April 27, 2024
  • April 27, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • யோகி பாபுவை வைத்து பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ட்ரிப்
January 25, 2021

யோகி பாபுவை வைத்து பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ட்ரிப்

By 0 421 Views

நரமாமிசம் உண்ணும் காட்டுவாசி குழுவை மையமாக வைத்து காமெடி, அட்வெஞ்சர், திரில்லர் பாணியில், தமிழில் முதல் முறையாக உருவாகும் படம் “ட்ரிப்”.

பிப்ரவரி 5, 2021 அன்று உலகளவில் திரையரங்கில் வெளியாகவுள்ள இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்குகிறார். Sai Film Studios சார்பில் A.விஸ்வநாதன் மற்றும் E.பிரவீன்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்கள். சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

“ட்ரிப்” படத்தின் ட்ரெய்லர் படக்குழு மற்றும் பத்திரிக்கையாளர் முன்னிலையானா விழாவில் நேற்று வெளியானது.

விழாவினில் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் கூறியதாவது…

மிகவும் நேர்த்தியான அதே நேரம் ரசிகர்கள் கொண்டாடும்படியான கமர்ஷியல் திரைக்கதையை உருவாக்க நினைத்தேன். தமிழ் சினிமா ஏற்கனவே ஜாம்பிகளை கொண்டு படமெடுத்து விட்டது. எனவே நான் கொஞ்சம் வித்தியாசமாக நரமாமிச குழுவை மையப்படுத்தி படமெடுக்க நினைத்தேன்…” என்றார்.

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் கூறியதாவது…

“பொது முடக்க காலத்தில் யாரும் இனி திரையரங்கிற்கு வரமாட்டார்கள் என்கிற மாயையை “மாஸ்டர்” படம் உடைத்திருக்கிறது. ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் திரையரங்கில் படத்தை ரசிப்பது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்தால் ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த பல படங்கள் தற்போது பின்வாங்கிட்டன.

சினிமா மீது பெரும் அர்ப்பணிப்பும் காதலும் கொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புதிய வரவுகளை கொண்டு உருவாகும் இப்படத்தின் மீது பெரும் நம்பிக்கையுடன் பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளார்கள்.

யோகிபாபுவை வைத்து இயல்பாக எடுக்கப்படும் பட்ஜெட்டை விட பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளார்கள். இப்படத்தில் கண்டிப்பாக நல்ல லாபத்தை அடைவார்கள்..!”

நடிகை சுனைனா கூறியதாவது…

“படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, ஒரு நாயுடன் நடிக்க போவதாக கூறினார்கள் ஆனால் படப்பிடிப்பில் பார்த்தால் பிட்புல் இருந்தது. அதனோடு நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. முதலில் என்னோடு நட்பாக இருக்குமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் போகப்போக நாங்கள் நண்பர்களாக ஆகிவிட்டோம். இருவரும் இணைந்து ஆக்சன் காட்சியில் நடித்துள்ளோம்..!”

நடிகர் கருணாகரன் கூறியதாவது…

“இப்படத்தில் பணிபுரிந்தது மிக அற்புதமான ஒரு அனுபவமாக இருந்தது. இன்று சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு அங்கிருந்து மன்னிப்பு கேட்டு இங்கு வந்துள்ளேன். இப்படக்குழுவினரின் கடின உழைப்பே அதற்கு காரணம்…”