கொரோனா சோகம் நெல்லை இருட்டுக்கடை அல்வா அதிபர் தற்கொலை

வரலாற்றைத் திருத்தி சொல்லக்கூடிய அவசியம் எனக்கு இல்லை – அமீர்
அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு,
நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர் ஒருவர் மறைந்து விட்டால் அவரைப் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொள்வது மனித மாண்பு. அதுவே இன்று வரை நம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.
அந்த வகையில் மறைந்த எம்எல்ஏ அண்ணன் ஜெ. அன்பழகனை நினைவு கூறும் விதமாக பல்வேறு நிகழ்வுகளை சொல்லிக்கொண்டிருக்கும் போது மேலதிகமாக மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சென்னையில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டு பாண்டி பஜார் காவல் நிலையத்திலிருந்த தேசியத் தலைவர் பிரபாகரன்…
Read Moreடிவி செய்தியாளர் வரதராஜன் வெளியிட்ட வைரல் வீடியோ – 4 பிரிவுகளில் வழக்கு
தொலைக்காட்சி செய்தியாளரும் நடிகருமான வரதராஜன் இன்று ஒரு காணொளியை வாட்ஸ் அப்பில் பரவ விட்ட வைரல் ஏற்படுத்தினார்.
அந்த காணொளியில் அவரது உறவினர் புரோனோ நோயினால் பாதிக்கப்பட்டதாகவும் அவரை அட்மிட் செய்வதற்கு பல மருத்துவ மனைகளுக்கு அலைந்தும் அவருக்கு படுக்கை வசதி இல்லாததால் அட்மிஷன் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் “வரதராஜன் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதிய இட வசதி இருக்கிறது. இதனால் தவறான…
Read More
உலக மக்கள் சேர்ந்து படித்த ஒரே பாடம் கொரோனாதான் – காமெடி சூரி சீரியஸ் பேச்சு
நகைச்சுவை நடிகர் சூரி அவர்கள் வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.
“வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்” மற்றும் “மாற்றம் பவுண்டேஷன்” மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி அவர்கள் முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.அப்போது வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் மனிதாபிமான செயலை அவர் பாராட்டினார்.
நடிகர் சூரி பேசுகையில்,
“எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்றுதிறனாளிகளுக்கும் எனது வணக்கங்கள்.எல்லோரும்…
Read More
சென்னையில் சேவையைத் தொடங்கியது ஊபர் கால் டாக்சி
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய பொது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட தைத் தொடர்ந்து அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடங்கின.
கால் டாக்சி சேவையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஊபரும் சேவையை நிறுத்தியது.
மே மாதம் 25-ந்தேதி உள்நாட்டு விமான சேவையை மத்திய அரசு தொடங்கியதனால் விமான நிலையத்திற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனவே நேற்றில் இருந்து ஆட்டோ, கால் டாக்சி போன்றவை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையின் பல பகுதிகளில்…
Read More
காட்சி ஊடகங்களில் சாதி மத பிரச்சனை தென்பட்டால் புகார் அளிக்க வேண்டிய முகவரி
சமூக வலைதளங்கள், டிவிக்கள், மற்றும் ஒடிடி தலங்கள், ஆன்லைன் தொடர் உள்ளிட்டவற்றில், ஜாதி, மத துவேஷத்தை தூண்டும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பினால், அது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்க வேண்டிய முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜீ 5 எனும் ஓடிடி தளத்தில் வெளியான ‘காட்மேன்’ டீசரில், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த தொடரை தடை செய்ய வலியுறுத்தி போலீசில்…
Read More
ரஜினியை தொடர்ந்து டிஸ்கவரி சேனலில் குரல் பதிக்கும் பிரகாஷ்ராஜ்
டிஸ்கவரி சேனல் தொலைக்காட்சி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ‘இன் டூ த வைல்ட் ‘ என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்.
அதுதான் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. அந்த எபிசோடும் பரவலான வரவேற்பைப் பெற்றது.
தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் அதே டிஸ்கவரியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு வர்ணனையாளராக மாறி இருக்கிறார்.
இது குறித்து அவர்’ இது ஓர் அர்த்தமுள்ள பயணம். இயற்கையின் குரலாக நான் மாறப்போகிறேன். இதுவரை இல்லாத அளவிற்கு…
Read More
திறந்த மூன்றாம் நாளே வெறிச்சோடிய மதுக்கடைகள்..?
மே 16, 17 ஆகிய இரண்டு நாட்களிலும் மது விற்பனை சுமார் 300 கோடி ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று பெரும்பாலான மதுக்கடைகளில் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடி கிடப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், டோக்கன் எண்ணை ஒலிபெருக்கியில் அறிவித்து, மதுப்பிரியர்களை கூவி கூவி அழைக்கும் நிலை ஏற்பட்டதாம்.
மதுக்கடை திறந்த மூன்றாவது நாளிலேயே, மதுப்பிரியர்களின் வருகை குறைந்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
அதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள…
Read More
வங்கக்கடலில் உருவானது ஆம்பன் புயல்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண் டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வங்கக்கடலில் உருவாகும் இந்த புதிய புயலுக்கு ஆம்பன் என பெயரும் வைத்திருந்தார்கள்.
இந்நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆம்பன் புயல் வரும் 20-ந்தேதி மேற்குவங்காளம் மற்றும் ஒடிசா அருகே நகரும் என…
Read More