September 19, 2026
  • September 19, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • எனக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது பொய் செய்தி – ஷங்கர்
February 1, 2021

எனக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது பொய் செய்தி – ஷங்கர்

By 0 682 Views

நேற்று முன்தினம் ஊடகங்களில் எந்திரன் கதை பற்றிய வழக்கு விவகாரத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளதாக செய்திகள் வந்தது.

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இயக்குனர் ஷங்கர் இன்று அதற்கான விளக்கத்தை ஒரு அறிக்கையாக அனுப்பியிருக்கிறார்.

அதில் தனக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் எந்த பிடிவாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என்று உறுதி செய்ததுடன் அது நீதிமன்ற செய்திகள் பதிவேற்றம் செய்வதில் நடந்த கோளாறு என்று தெரிவித்திருக்கிறார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி இருக்கும் அறிக்கை கீழே…

Director Shankar's statement

Director Shankar’s statement