தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம், போலீஸாரின் துப்பாக்கிச்சூடு என்று தொடர்ந்ததில் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியாது என்று தமிழக அரசு சார்பில் சொல்லப்பட்டது. ஆனால், இந்த அரசாணையை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டத்துக்குப் புறம்பானது. ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் […]
Read Moreசினிமாவில் கொஞ்ச காலம் முன்பு வரை படம் வெளியாகும் சமயத்தில் தயாரிப்பாளரும், இயக்குநரும் பேசிக்கொள்ள முடியாத அளவுக்கு விலகி நிற்பார்கள். ஆனால், காலம் மாறிவிட்டது. ஆரோக்கியமான படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு படங்களை எடுப்பதால் பட வெளியீட்டுக்கு முன்பு படக்குழுவுக்கு நன்றி தெரிவிப்பது ஒரு கலாச்சாரமாகவே இப்போது மாறி வருகிறது. அந்தக் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஜூலை 6 வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் படத்துக்காக தனது படக்குழுவுக்கு தனது மனதில் ஆழத்தில் இருந்து இப்படி நன்றி தெரிவிக்கிறார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன். […]
Read Moreஹீரோக்களுக்கு இருக்கும் வசதியே அவர்கள் எத்தனை வயதானாலும் ஹீரோவாக நடிக்க முடியும். ஆனால், ஹீரோயின்களுக்கு வயதாகிவிட்டால் வீட்டுக்குப் போக வேண்டியதுதான். அல்லது அக்கா, அண்ணி என்று கிடைத்த வேடங்களில் நடிக்க வேண்டும். இப்போது ஹரியின் இயக்கத்தில் ச்சீயான் விக்ரம் நடிக்க வேகமாகத் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ரமின் ஜோடியாகி இருக்கிறார். இந்த வேடத்தில் சாமி முதல் பாகத்தில் த்ரிஷா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பாகத்திலும் திரிஷாவே நடிப்பார் என்று எதிர்பார்த்த வேளையில் […]
Read Moreஇயக்குநர் கோபி நயினாரின் திறமை பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருடைய ஸ்கிரிப்டுகள் சினிமாவுலகில் பிரசித்தம். முன்பு ஒரு ‘பெரிய இயக்குநர்’, ‘பெரிய ஹீரோ’வை வைத்து இயக்கிய படத்தின் கதை தன்னுடையது என்று கோபி வழக்கே தொடுத்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால், அவரது கதையை வைத்துப் புகழ் தேட வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று அந்தப் ‘பெரிய இயக்குநர்’ அப்போதைக்கு அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், கோபி நயினாரின் திறமை கண்டு வியந்த நயன்தாரா அவரைத் தேர்வு […]
Read More‘பார்த்திபன் கனவு’ படம் வந்தாகிவிட்டது. அடுத்து என்ன..? ‘பார்த்திபன் காதல்’தானே..? அதையே தலைப்பாக்கி ‘எஸ் சினிமா கம்பெனி’ என்ற புதிய நிறுவனம் படம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் யோகி என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவை ‘தங்கையா மாடசாமி’யும், இசையை ‘பில்லா’வும் கவனிக்கிறார்கள். பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். கதை எழுதி இயக்குகிறார் வள்ளிமுத்து. படம் பற்றி அவரிடம் கேட்டதற்கு… “உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் […]
Read More