April 25, 2024
  • April 25, 2024
Breaking News

Tag Archives

கல்லூரி மாணவ மாணவியருக்கு காலைச் சிற்றுண்டி – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

by on November 16, 2022 0

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கும், காலை சிற்றுண்டி திட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் கட்டுப்பாட்டின் கீழ் பழனியாண்டவர் கலைகல்லூரி, மகளிர் கல்லூரி, சின்னகலையம்புத்தூர் கல்லூரி, மெட்ரிக் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதுதவிர ஒட்டன்சத்திரத்தில் அரசு கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. […]

Read More

சென்னை வந்த தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர் என் ரவிக்கு முதல்வர் வரவேற்பு

by on September 16, 2021 0

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி தமிழகத்தின் 14-வது கவர்னராக மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் பொறுப்பு ஏற்றார்.   இவர் பஞ்சாப் மாநில கவர்னராக சில தினங்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என். ரவி தமிழகத்தின் புதிய கவர்னராக அறிவிக்கப்பட்டார்.    இந்நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி இன்று தமிழகம் வந்தடைந்தார். டெல்லியில் இருந்து சென்னை வந்த அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

Read More

தலைவரை உலுக்கி எடுத்த அன்பு அண்ணனின் மரணம் – உதயநிதி உருக்கம்

by on June 11, 2020 0

 திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் நேற்று மரணம் அடைந்த நிலையில் அது தொடர்பான உருக்கமான பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அதன் விவரம் பின்வருமாறு; ”எத்தனையோ மனிதர்களை, அவர்களின் மரணங்களை நாம் கடந்து வந்திருப்போம். ஆனால் சிலரின் மரணம் நம்மை உலுக்கி எடுத்துவிடும். ‘அன்பு’ அண்ணனின் மரணம் அந்தவகை. ஏனெனில் அண்ணன் அப்படிப்பட்ட மனிதர். எனக்கே இப்படியென்றால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் இணைந்து பயணித்த தலைவர் அவர்கள் எப்படித் […]

Read More

வாரிசு உள்ளவர்கள்தான் வாரிசுதாரர் ஆக முடியும் – முக ஸ்டாலின்

by on November 3, 2019 0

புதுக்கோட்டை, விராச்சிலையில் இன்று நடைபெற்ற தி.மு.க. நிர்வாகியின் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து… 1967-ல் அண்ணா தலைமையில் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்றபோது முதன் முதலாக அண்ணா சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதுதான் சீர் திருத்த திருமணத்திற்கு சட்டப்படியான அங்கீகாரமாக அமைந்தது. அந்த சட்ட முறைப்படி இந்த திருமணம் இங்கு நடந்தேறியிருக்கிறது. சுயமரியாதையை காப்பதற்காக தந்தை பெரியார் பாடுபட்டார், உழைத்தார். பல தியாகங்கள் செய்தார். கல்லடியும், […]

Read More

ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டத்தை கைவிட வேண்டும்-மு.க.ஸ்டாலின்

by on June 30, 2019 0

மத்திய அரசு வெளியிட்டுள்ள ‘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை’ திட்டத்தைக் கைவிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து… “ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதற்கே மாநில அரசுகளும், மாநில அரசியல் கட்சிகளும், கற்றறிந்தோர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், இப்போது மீண்டும் ‘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை’, ‘மாநிலங்களில் பணியாற்றும் மாஜிஸ்திரேட்டுகளைக் கூட மத்திய அரசே தேர்வு செய்யும்’ என்றும், எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய் வார்ப்பதைப் போல, அறிவித்து, […]

Read More

நமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும் – மு.க.ஸ்டாலின்

by on January 19, 2019 0

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து… “வணக்கம். வங்க மொழியைத் தொடர்ந்து வங்கப் புலிகளுக்கு எனது வணக்கம். சுதந்திர போராட்டத்தில் இந்தியாவும் மேற்கு வங்கமும் முக்கிய பங்காற்றின.   இப்போது, இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அழைப்பின்பேரில் இங்கு வந்துள்ளேன். மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்பதுதான் 2வது சுதந்திர போராட்டம்.    பிரதமர் மோடி சொன்ன […]

Read More

நான் கோவிலுக்கு வந்ததைப் போல் உணர்கிறேன் – திருவாரூரில் முக ஸ்டாலின்

by on January 9, 2019 0

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடத்தப்படும் ஊராட்சி சபை கூட்டம் இன்றைக்கு திருவாரூரில் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதனைத் தொடங்கி வைத்தார். இன்று முதல் தொடங்கி வருகிற பிப்ரவரி 17ம் தேதி வரை இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.   இன்றைக்கு சந்தித்த கிராம மக்களின் முன்பாக பேசிய மு.க.ஸ்டாலின், “நான் ஒரு கோவிலுக்கு வந்ததை போன்று உணர்கிறேன். கிராமம் தான் கோவில். மகாத்மா காந்தி கூட கிராமத்தை தான் கோவில் என்று தான் கூறுவார். […]

Read More

நியூட்ரினோ – முதல்வருக்கு வைகோ எச்சரிக்கை

by on April 1, 2018 0

மதுரையில் ‘நியூட்ரினோ’ திட்டத்துக்கு எதிரான நடைப்பயணம் வைகோ தலைமையில் நேற்று துவங்கியது. அந்தப் பயணத்தை தி.மு.க., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார். அப்போது வைகோ பேசியதிலிருந்து- “நியூட்ரினோ’ திட்டத்துக்காக தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் 11 லட்சத்து 25 ஆயிரம் டன் கடும் பாறையை தகர்த்து காந்தக்கல் வைக்க 1,000 டன் ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தவுள்ளன. இது நிறைவேறினால் முல்லைப் பெரியாறு மற்றும் இடுக்கி அணை உடையும். தமிழகம் பாலைவனமாகும். இத்திட்டம் நிறைவேற மக்கள் கருத்து தேவையில்லை என […]

Read More