April 24, 2024
  • April 24, 2024
Breaking News
December 12, 2020

பலப்படுத்தப் படும் ரஜினி மக்கள் மன்றம்

By 0 799 Views

அரசியல் கட்சி அறிவிப்புக்கு பிறகு ரஜினி தன் மக்கள் மன்றத்தை பலப்படுத்தும் பணியில் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறாராம்.

 “போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என தனது அரசியல் வருகை பற்றி அவர் ஏற்கனவே கூறியது போல் வரும் தேர்தலில் தனது கட்சி போட்டியிடுவதை போர் புரியும் தோற்றம் ஏற்படுத்த பார்க்கிறாராம்.

அந்த காரணத்தாலேயே வரும் தேர்தலில் தனது கட்சியை பலப்படுத்த அதிதீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறாராம்.

அந்த வகையில் ரஜினியின் தீவிர ரசிகரும், அவரின் ரசிகர் மன்ற தூண் என அழைக்கப்படும் சத்திய நாராயணா என்பவரை மீண்டும் தனது மக்கள் மன்ற பணிகளுக்காக அழைத்திருக்கிராராம்.

ரஜினி ரசிகர் மன்றத்தின் மாநில தலைவராக இருந்தவர் சத்திய நாராயணா. கடந் த வருடத்திற்கு முன்பு வரை ரசிகர் மன்றம் தொடர்பான அனைத்து பொறுப்புகளும் இவரிடமே இருந்த நிலையில் சத்திய நாராயணாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதனை அடுத்தே ரஜினியின் நண்பர் சுதாகர் ரசிகர் மன்ற நிர்வாகி ஆனார்.

ஆனால் மன்றத்தின் பழைய நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து அவருடன் தொடர்பில்தான் இருந்தார்கள். இதற்கு காரணம் சத்தியநாராயனாவின் செயல்பாடுகள் தான் என்கிறார்கள்.

1996 முதல் 2004 வரை ரசிகர் மன்றத்தை தி.மு.க, அ.தி.மு.க’விற்கு நிகரான ஒரு இயக்கமாக சத்தியநாராயணா வைத்திருந்தது அனைவரு க்கும் தெரியும்.

இந் நிலையில் கடந்த வெள்ளியன்று ரஜினி வீட்டில் நடைபெற்ற முக்கிய ஆலோசனையில் சத்தியநாராயணா கலந்து கொண்டார் என்றும் ரஜினியே சத்தியநாராயணாவுக்கு போன் போட்டு உடனே கிளம்பி வீட்டுக்கு வா என்று அழைத்ததாகவும் தகவல்.

இதனால் மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டு போயஸ் கார்டன் வந்து சேர்ந்துட்டாராம் சத்தியநாராயணா. இதனால், தான் துவங்க இருக்கும் கட்சிக்கு ரசிகர்களை ஒருங்கிணைப்பது மற்றும் கட்சி பணிகளை திராவிட கட்சிகளுக்கும் இணையாக வழிநடத்துவது போன்ற பணிகளை மின்னல் வேகத்தில் செய்ய சத்திய நாராயணா பெரும் உதவியாக இருப்பார் என ரஜினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படி தன் கட்சிக்கு பலம் சேர்ப்பதில் ரஜினிகாந்த் துரிதமாக செயல்பட அவரை விமர்சிப்பவர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள் என்று தகவல்.