சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிக்கு செல்லும் பெண்கள் 2019-20 -ம் நிதியாண்டிற்கான அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின்கீழ் பயன்பெற செவ்வாய்க்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என ஆணையர் .கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டில் பணிக்கு செல்லும் 8-ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள, தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு உட்பட்ட ஏழை மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டம் 2017-18 ஆம் ஆண்டு […]
Read Moreதீபாவளிக்கு லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ மூலம் திரையைக் காணவிருக்கும் கார்த்தி அடுத்து நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘கார்த்தி 19’ என்று பெயரிட்டிருந்தார்கள். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் அந்தப்படத்துக்கு இப்போது ‘சுல்தான்’ என்று பெயரிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதில் கார்த்தி ஜோடியாக டோலிவுட் வரவு ‘ராஷ்மிகா மன்டன்னா’ நடிக்கிறார். அத்துடன் இது திப்பு சுல்தான் பற்றிய கதை என்றும் தகவல்கள் பரவ, இந்தக் காரணம் போதாதா ஆர்ப்பாட்டம் செய்ய..? இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடைபெறுவதை அறிந்த பா.ஜ.க. – […]
Read Moreஅறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் ‘2 மூவி பஃப் ‘ நிறுவனம் சார்பில் ரகுநாதன் பிஎஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. இப்படத்தில், கயல்’ சந்திரமௌலி, சாட்னா டைட்டஸ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், சாம்ஸ், டேனியல் ஆன் போப், அர்ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்டிசி பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கயல் சந்திரமெளலி பேசியதிலிருந்து… “கயல் படத்திற்கு பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் […]
Read More‘வல்லமை தாராயோ’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மதுமிதா, ‘கொலகொலயா முந்திரிக்கா’, மூணே மூணு வார்த்தை’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து, அவர் இயக்கியிருக்கும் ‘கே டி’. இப்படம் சர்வதேச அளவில் ஒரு தமிழ் படத்தை நோக்கி உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சமுதாயத்தில் இன்றளவும் நடைமுறையில் இருந்துவரும் ‘தலைக்கூத்தல்’ எனும் ஒரு பழமையான சடங்கு, ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் தீவிரமான தாக்கத்தை, யதார்த்தம் குறையாமல், புதுமையான முறையில் மிகவும் உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். வாழ்வின் இறுதி நிலையில் […]
Read Moreவிஜய்யின் ‘பிகில்’ படத்துக்கு எதிராக, அதன் கதை திருடப்பட்டதாக் கூறிய வழக்கு ஒன்று வந்தது. பின்பு அதை மனுச் செய்தவரே திரும்பப் பெற்ற நிலையில் அடுத்து உயர்நீதி மன்ற அப்பீலுக்குப் போக முடியாத உத்தரவில் அப்படியே நின்று கொண்டிருக்கிறது. அடுத்து இரு நாள்களுக்கு முன் நடந்த ‘பிகில்’ ஆடியோ விழாவில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படாமல் டிக்கெட் வாங்கியவர்களெல்லாம் நிகழ்ச்சியைப் பார்க்காமலேயே திரும்பி வந்த நிகழ்வு அரங்கேறியது. இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்தில் கறிக்கடை உரிமையாளர்கள் ஒன்றிணைந்து ‘பிகில்’ […]
Read Moreஇயக்குநர்கள் கையில் காசு சேர்ந்ததும் தயாரிப்பாளர்களாக மாறியிருக்கும் கோலிவுட்டில் ஒரு வித்தியாசமாக தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக மாறியிருக்கிறார் சுரேஷ் காமாட்சி. ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைக்கிறார். இதில் ‘ஸ்ரீபிரியங்கா’ பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை […]
Read More