April 24, 2024
  • April 24, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அம்மா இறந்த சில தினங்களில் மரணம் அடைந்த பிரபல இந்திய நடிகர்
April 29, 2020

அம்மா இறந்த சில தினங்களில் மரணம் அடைந்த பிரபல இந்திய நடிகர்

By 0 605 Views

1988 ஆம் ஆண்டு வெளியான ‘சலாம் பாம்பே’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இர்பான் கான், தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம் மற்றும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வந்தார்.

2017-ல் இவர் நடித்து வெளியான ஹிந்தி மீடியம் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரிய வெற்றி பெற்றது.

2011-ல் பான் சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

மேலும், ‘லைஃப் ஆஃப் பை’, ‘ஜுராசிக் வேர்ல்டு’ போன்ற ஆங்கிலப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் இர்பான் கானின் தாயார் சாயிதா பேகம், முதுமை காரணமாக மரணம் அடைந்தார்.

இவருக்கும் அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. 

நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இர்பான் கானுக்கு நேற்று இரவு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். அவரது மரணம் பாலிவுட் சினிமாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் பெரும் மன அழுத்த பிரச்சினைக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.

இர்பான்கான் கடந்த 2018ம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.