பொங்கல் பரிசாக அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசுப் பொருள்களுடன் ரூ. 1000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவை ஜேசுதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்க தடை விதித்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரொக்கப்பரிசு வழங்க உத்தரவிட்டது. இதில் சிக்கல் என்னவென்றால் சர்க்கரை மட்டும் வாங்கும் ரேசன் அட்டைதாரர்கள் மொத்தம் 10 லட்சத்து 11 ஆயிரத்து 330 பேர் உள்ளனர். இவர்களில் கடந்த 9-ந்தேதி […]
Read Moreதயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் ‘கிரிஷ்ணம்’. இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார். படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர். விழாவில் படத்தின் தயாரிப்பாளர் பி.என்.பலராம் பேசியதிலிருந்து… “என் மகன் அக்ஷய் கிருஷ்ணனுக்கு ஒரு நோய் வந்து பெரும்பிரச்சினையாகி அவனால் பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அவன் பிழைப்பதற்கு […]
Read Moreஅஜித் ‘நடிப்பில்’ இப்படி ஒரு படம் பார்த்து நாளாகிறது – சென்டிமென்ட் அளவில்… ஒரு பாசக்காரத் தந்தையாக அவர் வரும் இந்தப் படம் அவர் கரியரிலேயே புதுசு. இதற்கு முன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவர் இதேபோல் ஒரு பெண் குழந்தைக்குத தந்தையாக நடித்திருந்தாலும் அது சொன்ன செய்தி வேறு. ஒரு அப்பாவாக ஒரு பெண்குழந்தையின் அன்புக்கு ஏங்கும் இந்தப் பாசப்படைப்பு அஜித் ரசிகர்களைத் தாண்டி பொதுவான குடும்ப உறுப்பினர்களைக் குறிவைத்து சென்று சேரும். ஊர்த்திருவிழாவில் தொடங்கும் […]
Read Moreதிராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடத்தப்படும் ஊராட்சி சபை கூட்டம் இன்றைக்கு திருவாரூரில் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதனைத் தொடங்கி வைத்தார். இன்று முதல் தொடங்கி வருகிற பிப்ரவரி 17ம் தேதி வரை இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு சந்தித்த கிராம மக்களின் முன்பாக பேசிய மு.க.ஸ்டாலின், “நான் ஒரு கோவிலுக்கு வந்ததை போன்று உணர்கிறேன். கிராமம் தான் கோவில். மகாத்மா காந்தி கூட கிராமத்தை தான் கோவில் என்று தான் கூறுவார். […]
Read More