அஜித் ரசிகர்களால் கல்லூரி கட்டணம் கட்டப்பெற்ற ஏழை மாணவி..!
அஜித் நடிப்பில் உருவான ‘வலிமை’, தமிழ்நாடு முழுவதும் 24-ம் தேதி வெளியாகி வசூலில் முன்னிலை வகிக்கிறது.
அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் சூழலில் தூங்காநகரமான மதுரை மேலுரைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் கல்லூரி படிக்கும் ஏழை மாணவி ஒருவருக்கு காலேஜ் கட்டணம் கட்டி உதவி இருக்கிறார்கள்.
அதுவும் அவர்கள் வலிமை படத்துக்காக கட்டவுட் நிறுத்துவதற்காக சேர்த்து வைத்த தொகையை வைத்துதான் இந்த கட்டணத்தை கட்டி இருக்கிறார்கள் என்பது…
Read More
அன்பு செழியன் மகள் சுஷ்மிதா – சரண் திருமணத்தில் கமல் ரஜினி நேரில் வாழ்த்து
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் திரு அன்புசெழியன் அவர்களது இல்ல திருமண விழா இன்று 21 பிப்ரவரி 2022 காலை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
மணமகள் சுஷ்மிதா MBA – மணமகன் R.சரண் MBA இருவரையும்,
தமிழ் சினிமா பிரபலங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தயாரிப்பாளர்…
Read More
உன்னைக் காணாத நான் இன்று நானில்லையே – பிர்ஜு மகராஜ் மறைவு பற்றி கமல்
பாரம்பரிய நடனங்களில் ஒன்றான கதக் நடனத்தில் தன்னிகர் இல்லாமல் தலை சிறந்து விளங்கியவர் லக்னோவை சேர்ந்த பிர்ஜு மகராஜ்.
இந்தியாவின் உயரிய பெருமைகளுள் ஒன்றான பாரத் விபூஷன் பட்டம் பெற்ற அவர் இரண்டு முறை இந்திய சினிமாவில் தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். தவிர உயரிய இசை நடன விருதுகள் பலவற்றையும் அவர் பெற்றிருக்கிறார்.
கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தில் வரும் கதக் நடனங்கள் அனைத்தையும் பிர்ஜு மகராஜ்…
Read More
மக்கள் நலனைக் காக்க கார்த்தியின் கையெழுத்து வேட்டை
தினமும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள நச்சுத்தன்மைகள் குறித்துப் பல்வேறு செய்திகளைப் படித்து தினசரி படித்து வருகிறோம். நடிகர் கார்த்தி படிப்பதோடு நின்றுவிடாமல், அதைத் தடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
தற்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மக்களிடம் ஆன் லைன் வழியாக கருத்து கேட்டு வருகிறார்கள். இதற்கு, மரபணு…
Read More
பா இரஞ்சித் முன்னெடுக்கும் பண்பாட்டு முயற்சிகளுக்கு விசிக துணை நிற்கும் – தொல் திருமாவளவன்
இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். அவற்றுள் மிக முக்கியமான ஒன்று “மார்கழியில் மக்களிசை” ஆகும்.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெற்று வந்த இந்நிகழ்வு, இந்த ஆண்டு கோவை, மதுரை, சென்னை ஆகிய பெருநகரங்களில் நடைபெற்றது. கோவை மற்றும் மதுரையில் ஒரு நாளும், சென்னையில் 8 நாட்களும் மிகவும் கோலாகலமான எளிய உழைக்கும் மக்களின் இசைத்திருவிழாவாக…
கலைஞர் கருணாநிதியின் தனி உதவியாளராக இருந்த சண்முகநாதன் காலமானார்
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் (80) உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்..சுமார் 48 ஆண்டுகள் கலைஞரின் பி.ஏ-வாக இருந்த சண்முகநாதன் கலைஞர் முதல்வராக இல்லாத போது அவரது உதவியாளராக பணியை தொடர தனது அரசு பதவியை துறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞரின் வாழ்க்கையில் நிழலாக இருந்தவர் விண்ணுலகிலும் அவ்ருக்கு உதவ சண்முகநாதன் காலமாகி விட்டார் என்றுதான் தோன்றுகிறது
Read More
டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடிதத்துக்கு நடிகர் சூர்யா பதில்
ஜெய் பீம் படம் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அனுப்பிய கடிதத்துக்கு இன்று பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார் நடிகர் சூர்யா. அது வருமாறு…
மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு,
வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி.
நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், ‘அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு…
Read More
கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் திடீர் மரணம் – சோகத்தில் கர்நாடகா
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் வருகிறார்.
இன்னும் மருத்துவமனையில் இருந்து அவரது உடல்நிலை பற்றிய தெளிவான விளக்கம் வராத நிலையில் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் புனீத் ராஜ்குமார் (வயது 46) மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் உயிரிழந்தார்.
இன்று காலை 11.30க்கு உடற்பயிற்சியின் போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பெங்களூரில் உள்ள…
கமல் பாரதிராஜா இளையராஜாவுக்கும் பால்கே விருது வழங்க வைரமுத்து கோரிக்கை
டெல்லியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
பாலியல் புகார் தொடர்பில் இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது வழக்கு பதிவு
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், மதுரை பாந்தர்ஸ் என்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளர் தாமோதிரன் மகனும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது தெரிந்த விஷயம்.
தற்போது ஷங்கரின் மருமகன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போலீசார் பரபரப்பு வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னணி இயக்குனரின் மருமகன் பாலியல்…
Read More