தீபாவளிக்கு விஜய்யின் ‘சர்கார்’ வெளியாகும் என்று அறிவித்த நிலையிலும் தன் படமான ‘திமிரு புடிச்சவன்’ வந்தே தீரும் என்று அறிவித்திருந்தார் விஜய் ஆண்டனி. அதற்கு தயாரிப்பாளர் சங்கமும் அனுமதி அளித்திருந்தது. ஆனால், விஜய் படத்தை அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து வினியோகஸ்தர்களால் விஜய் ஆண்டனி படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட முடியாத நிலைமை ஏற்படவே, அவர்கள் கையை விரிக்க ‘திமிரு புடிச்சவன்’ம் படம் தீபாவளிக்கு வெளியாகாமல் பின்வாங்கியது. அதற்கு அடுத்த வாரம் நவம்பர் 16ம்தேதி ‘காற்றின் மொழி’, ‘செய்’, […]
Read Moreஎங்கு பார்த்தாலும் டெங்கு, பன்றிக் காய்ச்சல் என்று பரவி வரும் நிலையில் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் விசேஷ வார்டுகள் இதற்கென்று நிறுவப்பட்டுள்ளன. எந்த நோயும் ஆள் பார்த்தோ அந்தஸ்து பார்த்தோ வருவதில்லை. அதுபோல்தான் நடிக, நடிகையரும் கூட எந்த நோய்க்கும் விதிவிலக்கில்லை. இப்போது பிரபல நடிகர் சரவணனுக்கு இந்தப் பன்றிக் கய்ச்சல் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. பல ஆண்டுகள் முன்பே சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து இருந்தாலும் பாலாவின் ‘நந்தா’ படத்தில் மறுபிறவி எடுத்த சரவணன், […]
Read More‘ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்சன்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் மன்னு தயாரித்திருக்கும் திரைப்படம் ‘செய்’. இந்தப் படத்தில் நக்குல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி, ப்ளாரன் பெரைரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்பாபு. ‘செய்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் நாயகன் நக்குல், நாயகி அன்ஷால் முன்ஜால், படத்தின் இயக்குநர் ராஜ்பாபு, தயாரிப்பாளர் மன்னு, நடிகர் ப்ளாரன் பெரைரா, நடிகை அஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் நாயகன் நக்குல் […]
Read Moreதமிழ்சினிமாவின் தீராத தலைவலியாகியிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் அடுத்தடுத்து புதிய படங்களைத் தன் தளத்தில் வெளியிட்டு வருகிறது. தீபாவளிக்கு வெளியான சர்காரை அன்றே வெளியிடுவோம் என்று அறிவித்து அதன்படியே வெளியிட்டது. சினிமாவுக்குள் விரலை உயர்த்தி முஷ்டியை மடக்கி உலகுக்கே சவால் விடும் ஹீரோக்களாலும், தங்கள் சாதுர்யத்தால் அரசியலைப் பிரித்து மேயும் இயக்குநர்களாலும் கூட தமிழ் ராக்கர்ஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர்கள் சங்க செயலாளருமான விஷாலின் தலையாய கொள்கைகளில் ஒன்றே இந்த தமிழ் ராக்கர்ஸை முடக்குவதுதான். […]
Read Moreதமிழ் சினிமாவில் பிரசாந்துக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. மற்ற ஹீரோக்களுக்கெல்லாம் இல்லாத பெருமையாக இயக்குநர்கள் பரதன், மணிரத்னம், ஷங்கர் படங்களில் ஹீரோவானவர். முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் முதல் தமிழ் ஹீரோ பிரசாந்த்தான். ஷங்கரின் இயக்கத்தில் அவர் நடித்த ஜீன்ஸில் உலக அதிசயங்கள் ஏழிலும் நடித்த பெருமைக்குரியவர். இப்போது தமிழில் அவர் ஹீரோவாக அவரது அப்பா தியாகராஜன் தயாரிப்பில் வெற்றி செல்வன் இயக்கியிருக்கும் ‘ஜானி’ வெளியாகவிருக்கிறது. நம்பிக்கை வைக்கக் கூடிய இயக்குநர் வெற்றி […]
Read Moreபுதியதமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி, வெளியிட்ட அறிக்கையில் கமலஹாசன் தேவர் மகன்2 படம் எடுக்கப்போவதாகவும், அப்படி எடுத்தால் அப்படம் முடங்கும் எனவும் தெரிவித்திருந்ததார். இது குறித்து கருணாஸ் வெளியிட்ட அறிக்கை… “தமிழகத்தில் யார் என்ன படம் எடுக்கணும், என்ன பெயர் வைக்கணும் என்பதை கதாநாயகனும், தயாரிப்பாளரும் முடிவு செய்வார்கள் தவிர நீங்கள் இல்லை. தேவர் மகன் படத்தால் தென் தமிழகத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டதாக கூறியிருந்தீர்களே…ஏதேனும் இரு சமூகத்திடையே கலவரம் வரும் மாதிரி எந்த ஒரு காட்சியாவது அப்படத்தில் […]
Read More