March 29, 2024
  • March 29, 2024
Breaking News
August 15, 2020

இந்திய சுதந்திர நாளில் தோனியும் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ஏன்

By 0 735 Views

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாக தான் இருக்கும். ஆம்..!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி திடீரென அறிவித்திருக்கிரார்.

இதற்கு அடுத்த அதிர்ச்சியாக அடுத்த சில  நிமிடங்களில் சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

தோனி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி இன்று 7.29 மணி முதல் நான் ஓய்வுப்பெறுகிறேன்” என பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில்… “உங்களுடன் விளையாடிய நாட்கள் அருமையானது. முழு திருப்தியுடன் நானும் உங்கள் வழியை தேர்ந்தெடுக்கிறேன்.

உங்களின் பயணத்தில் பங்கேற்கிறேன். இந்தியாவுக்காக விளையாடியது மிகப்பெரிய பெருமை, நன்றி இந்தியா. ஜெய் ஹிந்த்” என பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான்கள் இருவரும் ஓய்வு பெறுவதற்கு ஏன் இந்திய சுதந்திர தினத்தை தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும் என்பதுதான் ஆகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

தோனியின் இந்த முடிவு குறித்து சச்சின் டெண்டுல்கர் தன் டிவிட்டர் பக்கத்தில தோனியுடைய குடும்ப வாழ்வில் இரண்டாவது இன்னிங்சை தொடர வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.