April 27, 2024
  • April 27, 2024
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

வங்கக்கடலில் உருவானது ஆம்பன் புயல்

by by May 16, 2020 0

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண் டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

வங்கக்கடலில் உருவாகும் இந்த புதிய புயலுக்கு ஆம்பன் என பெயரும் வைத்திருந்தார்கள்.

இந்நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆம்பன் புயல் வரும் 20-ந்தேதி மேற்குவங்காளம் மற்றும் ஒடிசா அருகே நகரும் என…

Read More

நெருக்கடி காலத்திலும் தொடரும் சாதீய தாக்குதல் – பா. இரஞ்சித் வேதனை

by by May 10, 2020 0

உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம்.

நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து கொண்டாலும், தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த பொது ஊரடங்கிற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோய் பற்றிய பீதிக்குள் நாம் நுழைந்தோம்.

அந்த பீதி இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. பல்வேறு இடர்பாடுகளை தாங்கி நாம் அனைவருமே கொரோனாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நோய்தொற்றினால் நாம் இறந்துவிடுவோமோ…

Read More

மக்கள் நீதி மன்றம் தொடர்ந்த வழக்கில் மதுக்கடைகளை மூட உயர்நீதி மன்றம் உத்தரவு

by by May 8, 2020 0

தமிழகத்தில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வரும் நிலையில் சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 
நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெறுகிறது. 
 
குடிப்பவர்களைத் தவிர இந்த ஏற்பாட்டை யாருமே வரவேற்கவில்லை. குடிப்பவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். 
 
இதற்கிடையை தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்…

Read More

கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறிய மருத்துவர் திருத்தணிகாசலம் கைது

by by May 6, 2020 0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்த இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆங்கில மருத்துவம் அறிவித்துக் கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில், தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் தான் ஒரு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், தனது மருந்தை பரிசோதனை செய்து பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.
 
தன்னிடம் கொரோனா நோயாளிகளை கொடுத்தால் குணப்படுத்துவதாக மருத்துவத் துறைக்கு சவால் விடுத்தும் அவர்…

Read More

சத்தீஷ்கர் பஞ்சாபில் மதுபானங்கள் வீட்டுக்கு டெலிவரி

by by May 5, 2020 0

சத்தீஷ்கர் மாநில அரசு தங்கள் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் ஊரடங்கை தளர்வு செய்துள்ளது. அதன்படி மதுக்கடைகள் திறக்கப்பட்டது.

ஆனால் கடைகள் முன்பு மதுபிரியர்கள் குவிந்ததால் கொரோனா பரவலை தடுக்கும் சமுக இடைவெளி பின்பற்றப்படவில்லை.

இதனை அறிந்த சத்தீஸ்கர் அரசு ‘குடி’ மகன்களின் வசதிக்காக புதிய முறையை அமல்படுத்தியது. இதற்காக சத்தீஷ்கர் மாநில அரசு வாணிப கழகம் ஆன்லைன் வெப் போர்டல் எனப்படும் வலைதளத்தை துவக்கியுள்ளது.

இந்த வலைதளத்தில் தங்களது ஆதார் எண்ணை வைத்து பதிவு செய்தால்…

Read More

Breaking News தமிழ்நாட்டில் மே 7 முதல் கட்டுப் பாடுகளுடன் டாஸ்மாக் திறப்பு

by by May 4, 2020 0

நாட்டின் பல பகுதிகளில் உள்ள பச்சை மண்டலங்களில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.

கர்நாடக, ஆந்திராவில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு மதுப்பிரியர்கள் அங்கு அலைமோதி வருகின்றனர். இந்த வீடியோக்கள் இன்று காலை முதலே இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் மே 7ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி அளித்துள்ளது.

Read More

விஷால் தங்கை நீஷ்மா செய்த கொரோனா சேவை

by by May 3, 2020 0

நடிகர் விஷால் கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்துு வருகிறார்.

இதேபோல் ஹைதராபாத்தில் உள்ள அவருடைய தங்கை மருத்துவர் நீஷ்மா அங்கு உள்ள மருத்துவமனைகளுக்கு கரோனா PPE செட் இலவசமாக வழங்கி இருக்கிறார்.

இதனை அறிந்த விஷால் உடனே தமிழகத்திலும் வழங்கவும் வேண்டுகோள் வைத்ததின் பெயரில் மருத்துவர் நீஷ்மா அவர்கள் உடனே MMC மருத்துவமனைக்கு 200 செட் வழங்கினார்.

இதனை தொடர்ந்து மேலும் பல மருத்துவ மனைகளுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

Read More

மே 3-ம் தேதி மருத்துவமனைகள் மீது விமானங்கள் மலர் தூவும் – முப்படை தளபதி பிபின் ராவத்

by by May 1, 2020 0

இன்று மாலை முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தளபதி பதூரியா மற்றும் கடற்படை தளபதி ஆகியோர்  கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியதிலிருந்து:
 
கொரோனா தடுப்பில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் விதமாக மே 3-ம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விமானப்படை விமானங்கள் பறந்து மருத்துவமனைகள் மீது மலர் தூவும்.
 
கடற்படை சார்பில் கடலில் கப்பல்கள் அணிவகுப்பு நடத்தப்படும். கடற்படை விமானங்களும், மருத்துவமனைகள் மீது…

Read More

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் அரசுக்கு வைத்த கோரிக்கை

by by Apr 26, 2020 0

நாள்: 26.04.2020

இராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரியும்,பயிற்சி மருத்துவர்களின்,
பட்ட மேற்படிப்பு மாணவர்களின் நலன் காத்திடுக.

தமிழக அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.
இரவீந்திரநாத் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி.

சென்னை மருத்துவக் கல்லூரி பயற்சி மருத்துவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக விடுதியிலேயே முடக்கப் பட்டுள்ளனர்.இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதனால் ,பயிற்சி மருத்துவர்களும், அவர்களின்
பெற்றோர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

முதுநிலை மருத்துவ மாணவர்களும் அதிக அளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இது அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னை இராஜிவ்…

Read More

திருநள்ளாறு சனி பகவான் அபிஷேக ஆராதனைகள் யூ டியூபில்…

by by Apr 25, 2020 0

சனி பகவானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை யூ டியூப் மூலம் பக்தர்கள் கண்டு தரிசிக்கும் வகையில் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

“கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய இயலாத நிலையில் இருக்கும் பக்தர்களின் வசதிக்காகவும், உலகம் இந்த நெருக்கடியான காலக்கட்டத்திலிருந்து விரைவில் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்புவதற்காகவும், அனுகிரஹ மூர்த்தியான சனீஸ்வர பகவானுக்கு ஒவ்வொறு சனிக்கிழமையிலும் காலை மற்றும்…

Read More