April 15, 2026
  • April 15, 2026
Breaking News

Currently browsing சமுதாயம்

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலைக்கு வாய்ப்பு – முக்கிய செய்திகள்

by by May 4, 2021 0

தமிழகத்தில் ஒரேநாளில் 21,228 பேருக்கு கொரோனா தொற்று – 144 பேர் உயிரிழப்பு.

சென்னையில் ஒரே நாளில் 6228 பேருக்கு கொரோனா பாதிப்பு.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்.

ஜே.இ.இ நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சர்.

இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீச வாய்ப்புள்ளது.பகுதி நேர, இரவு நேர ஊரடங்கால் எந்த பயனும் இருக்காது – எய்ம்ஸ் இயக்குநர்.

நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் திமுக…

Read More

ஜூலை வரை தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் – முக்கிய செய்திகள்

by by May 3, 2021 0

மே மாதம் நடைபெற உள்ள எழுத்துப்பூர்வமான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு  : கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு உத்தரவு. 

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை – திமுக தலைவர் ஸ்டாலின். 

மே 5ஆம் தேதி மேற்குவங்க முதல்வராக பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி. 

எடப்பாடி பழனிசாமியின் ராஜினாமாவை ஏற்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால். 

கொரோனா தடுப்பு பணிகளுக்கு 71 கோடி ரூபாயை ஒதுக்கிய எஸ்பிஐ வங்கி. 

தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம். 

வரும் 7ஆம்…

Read More

இந்திய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியது – முக்கிய செய்திகள்

by by Apr 28, 2021 0

இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது – உலக சுகாதார நிறுவனம்.

தமிழகத்தில் ஒரேநாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று – 98 பேர் உயிரிழப்பு.

அண்ணா பல்கலைக்கழகம் அடுத்த மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைப்பு.

தமிழக கட்சிகளின் முடிவு ஒருதலைப்பட்சமானது – ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர்.

மே 1 முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை – பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்.

ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேரத்தை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும்…

Read More

மன்சூர் அலிகானை கைது செய்தால் என்ன செய்வாராம் தெரியுமா..?

by by Apr 20, 2021 0

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.  அதற்கு முதல்நாள் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாஜகவின் பாரத பிரதமர் மக்கள் நலத் திட்டங்கள் பிரச்சார விளம்பர அமைப்பின் செயலாளர் ராஜசேகரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.

அதில், ‘கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் நடிகர் விவேக்குக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும், யாரும் முகக்கவசம்…

Read More

சின்னக் கலைவாணர் விவேக் காலமானார்

by by Apr 17, 2021 0

தான் நடித்த படங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை நகைச்சுவை மூலம் சொல்லிி வந்ததால் சின்னக்்் கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று 4:45 அளவில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.

நேற்று முன்தினம் அவர் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட நிலையில் நேற்று மாரடைப்பின் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு  ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு உயிர் காக்கும் கருவியாக எக்மோ சிகிச்சை…

Read More

கமல் கார் தாக்கப்பட்டது – தாக்கிய நபர் போலீசில் ஒப்படைப்பு

by by Mar 14, 2021 0

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார்.

காந்திரோடு பகுதியில் பரப்புரையை முடித்துக்கொண்டு கமல்ஹாசன் கிளம்பும்போது வாலிபர் ஒருவர் அவரின் காரை வழிமறித்தார். இதையடுத்து கமல்ஹாசனின் பவுன்சர்கள் அவரை அப்புறப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து மீண்டும் அந்த நபர் கமல்ஹாசனின் கார் மீது ஏறி அவர் அமர்ந்திருந்த முன்பக்க கண்ணாடியை உடைத்தார். இதில் கண்ணாடி சேதமடைந்தது. பவுன்சர்கள் மீண்டும் அந்த நபரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். உடனே…

Read More

கமல் போட்டியிடும் கோவை தெற்கு – தொகுதி குறித்த அலசல்

by by Mar 12, 2021 0

கோவை மாவட்டத்தின் தலைமையிடமாக இருப்பது கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி.

மணிக்கூண்டு, கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில், விக்டோரியா மகாராணி நினைவாக 1892-ல் கட்டப்பட்ட நகர் மண்டபம் (மாநகராட்சி கட்டிடம்) ஆகியவை இத்தொகுதியின் அடையாளங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தின் அடையாளங்களாக விளங்குகிறது.

நகரின் மையமாகவும், வணிக கேந்திரமாகவும் உள்ள டவுன்ஹால், காந்திபுரம், உக்கடம் பகுதிகள் இந்த தொகுதியில்தான் வருகின்றன. இந்த தொகுதியில் அனைத்து விதமான தொழில்களும் நடக்கின்றன. குறிப்பாக ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள்,…

Read More

சதுரங்க வேட்டை பாணியில் போலி இரிடிய கலசம் விற்ற இருவர் கைது

by by Feb 23, 2021 0

சென்னை சாலிகிராமம் வேலாயுதம் காலனியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபகிறார் நியூட்டன்.

சினிமா போட்டோ கிராபரான இவர் தனது நண்பரான ஆடிட்டர் ரகுஜியுடன் சேர்ந்து ‘இரிடியம் கலசம்’ குறைந்த விலைக்கு கொடுப்பதாகவும் அதை வாங்கி விற்றால் பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்றும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாரிடம் ஆசை வார்த்தை கூறி இருக்கிறார்.

இதை நம்பி சதீஷ்குமார் தனது நண்பர்களுடன்  சேர்ந்து இரிடியம் கலசம் வாங்க முடிவு செய்து ரூ.67 லட்சம் பணத்தை நியூட்டனிடம்…

Read More

ஆன்லைன் பாடங்கள் புரியாததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

by by Feb 11, 2021 0

ஆன்லைன் வகுப்பில் நடத்திய பாடங்கள் புரியவில்லை – கடிதம் எழுதிவைத்து மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

3 மாதத்திற்குள் 11 ஆம் வகுப்பு பாடங்களை முழுமையாக படிக்க முடியாது என அஞ்சி, சென்னை கொளத்தூரில், 16 வயது மாணவன், வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

இங்குள்ள டேனிஷ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த மாணவன் பிரவீன், கொரோனா ஊரடங்கு காலத்தில், ஆன்லைன் வகுப்பு பாடங்கள் புரியாமல் தவித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

பள்ளிகள் திறந்து இரண்டொரு நாட்கள் பள்ளிக்கு…

Read More

யானையை எரித்துக் கொன்றதாக இருவர் கைது – யானை எரியும் அதிர்ச்சி வீடியோ

by by Jan 22, 2021 0

நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொக்காபுரம் பகுதியில் 40 வயது ஆண் யானை முதுகில் காயத்துடன் சுற்றி வந்திருக்கிறது.

இந்த யானைக்கு வனத்துறையினர் இரண்டு மாதங்களுக்கு முன் மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளித்த்னர். ஓரளவு குணமடைந்த யானை மசினகுடி மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடியது.

இதனால் பொது மக்களுக்கு, ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருந்ததால் யானையைப் பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்து துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க மருந்து…

Read More