரைப்படம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஆக்‌ஷனை தாண்டி படம் உணர்வுபூர்வமான பல விஷயங்களைக் கொண்டுள்ளது. தயாரிப்பாளர் ஷ்ருதி ஒரு தயாரிப்பாளரைத் தாண்டி கிரியேட்டிவ்வாக படத்தில் பணிபுரிந்தார்.

சாம் ஆண்டன் பதட்டமில்லாமல், சாதாரணமாக படத்தை கையாள்வார், அவர் நிச்சயமாக பெரிய இடத்திற்குச் செல்வார். அருண் பாண்டியன், சின்னி ஜெயந்த் இருவருடைய நடிப்பும் அபாரமாக இருந்தது. சின்னி ஜெயந்த் சாரை அப்பாவுடன் சூட்டிங் செல்லும் போது பார்த்துள்ளேன் இப்போதும் இளமையாக இருக்கிறார்.

என்னுடன் காலேஜ் படத்தில் நடிப்பார். படம் தொழில்நுட்ப ரீதியாக பலரது உழைப்பால் நன்றாக வந்துள்ளது. ஒரு நல்ல படத்தை உருவாக்கிய சந்தோசம் எங்களுக்கு இருக்கிறது. இந்தப்படத்தை குடும்பத்தோடு வந்து அனைவரும் பாருங்கள்..!” என்றார்.

இயக்குநர் சாம் ஆண்டன் பேசியதாவது……

“என்னுடைய அனைத்துப்படங்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்களுக்கு நன்றி. எந்த வித பதட்டமும் இல்லாமல் இந்தப்படத்தை முடித்ததற்குக்காரணம் தயாரிப்பாளர் கொடுத்த ஒத்துழைப்பு தான். அவர்களுடைய ஒத்துழைப்பு அபாரமானது.

அதர்வாவிடம் இந்தக்கதையைக் கூறிய போது, அவர் மீண்டும் போலீஸ் கதை என்று யோசிக்காமல், கதையில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து உடனே ஒத்துகொண்டார். அதர்வா உடைய கடின உழைப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். தன்யா அர்பணிப்புடன் மிக நன்றாக நடித்துள்ளார். படத்தின் டிரெய்லருக்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது..!”என்றார்.

தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பா ( பிரமோத் பிலிம்ஸ்) பேசியதாவது..,

“இது எங்களுடைய மூன்றாவது தமிழ்பப்டம். இதுவரை எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இன்னும் நிறைய தமிழ்பப்டம் எடுக்க எங்களுக்கு விருப்பம் இருக்கிறது.

ஆக்சனோடு கலந்த உணர்வுபூர்மான கதையை சாம் கூறினார். கதையைக் கூறியவுடன் எல்லாம் உடனடியாக அமைந்தது. அதர்வா படத்திற்குள் வந்தது படத்திற்கு பலமாக அமைந்தது. அவர் நல்ல நண்பராக இருந்து படத்தில் நடித்தார். திட்டமிட்டததை விட சீக்கிரம் படத்தை முடித்துவிட்டோம். அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தான் காரணம். எங்கள் கடின உழைப்பைத் தந்து எடுத்துள்ளோம்..!” என்றார்.

தயாரிப்பாளர் பிரதிக் சக்ரவர்த்தி பேசியதாவது..,

“இந்த கனவு திரைப்படத்தில் இணைந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி. ஆக்‌ஷன் படத்தை இவ்வளவு பெரிய திரைப்படமாக எடுத்தது எங்களுக்கு மகிழ்ச்சி..!” என்றார்.

ட்ரிகர்” திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். அருண் பாண்டியன், சீதா, கிருஷ்ண குமார், வினோதினி வைத்தியநாதன், முனிஷ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் மற்றும் இன்னும் பல முக்கிய நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். திலீப் சுப்பராயன் சண்டை இயக்குநராகப் பணியாற்ற, ராஜேஷ் கலை இயக்கம் செய்துள்ளார், தீபாலி நூர் உடைவடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடும் இப்படம் செப்டம்பர் 23 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.