April 24, 2024
  • April 24, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நண்பர்களுடன் கஞ்சா அடித்தேன் கே பாக்யராஜ் அதிர்ச்சி தகவல்
February 18, 2020

நண்பர்களுடன் கஞ்சா அடித்தேன் கே பாக்யராஜ் அதிர்ச்சி தகவல்

By 0 570 Views

3rd Eye கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கி ‘அட்டு’ நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மரிஜுவானா’.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதிலிருந்து…

தயாரிப்பாளர் எம்.டி.விஜய் –

“மரிஜுவானா’ என்ற இந்த படத்தின் பெயரைக் கூறியதும் அப்படி என்றால் என்ன என்று கேட்டார்கள். ‘கஞ்சா’ என்பதன் அறிவியல் பெயர் தான் ‘மரிஜுவானா:.

கஞ்சா போன்ற போதை பொருட்களைப் பயன்படுத்துவதால் பள்ளி குழந்தைகளும், இளைஞர்களும் எந்தளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இப்படத்தில் கூறியிருக்கிறோம். இப்படத்தின் கதையை பல முன்னணி நாயகர்களிடம் கூறினோம். ஆனால், ரிஷி மட்டும் தான் நடிக்க ஒப்புக்கொண்டார்..!”

நாயகன் ரிஷி ரித்விக் –

“இப்படத்தின் கதையைக் கேட்டதும் சமுதாயத்திற்கு சிறந்த கருத்தைக் கூறும் படமாக இருந்தது. ஆகையால், எனக்கு சம்பளம் வேண்டாம் நான் நடிக்கிறேன் என்று கூறினேன்..!”

இயக்குநர் மிஷ்கின் –

“ஆர்.கே.செல்வமணியும் பாக்யராஜும் எனக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருந்தவர்கள். அதேபோல், நீங்கள் தான் எனக்கு தூண்டுதலாக இருக்கிறீர்கள் என்று எம்.டி.ஆனந்த் கூறினார். ஆகையால் தான் இந்த விழாவிற்கு வர சம்மதம் தெரிவித்தேன். இந்த விழாவைப் பார்க்கும் போது வெற்றி விழாவாகத் தோன்றுகிறது..!”

இயக்குநர் பாக்யராஜ் –

“இந்த படத்தின் பெயருக்கு அர்த்தம் கேட்ட போது, கஞ்சா என்று கூறினார்கள். 45 வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து நானும் கஞ்சா அடித்திருக்கிறேன். ஒரு முறை போதையில் என் நண்பன் தன்னிலையறியாமல் இருப்பதைப் பார்த்தேன். இப்படி இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது என்று அன்று முதல் கஞ்சா அடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டேன்.

இப்படம் கஞ்சா உபயோகிப்பதன் பாதிப்பை கூறுவதால் இளைஞர்களுக்கு விழிப்புணர்வாக அமையும்..!”

இயக்குநர் எம்.டி.ஆனந்த் –

“நான் இங்கு நிற்பதற்கு காரணம் என் அம்மா. அதிக அளவு போதை ஒரு மனிதனின் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதை தான் இப்படத்தில் கூறியிருக்கிறேன். மேலும், தணிக்கைக் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் குடுத்திருக்கிறார்கள். ஆனால், இது விழிப்புணர்வு படம் மட்டுமே.

கார்த்திக் குரு இசையில் அனைத்து பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது.

‘அட்டு’ படத்தைப் பார்த்து இது மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று என் தம்பியிடம் கூறினேன். ஆனால், ‘அட்டு’ நாயகன் ரிஷி ரித்விக்கை வைத்து படம் இயக்கியத்தில் மகிழ்ச்சி. நாயகி ஆஷா எல்லா விதமான காட்சிகளிலும் தைரியமாக நடிக்க கூடியவர்..!”

நிகழ்ச்சியின் இறுதியாக, ‘மரிஜுவானா’ படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது.