April 20, 2024
  • April 20, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நான் தொடங்கும் கட்சியில் வந்து சேருங்கள் – ரஜினியை கலாய்த்த பவர்ஸ்டார்
February 28, 2020

நான் தொடங்கும் கட்சியில் வந்து சேருங்கள் – ரஜினியை கலாய்த்த பவர்ஸ்டார்

By 0 534 Views

மாபெரும் வெற்றி பெற்ற நானி தெலுங்கு படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து விரைவில் வெளிவரவுள்ள படம் தான் “சிவகாமி”.

மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்று போன நிலையில் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சாமி படமாக ஆவிகள், பேய்களை அடக்கும் அம்மன் படமாக ஹாரர் கலந்து கலக்க வருகிறது “சிவகாமி” திரைப்படம். இத்திரைப்படத்தை எம்.டி.சினிமாஸ் வெளியிடுகிறது.

தமிழில் வெளியாக தயாராகிவரும் இப்படத்தின் இசை விழா விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு பேசியதாவது:-

நடிகர், தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர் பேசும்போது,

இப்படம் பெண் குழந்தை பாதுகாப்பை பேசும் படம். அதனால் கண்டிப்பாக இந்த படத்தை இயக்குங்கள் என்று சொன்னேன். இன்று CAA, NPR, பற்றி தவறான தகவல்கள் கூறி உறவுகளாக உள்ள இந்து, இஸ்லாம் மக்களை பிரிக்கின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இஸ்லாமியர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது என உறுதி அளித்துள்ளார். இங்கு ராதாரவி தான் கதாநாயகன். எனக்காக அவர் வந்துள்ளார்…” என்றார்.

தேவதானம் பேசும்போது,

ஜே.எம்.பஷீர், எம்.டி.சினிமாஸ் ஏ.எம்.சௌத்ரி ஆகியோர் தான் என்னை வழிநடத்தினார்கள். அவர்களால் தான் இந்த படம் உருவானது என்றார்.

பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது,

 ” நான் சினிமாவில் 40 கோடிகளை இழந்திருக்கிறேன். மீடியாவில் என்னைப் பற்றி நிறைய தவறான தகவல்கள் வந்துவிட்டது. பரவாயில்லை. நான் எல்லாவற்றிலும் ஜெயித்து வருவேன்.

இங்கு ரஜினி சாருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். விரைவாக கட்சி தொடங்குங்கள். என்னை சேர்த்து கொள்ளுங்கள், என்னை துணை முதல்வர் ஆக்கிவிடுங்கள். இல்லையென்றால், நான் கட்சி ஆரம்பிக்கிறேன். நீங்கள் வந்து சேர்ந்து விடுங்கள். “சிவகாமி” படம் பார்க்க நன்றாக இருக்கிறது. படம் வெற்றி பெற பட குழுவுக்கு வாழ்த்துகள்…” என்றார்.

நடிகர் ராதாரவி பேசும்போது,

” சிவகாமி” படம் மிக அருமையான படம். காட்சிகள் மிக பிரம்மாண்டமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் மிகத் திறமையாக உழைத்துள்ளார். இப்படத்தில் பணிபுரிந்துள்ள எனது டப்பிங் குடும்ப நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள்.

இந்த “சிவகாமி” படம் சமூகத்திற்கு தேவையான படம். பெண் பாதுகாப்பு தற்போதைய காலகட்டத்தில் அவசியமான தேவையாக இருக்கிறது. இந்த படத்தில் சுஹாசினி தவிர அனைவரும் புதுமுகங்கள்.

மோடி, அமித்ஷா பற்றி பேச இங்கு நான் வரவில்லை. அதற்கு வேறு இடம் இருக்கிறது. இப்படத்தில் பணிபுரிந்துள்ள தேவதானம் கிறிஸ்து, இந்து சாமியை பற்றிய படம், ஜே.எம்.பஷீர் எனும் முஸ்லிம் உதவியில் இப்படத்தை வெளியிடுகிறார்கள். மூன்று மதமும் ஒன்று சேரும் படமாக இப்படம் இருக்கிறது.

அனைவரும் இப்படத்தை வாழ்த்த வேண்டும். நாம் இந்தியர் எனும் எண்ணம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். CAA வை எதிர்க்க சொல்லி கையெழுத்து வாங்குவதற்கு பதில் இப்படத்தை பார்க்க சொல்லி கையெழுத்து வாங்கலாம்…” என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியாக, சிறப்பு விருந்தினர்களால் ‘சிவகாமி’ படத்தின் இசைத் தகடு வெளியிடப்பட்டது. இப்படம் ஜே.எம்.பஷீர் தலைமையில் வெளியாகும்.