வெற்றியைச் சென்றடையும் பாதைகளில் ஆளுக்கொரு ஃபார்முலா இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனியின் ஃபார்முலா, ‘அட’ தலைப்பு + அனைவரும் ரசிக்க முடிகிற எளிதான லைன் + அம்மா சென்டிமென்ட் + தொய்வில்லாத படத் தொகுப்பு என்பதாக இருக்கிறது. இந்தப் படத்தில் இவற்றுடன் ‘ஆட் ஆன் பேக்’காக காதலும், ஆக்ஷனும் சேர்ந்து கொண்டிருக்கின்றன..! அமெரிக்காவில் மருத்துவராக இருக்கும் விஜய் ஆண்டனியின் அம்மாவுக்கு திடீரென்று சிறுநீரகம் பழுதுபட, பாசக்காரப் பிள்ளைக்குத் தாங்குமா..? தன் சிறுநீரகத்தைத் தர முன்வருகிறார். ஆனால்… அவரது […]
Read Moreபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவரது வயது 71. தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பெரும் வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த பாலகுமாரன் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியவர். தவிர, சினிமாவுலகிலும் புகழ்பெற்றிருந்த அவர் கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி, இலக்கிய சிந்தனை உள்ளிட்ட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், […]
Read Moreஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் விவசாய சங்கங்களின் சார்பில் வரும் 19 ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (13.05.2018) விவசாய சங்சங்களின் பிரதிநிதிகள் சிலர் தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து காவிரி நதிநீர் பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். […]
Read Moreதமிழ்சினிமாவில் மரபுரீதியான ‘ரூல்’களை உடைத்தவர்கள் பட்டியலில் கண்டிப்பாக விஜய் ஆண்டனிக்கு இடம் உண்டு. எதிர்மறையான தலைப்புகளைக் கண்டாலே தூர ஓடும் தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட பயமின்றி அப்படிப்பட்ட தலைப்புகளிலேயே படங்களை எடுத்து வெற்றியும் கண்டவர் முதல்முறையாக படத்தின் பத்து நிமிடக் காட்சியை படம் வெளியாவதற்கு முன்பே வெளியிட்டு புதிய பாதையையும் வகுத்தவர். அந்த வகையில் அவரது சொந்தப்பட நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் அஞ்சலி, சுனைனாவுடன் கிருத்திகா உதயநிதி […]
Read Moreஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மற்றும் தெலுங்குப் படவுலகில் முடிசூடா ராணியாகத் திகழ்ந்து ‘நடிகையர் திலகம்’ என்றறியப்பட்ட நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு. அவர் வாழ்க்கை முடிந்த எண்பதுகளின் தொடக்கத்தில் தொடங்கும் கதை. அப்போதுதான் பத்திரிகையில் சேர்ந்த சமந்தா, சாவித்ரியின் வாழ்வைக் கட்டுரையாக்கச் செய்யும் ஆய்வில் அப்பாவின் முகம் கூடத் தெரியாமல் அம்மாவின் அரவணைப்பில் ஒரு நடிப்பு விலாசம் பெற சாவித்ரி மேற்கொண்ட போராட்டம், அந்தப் போராடத்துக்குள் ஜெமினி கணேசனுடன் காதல் மலர்ந்து அவரைக் காதல் […]
Read Moreரஜினி இந்த மாதம் தொடர்ச்சியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசி வருகிறார். இன்றும் இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். அவர்களுடன் ஆலோசனை நடத்திய ரஜினி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நாம் தொடங்க இருக்கும் புதிய கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. அத்துடன் பி.ஜே.பியுடன் கூட்டணி வைக்கலாமா என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினி கருத்து கேட்க, “வேண்டாம். அதனால் சிறுபான்மையினரின் ஓட்டுகளை நாம் இழக்க வேண்டி வரும்…” […]
Read Moreநேற்று நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் முதல்வர் சித்தராமையா, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான சாமுண்டீஸ்வரி சட்டமன்றத் தொகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். “கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என தெரிவித்த அவரிடம், கர்நாடகத்துக்கு தலித் ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்க, காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்து வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ’’தலித் ஒருவரை கர்நாடகா முதல்வராக கட்சி மேலிடம் தேர்வு செய்தால் அதில் எனக்கு ஆட்சேபனை ஏதும் […]
Read More