March 29, 2024
  • March 29, 2024
Breaking News
July 30, 2019

ஆர் கண்ணன் அதர்வா இணையும் புதிய படம் தொடங்கியது

By 0 816 Views

‘பாதையைத் தேடாதே… பாதையை உருவாக்கு…’ என்ற வாக்குக்கு ஏற்ப வாய்ப்புகளை தானே உருவாக்கிக்கொண்டு அடுத்தடுத்து பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.

அதர்வாவை வைத்து வெற்றிப்படமான ‘பூமராங்’ கொடுத்துவிட்டு அடுத்த படத்தையும் அவரை வைத்தே இயக்குகிறார். அதர்வா முரளி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்கும் புதிய பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நேற்று (29-07-2019) சென்னையில் துவங்கியது.

Prodfucers Wish R.Kannan's Team

Prodfucers Wish R.Kannan’s Team

சென்னையில் பல இடங்களில் பதினைந்து நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, முக்கிய காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவும் திட்டமிட்டுள்ளது.

எம்கேஆர்பி புரடக்‌ஷன்ஸுடன் தன் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனத்துக்காக இந்தப்படத்தைத் தயாரித்து இயக்கும் ஆர்.கண்ணன் பகிர்ந்து கொண்டவை…

“இந்தப்படத்தில் அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார்கள், இந்த ஜோடியைத் திரையில் காண்பதற்கு புதிய உணர்வைத் தரும். காதல் படங்களுக்கு என்றே எப்போதும் ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்கள் உள்ளனர். அதர்வாவும், அனுபமாவும் நிச்சயமாக அவர்களை ரசிக்க வைப்பார்கள்.

இந்த ஆண்டின் கடைசியில் வெளியிடப்படவுள்ள இந்தக் காதல் படத்தை இளைஞர்கள் மட்டுமல்லாது குடும்பங்கள் சேர்ந்தே ரசிக்க முடியும்..!”

Directors Wish R.Kannan's Team

Directors Wish R.Kannan’s Team

படப்பிடிப்பின் முதல் நாளான நேற்று கண்ணனின் படக்குழுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் இயக்குநர்கள் சங்கத்தை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆர்.கண்ணன் எழுதி இயக்கும் இந்த காதல் திரைப்படத்துக்கு கூடுதலாக வலு சேர்க்கிறார் வசனகர்த்தா கபிலன் வைரமுத்து.

சீக்கிரம் டைட்டிலைச் சொல்லுங்க கண்ணன் சார்..!