April 24, 2024
  • April 24, 2024
Breaking News

Tag Archives

கோவிட் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படத்தை எதிர்த்து வழக்கு – கேரள உயர்நீதி மன்றம் தள்ளுபடி

by on December 13, 2021 0

கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழில்  பிரதமர் மோடியின் படம் இல்லாமல் சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்று கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் பீட்டர் மைலிபரம்பில் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  அவர் நமது நாட்டின் பிரதமர், வேறு நாட்டின் பிரதமர் அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்டதன் மூலம்  அவர் பிரதமராகி உள்ளார். உங்களுக்கு அரசியல் ரீதியான வேறுபாடுகள் இருக்கலாம் அதற்காக இதை நீங்கள் வலியுறுத்த முடியாது.  நமது பிரதமரைப் பற்றி நீங்கள் ஏன் வெட்கப்படுகிறீர்கள்? 100 […]

Read More

கொரோனா சந்தேகம்னா இப்படியா விரட்டிப் பிடிப்பாங்க – பதற வைக்கும் கேரள வீடியோ

by on July 7, 2020 0

நகர மத்தியில் ஓடிய கொரோனா சந்தேகத்திற்குரிய நபரை, கவச உடையில் சினிமா பாணியில் விரட்டி பிடித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக் கின்றனர் கேரள போலீசார். இந்தகாட்சியை நேரில் பார்த்த பொதுமக்கள் சிறிது நேரத்திற்கு வெலவெலத்துப் போனார்கள். பத்தனம்திட்டா நகரில் நேற்று மதியம் போலீசார் வாகன சோதனை நடத்தி வந்த நிலையில், முக கவசம் சரியாக அணியாமல் கழுத்தில் மாட்டியபடி ஸ்கூட்டரில் வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரித்திருக்கின்றனர். அதற்கு அந்த நபர், ‘நான் ஒன்றும் கொரோனா நோயாளி அல்ல. […]

Read More

கொரோனா வருமான பாதிப்பில் ஆட்டோ ஓட்டும் நடிகை

by on July 5, 2020 0

லாக் டவுன் பாதிப்பால் மும்பையில் குணச்சித்திர நடிகர் படம் விற்பதாக செய்தி வந்தது. அதேபோல  கேரளாவில் ஒரு நடிகை ஆட்டோ ஓட்டுகிறார் என்றால் நம்ப முடிகிறதா..? ஆனால் அதுதான் உண்மை. அவரது பெயர் மஞ்சு. 36 வயதான மஞ்சு கடந்த 15 வருடங்களாக நாடகத்தில் நடித்து வருகிறார். சில திரைப் படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது கொரோனா காலத்தில் நாடகங்கள் மற்றும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் வருமானம் இழந்து தவித்தவர், இருக்கிற பணத்தை கொண்டு ஒரு […]

Read More

கேரளாவில் இடிக்கப்பட்ட ஷூட்டிங் சர்ச் – முதல்வர் உள்பட நட்சத்திரங்கள் கண்டனம்

by on May 25, 2020 0

கேரளாவில் ஷூட்டிங்-க்காகப் போடப்பட்டிருந்த சர்ச் செட்-டை சில வலது சாரி அமைப்புகள் சேர்ந்து இடித்துத் தள்ளிவிட… விஷயம் சி எம் கவனத்துக்குப்போய் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி இருக்கிறார். டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகும் ‘மின்னல் முரளி’ என்ற படத்துக்காக கேரளாவின் காலடி பகுதியில், பெரியார் ஆற்றங்கரையில், உரிய அனுமதி பெற்ற பின் ஒரு பெரிய கிறிஸ்தவ தேவாலய அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.   ஆனால்,  இந்த அரங்குக்கு எதிரிலே மகாதேவன் கோயில் இருந்ததால், இந்த சர்ச் அமைப்பதற்கு ஏற்கெனவே […]

Read More

மலையாளப் படங்களின் இறுதிக்கட்ட பணிகளுக்கு கேரள அரசு அனுமதி

by on May 4, 2020 0

கேரளாவில் மலையாளப் படங்களின் இறுதிகட்டப் பணிகளுக்குக் கேரள அரசு அனுமதி வழங்கியது. அதிகபட்சம்5 நபர்கள் தேவைப்படும் திரைப்படப் பணிகளை மே 4 முதல் தொடங்கலாம். சமூக விலகல், கைகளை அடிக்கடி கழுவுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும். முதல்வர் பினராயி விஜயனுடன் ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது எனக் கேரள அரசின் பண்பாடு மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் கூறினார். இதையடுத்து, கேரளாவில் கரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலப் பகுதிகளில் திரைப்படம் மற்றும் […]

Read More

7 பேர் தற்கொலை எதிரொலி – கேரளாவில் விதி முறையுடன் மது பான சப்ளை

by on March 31, 2020 0

கேரளாவில் மது கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் இதுவரை 7 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். போகப்போக கொரோனாவில் இறந்தவர்களை விட குடிநோயாளிகள் இறப்பு அதிகமாக இருக்குமோ என்று எண்ணி குடிநோயாளிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க கேரள அரசு நிபந்தனை அடிப்படையில், மது பாட்டில்களை வழங்க முடிவெடுத்துள்ளது. அதற்காக மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பினராயி விஜயன் அவசர ஆலோசனை நடத்திய பின்னர், குடிநோயாளிகளுக்கு நிபந்தனை அடிப்படையிலான மதுவிற்பனை வழங்க […]

Read More

நள்ளிரவில் சாலையில் விழுந்த குழந்தை வைரல் வீடியோ

by on September 9, 2019 0

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமாலா வாகனச் சோதனை சாவடிக்கு அருகே நடந்த ‘திக் திக்’ சம்பவம் இது. மிக அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலையில் அந்த சம்பவம் நடந்தது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.   சோதனைச் சாவடி அருகே கடக்கும் ஒரு காரிலிருந்து குழந்தை ஒன்று கீழே விழ, அந்த கார் சென்று விடுகிறது. அதிர்ஷ்டவசமாக, வாகனத்தில் இருந்து குழந்தை விழும் போது பலத்த அடி படவில்லை என்பதுடன் பின்னால் எந்த வாகனமும் […]

Read More

வெள்ளத்தால் கேரளாவில் ஓணம் ரத்து… பண்டிகைச் செலவு நிவாரண நிதியாக்கப்படும்

by on August 14, 2018 0

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரே நேரத்தில் 22 அணைகளைத் திறந்து விடும் அளவுக்கு மழை கொட்டிக்கொண்டிருப்பதால் ஆற்றுத் தண்ணீர் அதிகமாக வெளியேறி இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. முப்படைகள் முகாமிட்டு முழு மூச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த வெள்ள சேதம் சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கும் என்று கேரள அரசு அறிவித்துள்ளதை அடுத்து மழை வெள்ள […]

Read More

கேரளாவில் அதிகம் தெரியாத மலைவாசஸ்தலம்

by on March 21, 2018 0

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாதான் தென்னக மாநிலங்களிலேயே சுற்றுலாவுக்குச் சிறந்த இடமாகக் கருதப்படுகிறது. ஆனால், வழக்கமாக கேரளா என்றாலே வயநாடு, ஆலப்புழை, மூணாறு முதலான இடங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், நமக்கு அதிகம் தெரியாமல் இருக்கும் ஒரு இடத்தை அங்கே சென்று வந்தவர்கள் புகழ்கிறார்கள். அந்த இடம் பீர்மேடு. கோட்டயம் நகருக்கு கிழக்கே 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பீர்மேடு, கேரளாவில் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வெளியே தெரியாத மலைவாசஸ்தலங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. திரிவிதாங்கூர் சமஸ்தானத்துடன் […]

Read More