முழுக்க மலேசியாவில் நடப்பது போன்ற கதைப் பின்னணி கொண்ட திரைப்படம் ‘வெடிகுண்டு பசங்க’. ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் ‘வீடு புரொடக்ஷன்ஸ்’ சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் இப்படத்தை பெண் இயக்குநரான டாக்டர்.விமலா பெருமாள் இயக்கியிருக்கிறார்.
தினேஷ் குமார், சங்கீதா கிருஷ்ணசாமி நாயகன், நாயகியாக தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
‘டோரா’, ‘குலேபகாவலி’ படங்களுக்கு இசையமைத்த விவேக் & மெர்வின் இப்படத்திற்கு இசையமைக்க, பி….
Read More
இரண்டு யானைகள் மோதிக்கொண்டால் அதில் சிக்கிச் சிதையுண்டு போவது சின்னச் சின்ன எறும்புகள்தான். அதே எறும்பு யானையின் காதுக்குள் போனால் என்னவாகும் என்பதுதான் இந்தப்படத்தின் கருவும்.
இரண்டு கார்ப்பரேட் கம்பெனிகள் நீ பெரியவனா நான் பெரியவனா என்கிற ஈகோ போட்டியில் மோத, அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதில் நாயகன் கௌதம் கார்த்திக்கும் சிக்க என்ன நடக்கிறது என்ற கதையை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் திரு.
இன்றைக்கு நாட்டில் அதிக பயனீட்டாளர்களைக் கொண்டிருக்கும் பெரிய நெட்வொர்க்குகளில் ஒன்று…
Read More
சினிமாவில் கொஞ்ச காலம் முன்பு வரை படம் வெளியாகும் சமயத்தில் தயாரிப்பாளரும், இயக்குநரும் பேசிக்கொள்ள முடியாத அளவுக்கு விலகி நிற்பார்கள். ஆனால், காலம் மாறிவிட்டது.
ஆரோக்கியமான படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு படங்களை எடுப்பதால் பட வெளியீட்டுக்கு முன்பு படக்குழுவுக்கு நன்றி தெரிவிப்பது ஒரு கலாச்சாரமாகவே இப்போது மாறி வருகிறது.
அந்தக் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஜூலை 6 வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் படத்துக்காக தனது படக்குழுவுக்கு தனது மனதில் ஆழத்தில் இருந்து இப்படி நன்றி தெரிவிக்கிறார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்….
Read More
ஹீரோக்களுக்கு இருக்கும் வசதியே அவர்கள் எத்தனை வயதானாலும் ஹீரோவாக நடிக்க முடியும். ஆனால், ஹீரோயின்களுக்கு வயதாகிவிட்டால் வீட்டுக்குப் போக வேண்டியதுதான். அல்லது அக்கா, அண்ணி என்று கிடைத்த வேடங்களில் நடிக்க வேண்டும்.
இப்போது ஹரியின் இயக்கத்தில் ச்சீயான் விக்ரம் நடிக்க வேகமாகத் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ரமின் ஜோடியாகி இருக்கிறார். இந்த வேடத்தில் சாமி முதல் பாகத்தில் த்ரிஷா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பாகத்திலும் திரிஷாவே நடிப்பார் என்று எதிர்பார்த்த வேளையில் இந்த…
Read More
இயக்குநர் கோபி நயினாரின் திறமை பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருடைய ஸ்கிரிப்டுகள் சினிமாவுலகில் பிரசித்தம். முன்பு ஒரு ‘பெரிய இயக்குநர்’, ‘பெரிய ஹீரோ’வை வைத்து இயக்கிய படத்தின் கதை தன்னுடையது என்று கோபி வழக்கே தொடுத்திருந்தது நினைவிருக்கலாம்.
ஆனால், அவரது கதையை வைத்துப் புகழ் தேட வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று அந்தப் ‘பெரிய இயக்குநர்’ அப்போதைக்கு அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால், கோபி நயினாரின் திறமை கண்டு வியந்த நயன்தாரா அவரைத் தேர்வு…
Read More
‘பார்த்திபன் கனவு’ படம் வந்தாகிவிட்டது. அடுத்து என்ன..? ‘பார்த்திபன் காதல்’தானே..? அதையே தலைப்பாக்கி ‘எஸ் சினிமா கம்பெனி’ என்ற புதிய நிறுவனம் படம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் யோகி என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஒளிப்பதிவை ‘தங்கையா மாடசாமி’யும், இசையை ‘பில்லா’வும் கவனிக்கிறார்கள். பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். கதை எழுதி இயக்குகிறார் வள்ளிமுத்து. படம் பற்றி அவரிடம் கேட்டதற்கு…
“உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் இளமை…
Read More
தமிழ்ப்படங்களில் பல முயற்சிகள் கொண்ட படங்கள் வந்துவிட்டாலும் சயின்ஸ் பிக்ஷன் என்று சொல்லக்கூடிய அறிவியல் புனைவுகள் கொண்ட படங்கள் குறைவாகவே வந்திருக்கின்றன. அந்தக் குறையை நீக்க வரும் படம் ‘நகல்’.
S2S பிக்சர்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், ஏ.ஆர். கிருஷ்ணா மோகன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் புதுமுகம் ‘சிவசக்தி’ நாயகனாக நடிக்கிறார். மும்பை மாடல் பல குறும்ப்டங்களில் நாயகியாக நடித்த ‘ரிஷ்மா’ நாயகியாக நடித்துள்ளார்.
கதை, திரைக்கதையை சதுர்த்தி ஐயப்பன்…
Read More