April 27, 2024
  • April 27, 2024
Breaking News
June 24, 2020

பாக்ஸர் படம் தொடங்கும் முன்பே தொடங்கிய குஸ்தி

By 0 448 Views

‘அக்னிச் சிறகுகள்’, ‘சினம்’, அறிவழகன் இயக்கி வரும் படம் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அருண் விஜய்.

ஆனால் இந்தப் படங்களுக்கெல்லாம் முன்பு தொடங்கப்பட்ட படம் ‘பாக்ஸர்’. இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை.

ஆனால், இந்தப் படத்தின் கதைக்காக ஃபாரினுக்கெல்லாம் போய் ஏதேதோ கலைகள் எல்லாம் கற்று உடலமைப்பை முழுமையாக மாற்றினார் அருண் விஜய்.

ஆனாலும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கப்படாததால், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிட்டார் அருண் விஜய். ‘

Boxer Announcement by Hema Rukmani

Boxer Announcement by Hema Rukmani

இச் சூழலில், நேற்று (ஜூன் 23) ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹேமா ருக்மணி ‘பாக்ஸர்’ குறித்த முக்கியமான அப்டேட் வெளியிடவுள்ளார் என்று படக்குழுவினர் விளம்பரப்படுத்தினார்கள்.

இது சமூக வலைதளத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகி படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது என்று பலரும் நம்பினார்கள். அத்துடன் அதை அருண் விஜய் கவனத்துக்கும் கொண்டு சென்றார்கள்.

அதன் விளைவாக, இன்று (ஜூன் 24) காலை அருண் விஜய் தனது ட்விட்டர் பதிவில் சிறிய கடிதமொன்றை வெளியிட்டு பாக்ஸர் டீமுடன் முரண்பட்டு இருப்பதை தெரிவித்திருக்கிறார்.

“உங்களைப்போலவே நானும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘பாக்ஸர்’ படம் குறித்து என்னிடம் உங்களில் பலர் கேட்டு வருகிறீர்கள். இந்தப் படத்துக்காக என்னைத் தயார்படுத்த நான் மிகவும் கடினமாக உழைத்து வந்தேன்.

ஆனால், இன்னும் முழுமையான படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. உடலளவிலும் மனதளவிலும் அதிக முயற்சியும் உழைப்பும் இப்படத்துக்குத் தேவை என்பதால் அது குறிப்பிட்ட காலகட்டத்தில நடக்க வேண்டும். அது தயாரிப்பு நிர்வாகத்தின் தெளிவான அறிவிப்பால் மட்டுமே சாத்தியமாகும்.

எனவே இப்படம் குறித்த எனது அதிகாரபூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்கவும். நன்றி…” என்று  அருண் விஜய் அறிவித்ததன் மூலம் ‘பாக்ஸர்’ படத்தில் சிக்கல் உருவாகியுள்ளது தெளிவாகிறது.

இந்நிலையில் இன்று (ஜூன் 24) மாலை 5 மணியளவில் திட்டமிட்டப்படி ஹேமா ருக்மணி ‘பாக்ஸர்’ குறித்த அப்டேட் வருமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.