June 10, 2026
  • June 10, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பலியான தமிழக வீரர்கள் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் – ரோபோ சங்கர் அறிவிப்பு
February 16, 2019

பலியான தமிழக வீரர்கள் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் – ரோபோ சங்கர் அறிவிப்பு

By 0 1140 Views

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பலியான மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த இரு வரும் அடங்குவர்.

தூத்துக்குடி சுப்ரமணியன், அரியலூர் சிவச்சந்திரன் ஆகிய அந்த இரு வீரர்களின் தீரத்துக்கு வீர வணக்கம் தெரிவிப்பதுடன் அவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்குவதாக நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் அறிவித்திருக்கிறார்.

கோடி கோடியாக வாங்கும் முதல்நிலை நட்சத்திரங்கள் மௌனம் காக்கும்போது ஒரு நகைச்சுவை நடிகர் இப்படி தன் சம்பாத்தியத்திலிருந்து வெகுமானம் வழங்குவது பெரிய விஷயம்தான்.

ரோபோ சங்கர் வெளியிட்டிருக்கும் வீடியோ…