April 28, 2024
  • April 28, 2024
Breaking News

Currently browsing அரசியல்

நிரம்பி வழியும் வெளியூர் பஸ்கள் – நம்பிக்கை தரும் அமைச்சர்

by by Mar 23, 2020 0

கொரோனா முன் எச்சரிக்கை காரணமாக மாநிலம் முழுவதும் நாளை மாலை முதல், 144 தடை உத்தரவு அமலாகிறது.

இதனால் சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளால் கோயம்பேடு பேருந்து நிலையம் நிரம்பி வழிகிறது. பயணிகள் பலரும் பஸ்களில் இடம் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி விபரம்:

“சென்னையில் இருந்து நாளை மாலை வரை, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். ஆகையால் பயணிகள் கவலைப்பட தேவையில்லை.

சென்னை மாநகரப் பேருந்துகளையும் திருச்சி, திருவண்ணாமலை,…

Read More

சென்னை ஈரோடு காஞ்சிபுரம் மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவு

by by Mar 22, 2020 0

இன்று 22 மார்ச் 2020 அன்று சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இன்று நாடுமுழுவதும் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளே முடங்கினர்.
 
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இன்று பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தலா ஒருவர் பலியாகியதை அடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370-ஐ தாண்டியுள்ளது.
 
இதனால் மத்திய அரசு கொரோனாவால் பாதித்த நாட்டில் உள்ள 75 மாவட்டங்களில் தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துக்கொள்ளலாம் என்று…

Read More

சூரிய ஒளியில் நின்றால் கொரோனா குணமாகும் – பாஜக இணை மந்திரி கண்டுபிடிப்பு

by by Mar 19, 2020 0

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 2 லட்சத்து 19 ஆயிரத்து 367 பேருக்கு பரவியுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 970 பேரை இந்த வைரஸ் பலி வாங்கியுள்ளது.

இந்தியா முழுதும் இதுவரை இந்த வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151லிருந்து 166 ஆக உயர்ந்துள்ளது கவலை அளிக்கிறது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  

உலகம் முழுவதும், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீள தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவம் மற்றும் அறிவியல் அறிஞர்கள்…

Read More

சட்டசபை வந்த உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை

by by Mar 16, 2020 0

இந்தியாவில் கொரோனா வைரசால் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
 
தமிழகத்தில் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த எம்எல்ஏக்களுக்கு கொரோனா அறிகுறிகள் தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது.
 
சோதனைக்கு பிறகே எம்எல்எக்கள் சட்டசபைக்குள்  அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் சட்டசபை ஊழியர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது.
 
தமிழகத்தில்…

Read More

தலைவர் மீது துரும்பு பட்டாலும் – தமிழக அரசை எச்சரித்த மக்கள் நீதி மையம்

by by Mar 3, 2020 0

கடந்த மாதம் 19 ஆம் தேதி (பிப்ரவரி 19) ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் கமல் கூறியபோது, “விபத்து நிகழ்ந்ததற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், அந்த தளத்தைவிட்டு வெளியேறினேன்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு காவல்துறை  சென்னை வேப்பேரி மத்திய…

Read More

டெல்லி வன்முறை அமித்ஷாவுக்கு ரஜினி கண்டனம் – கமல் வரவேற்பு

by by Feb 26, 2020 0

இன்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் டெல்லி கலவரம் பற்றி பரபரப்பான பேட்டி அளித்தார். அதிலிருந்து…

 ” சிஏஏ சட்டமாக்கப்பட்டு விட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் சாதகமாக தீர்ப்பு வருமா என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரை சிஏஏ திரும்ப பெறப்படாது என்று தெரிகிறது.

இதை சொன்னால் பாஜகவின் ஊதுகுரல் என மூத்த அரசியல் பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்கள் என்னை விமர்ச்சிக்கின்றனர். சில கட்சிகள் மதரீதியாக மக்களை தூண்டுகின்றனர்.

இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஊடகங்கள் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும்…

Read More

தமிழகத்திலும் புதிய அரசியல் நிகழ வேண்டும் – கமல்

by by Feb 12, 2020 0

சென்னை விமான நிலையத்தில் தில்லியிலிருந்து திரும்பிய கமல்ஹாசன் செய்தியாளா்களிடம் சொன்னது:

பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேனா என்று கேட்கிறீா்கள். ஒருபோதும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேன் என்று கூறவில்லை. ஆதரவு அளிக்க மாட்டேன்.

தில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது குறித்து கேட்கிறீா்கள். நல்லது நடக்கும்.

தில்லியில் பாஜகவை ஆம் ஆத்மி வீழ்த்தியதுபோல நாடு முழுவதும் பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என விரும்புகிறீா்களா எனக் கேட்கிறீா்கள்.

கண்டிப்பாக. தமிழகத்திலும் புதிய அரசியல் நிகழ வேண்டும் Read More

ரஜினிக்கு சம்மன் அனுப்ப சீமான் தான் காரணம்..?

by by Feb 4, 2020 0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

 
இதுவரை 18 கட்ட விசாரணை முடிந்துள்ள…

Read More

நம்மவர் மோடி பைக் ரேலி – திணறியது கேளம்பாக்கம்

by by Jan 27, 2020 0

பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசார் அபியான் PMJKYPPA (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) நடத்தும் ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வலம் முன்னோட்டம்.

பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசார் அபியான் அமைப்பின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் நிர்வாகிகளை அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் அவர்கள் இந்த ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வல முன்னோட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் திரு. கண்ணன் கேசவன் காஞ்சிபுர…

Read More

சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளிவருவார்

by by Jan 24, 2020 0

சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் பேட்டியளித்தார்.

“தந்தை பெரியார் தனி ஒரு மனிதர் அல்ல, அவர் ஒரு மிகப்பெரிய இயக்கம். தந்தை பெரியார் குறித்து ரஜனிகாந்த் ஊண்மைக்குப் புறம்பாக பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடப்பதை மக்க்ள் ஆட்சியாகவே நினைக்கவில்லை. தம்ழியகத்தில் எடப்பாடியின் தலைமையில் ‘ஆட்சி’ நடக்கவில்லை – ‘கம்பெனி’தான் நடைபெற்று வருகிறது.

இங்கு பெண்கள் மீதான தாக்குதல்களும், பாலியல் வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சசிகலா சிறையில்…

Read More