மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் 80 களின் இறுதியில் நடக்கும் கதை. அங்கே ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த இரு பங்காளிக் குடும்பங்களுக்குள் வருடக் கணக்காக பகை இருந்து வருகிறது. அதுதான் களம். ஆனால், ஒரு காதல் கதையாக படம் நிறைவு பெறுகிறது. படத்தின் தலைப்புக்கு நியாயம் சேர்ப்பது போல், மதுரை மண்ணின் வட்டார வழக்கு அற்புதமாக படத்தில் கையாளப்பட்டிருக்கிறது. இதுவரை எவ்வளவோ படங்களை மதுரை வட்டார வழக்கில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த அளவுக்குத் துல்லியமாக […]
Read Moreஉருவக்கேலி செய்வது பொதுவான மனிதர்களின் இயல்பு. ஆனால் அங்கத்தைப் பார்க்காதீர்கள்… அவர்களின் அறிவைப் பாருங்கள் என்று அடித்துச் சொல்ல வருகிற படம். அதற்கேற்றாற் போல் மூன்றே அடி உயரம் உடைய கதாநாயகனை வைத்து முழு படத்தையும் முடித்திருக்கிறார் இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன். தென் தமிழ் மாவட்டத்தில் நடக்கிற கதை. அங்கே தபால்காரராக இருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அவருக்குப் பிறக்கும் இரண்டு குழந்தைகளில் பெண் குழந்தை இயல்பான உயரத்துடன் வளர, ஆண் குழந்தை மட்டும் குள்ளமாகவே வளர (?) அது […]
Read Moreதமிழ்நாட்டின் செஞ்சி பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் ஒருவர் புதையலைத் தேடி வர மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இப்படி ஆரம்பிக்கிறது படம். அவரைக் கொன்ற ஆயுதம் எது என்று தடயவியல் துறையாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அகழ்வாராய்ச்சித் துறையை சேர்ந்த அதிகாரியான நிழல்கள் ரவி, அகழ்வாராய்சியாளர் போஸ் வெங்கட் தலைமையில் ஒரு மாணவர் குழுவை அந்த இடத்துக்கு அகழ்வாராய்ச்சி செய்ய அனுப்பி வைக்கிறது. இரவில் அந்த ஊர் மக்கள் அந்தப் பகுதியில் நடமாடுவதைத் தவிர்த்து வந்திருக்க, ஒருவர் கொலையும் […]
Read Moreஅந்த ஊரின் பெயரே ‘மூத்த குடி’ என்கிறார்கள். அந்த ஊரின் ‘மூத்த குடி’யாக கே. ஆர். விஜயாவும், அவரது தம்பி ‘யார் கண்ணனு’ம் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லுக்கு அந்த ஊர் மக்கள் எல்லாம் கட்டுப்படுகிறார்கள். ஊருக்கு ஊர் அரசாங்கமே மதுபானக்கடைகளைத் திறந்து நடத்தும் இந்தக் காலகட்டத்தில் தொடங்குகிறது கதை. தங்களது ஊருக்குள் மதுபானக் கடை திறக்கப்பட கூடாது என்று ஊர்மக்களைத் திரட்டி உண்ணாவிரதம் இருக்கிறார் சரக்குட்டி என்கிற பெரியவர். ( அவர் பெயரிலேயே சரக்கு இருக்கிறதே என்று […]
Read More‘முடக்கறுத்தான்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா 2020-2021 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பேரிடரான கரோனா(COVID-19) பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை தன்னார்வத் தொண்டாக தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் காப்பாற்றி மாபெரும் சமூக சேவையாற்றிய சித்த மருத்துவரான Dr.K.வீரபாபு அவர்கள் சமூகத்திற்காக சமூகப் பொறுப்போடு வயல் மூவீஸ் சார்பில் எழுதி,இயக்கி,தயாரித்து, பின்னணி இசை கோர்த்து, நடித்துள்ள படம் தான் ‘முடக்கறுத்தான்’. இந்த படம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் குற்றத்தை கருவாக வைத்து தயாராகியுள்ளது. […]
Read Moreஉலகில் உள்ள எல்லா உறவுகளிலும் கணவன் மனைவி உறவுதான் மிகப் பெரியது. அது சரியாக அமையாவிட்டால் இரண்டுபேர் இணைந்த வாழ்வில் மூன்றாம் மனிதன் நுழைந்து விடுவான் என்ற உண்மையைச் சொல்லும் படம். அதை ஒரு மர்டர் த்ரில்லராகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராம்தேவ். பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதல்வனாக ஒரு மாணவன் வர, அதைக் கண்ணுறும் காவல் அதிகாரி கே பாக்யராஜ் தன் நினைவுகளை பின்னோக்கி சுழற்ற திரையில் இந்தக் கதை விரிகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டராக […]
Read More