June 20, 2025
  • June 20, 2025
Breaking News
August 20, 2021

மரபு மறந்த மனிதனின் கதையைச் சொல்லும் மரபு

By 0 395 Views

அறிமுக இயக்குநர் விக்டர் இம்மானுவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்து இயக்கியுள்ள படம் ‘மரபு’.

இதில் இவருக்கு ஜோடியாக இலக்கியா நடித்திருக்கிறார். வில்லனாக ஆனந்த பாபுவும், நாயகியின் அம்மாவாக கருத்தம்மா ராஜஶ்ரீயும் நடித்திருக்கிறார்கள்.

இது மரபுசார் பண்புகளை மறந்து அற்பமான விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம்.

எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் அனுபவமுள்ள பிரபல தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.இந்தப் படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு அதற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளது.

ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

படத்திலn தலைப்புக்கு ஏற்றவாறு மரபு ரீதியாகவே தியேட்டர் திறந்ததும் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம். தொடர்ந்து ஓடிடியிலும் எதிர்பார்க்கலாம்.