July 1, 2025
  • July 1, 2025

ரஜினி நடிக்கும் 2.o ரிலீஸ் தேதியை அறிவித்த ஷங்கர்

by on July 10, 2018 0

எப்போது வெளியாகும் என்றே தெரியாமல் போய்க்கொண்டிருந்தது ஷங்கரின் ‘எந்திரன்2′ என்று அறியப்படும் 2.o திரைப்படம். இந்தியாவிலேயே அதிக பொருள்செலவில் உருவாகும் படமாகக் கருதப்படும் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, லைக்கா புரடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் ஸ்டார் அக்‌ஷய் குமார் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படம் தள்ளிக்கோண்டே போவதற்கு கிராபிக்ஸ் காட்சிகளுக்கான வேலைகள்தான் காரணமாகக் கூறப்பட்டு வந்தன. பல இடங்களில் இதற்கான வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் இன்று […]

Read More

அநீதி இழைக்கப்பட்ட நீட் மாணவர்களுக்கு நீதி கிடைத்தது- மார்க்சிஸ்ட் மகிழ்ச்சி

by on July 10, 2018 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம்  2018, ஜூலை 10-11 தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன்  தலைமையில் நடைபெறுகிறது.   இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் முதல்நாள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் நீட் தமிழ்வழி தேர்வு […]

Read More

ஒரே நாளில் டி.ராஜேந்தர், சிம்பு படங்கள் அறிவிப்பு

by on July 10, 2018 0

சிம்பு ஹீரோவாக உயரத்துக்கு வந்த பின்னர் டி.ராஜேந்தர் டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் கவனத்தைச் செலுத்தி வந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவருடைய பாணியிலேயே முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க ‘இன்றையைக் காதல் டா’ என்ற படத்தை அறிவித்திருக்கிறார். நமீதா முக்கிய லேடி டான் பாத்திரமேற்கும் இப்படத்தில் ராதாரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, மதன் பாப், விடிவி கணேஷ், தியாகு உள்ளிட்டு ஏகப்பட்ட அறிந்த முகங்களுடன் இளமை ரசம் சொட்ட முற்றிலும் புதிய முகங்கள் நாயகன், நாயகியராக […]

Read More

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்தது

by on July 9, 2018 0

2012 டிசம்பர் 16-ந் தேதி இரவில் தலைநகர் டெல்லியில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பஸ்சில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட ஆறு பேரில் முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்து கொள்ள, மற்றொருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனை பெற்றான். மற்ற நான்கு குற்றவாளிகள் முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதன்பின், மேல்முறையீட்டில் இந்த தண்டனையை […]

Read More

தர்மபுரி பஸ் எரிப்பு, நாவரசு கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய பரிசீலனை

by on July 8, 2018 0

எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி நீண்டகாலம் ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்து வரும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் அதற்குத் தகுதியான கைதிகள் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அ.தி.மு.க.வினர் நெடுஞ்செழியன், மது, முனியப்பன் ஆகியோர் கடந்த 18 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதால அவர்களை விடுவிக்க ஆலோசனை நடந்து வருகிறது. 2000 ஆம் ஆண்டு […]

Read More

விளையும்போதே சோறானால் விறகு எதுக்கு, வெறட்டி எதுக்கு – கே.பாக்யராஜ் சுவாரஸ்யம்

by on July 8, 2018 0

புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’. கிராந்தி பிரசாத் இயக்கத்தில் ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி. திம்ம ரெட்டி தயாரித்துள்ளார்.   இப் படத்தின் பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டுப் பேசியதிலிருந்து…   “இயக்குநர் கிராந்தி பிரசாத் தமிழும் தெரியாமல் தெலுங்கு ஆட்களை வைத்து ஒரு தமிழ்ப்படம் இயக்கியிருக்கிறார். அவர் வெவ்வேறு ஏழு மொழிகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்துப் பணியாற்ற வைத்துள்ளார். அதில் இங்கே பேசியவர்கள் எல்லாரும் தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு  முயற்சி செய்து தமிழில் பேசினார்கள், அந்த […]

Read More

தொகுதிக்குள் செல்லும் அன்புமணி ராமதாஸை அரசு தடுக்க முடியாது – ஐகோர்ட் கருத்து

by on July 7, 2018 0

சென்னை -சேலம் பசுமைச்சாலை அமைக்க, பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்துக்காக காஞ்சீபுரம், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற நாடாளுமன்ற தொகுதி எம்.பி. அன்புமணி ராமதாஸ் தன் தொகுதியில் உள்ள மக்களின் உணர்வைத் தெரிந்துகொள்ள, கருத்து கேட்கும் கூட்டத்தை நடத்த முடிவு செய்தார். ஆனால், அவருக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து பா.ம.க. […]

Read More
CLOSE
CLOSE