இரட்டை ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகக் களமிறங்கி ‘பாலைவனச் சோலை’ படத்தை அதே இரட்டையர்களில் ஒருவராக இருந்தி இயக்கி இப்போது டிவி சீரியல்களில் நடிகராக அறியப்படும் ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 62. சென்னை அடையாறு திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு பிரிவில் படித்த ராஜசேகர், தனது நண்பர் ராபர்ட் உடன் இணைந்து ‘ஒருதலை ராகம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். பிறகு, இந்த இரட்டையர்கள் ‘பாலைவனச்சோலை’ படத்தை இயக்கி பெருவெற்றி பெற்றனர். ‘பாலைவனச்சோலை’ […]
Read Moreகடந்த ‘பிச்சைக்காரனி’ல் அம்மா சென்டிமென்டைப் போட்டுத்தாக்கி தமிழிலும், தெலுங்கிலும் ஹிட் அடித்த மகிழ்ச்சியில் இதில் ‘மாமன், மச்சான்’ என்று இதில் ஒரு சென்டிமென்ட்டைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் சசி. அக்கா, தம்பியான லிஜா மேனனும், ஜி.வி.பிரகாஷும் பெற்றோரின்றி வளர்வதால் ஒருவருக்கொருவரே அம்மா, அப்பாவுமாக வாழ்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் வளர்ந்து பைக் ரேஸ் ஓட்டிக் கொண்டிருக்கிறார். அப்படி ஒரு ரேஸில் அவரைப் பிடிக்கும் டிராபிக் போலீஸ் அதிகாரியான சித்தார்த் வரம்பு மீறி அவரைத் தண்டித்துவிட, அவர் மீது ‘கொலை காண்டா’க […]
Read Moreஜி.வி.பிரகாஷ்-ஆர்.பார்த்திபன் நடித்த ‘குப்பத்துராஜா’ படத்தைத் தயாரித்த எம்.சரவணனின் திருமணம் இன்று நடைபெற்றது. அவர் ஷ்ராவ்யா கீர்த்தனாவை மணந்தார். இந்த திருமணத்தில் நடிகர்கள் ஆர்.பார்த்திபன், ஜி.வி.பிரகாஷ், ‘பிக் பாஸ்’ சரவணன், ‘பிக் பாஸ்’ மதுமிதா, ஆர்.கே.சுரேஷ், பாலசரவணன், சரவண சக்தி, இயக்குநர்கள் ஆதிக் ரவிச்சந்திரன், ஷண்முகம், வினியோகஸ்தர் படூர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். ஜிதமிழ்நியூஸ் சார்பாக நாமும் மணமக்களை வாழ்த்துவோம்..!
Read Moreஒரு படத்தின் முதல் ஷாட்டே அது எப்படிப்பட்ட படம் என்று சொல்லிவிடும் என்பார்கள். ஆனால், அந்த இலக்கணமெல்லாம் இதுபோன்ற ‘ஜல்லியடித்து ஜாம் தடவும்’ படத்துக்குப் பொருந்தாது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்யலாம். முதல் ஷாட்டில் ஆலைக் கழிவில் சிக்கி சிதைந்து கிடக்கும் கோழிகளை எடுத்து சுத்தம் கூட செய்யாமல் சிக்கன் ஃபிரை செய்வதைக் காட்டுகிறார்கள். அந்த ஆலைக்கழிவும், அந்த ஆலையின் ஏரியல் வியூ ஷாட்டும், கோழிக்கறியை எப்படி சுகாதாரமில்லாமல் சமைக்கிறார்கள் என்பதைக் காட்டும் காட்சிகளும் படம் […]
Read Moreகடவுள், மிருகம் என்ற இரண்டு மனித நிலைகளையும் தனித்தனிப் பாத்திரங்களாக்கி இரண்டு நிலைகளும் இந்த சமூகத்தில் என்ன அனுபவத்துக்கு ஆட்படுகின்றன என்று ஒரு கதை பின்னியிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். மிருக நிலைக்கு ‘மகா’ என் கிற வன்மம் மிகுந்த பாத்திரத்தில் ஒரு வேடமும், முனி என்கிற ஆன்மிகப் பாத்திரத்தில் இன்னொரு வேடமுமாக ஆர்யாவுக்குக் கொடுத்து இந்த ‘மகா’, ‘முனி’ இரண்டின் வழியாகவும் மனித வாழ்வின் அகம், புறம் தேடும் தத்துவார்த்தமான படைப்பாக அதைத் தந்துமிருக்கிறார். “எங்களுக்குத் தத்துவமெல்லாம் […]
Read Moreஅஜித், விஜய், விஜயகாந்த், பிரபுதேவா உள்ளிட்டு தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகர்கள் முதல் பலருக்கும் இதுவரை 800 க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள பிரபல பாடலாசிரியர் முத்துவிஜயன் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 48. ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…’, ‘மேகமாய் வந்துபோகிறேன்…’ உள்ளிட்ட காதல் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்த கவிஞர்.முத்துவிஜயன். பாடலாசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குனர் என பன்முகம் கொண்டவர். மஞ்சள் காமாலை நோயினால் கல்லீரல் பாதிக்கப்பட்ட முத்துவிஜயன் இன்று மாலை […]
Read Moreசந்தானம் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் ‘டிக்கிலோனா’. இந்த டிக்கிலோனா வார்த்தையை நினைவிருக்கிறதா..? நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி செந்தில் இருவரும் ‘ஜென்டில்மேன்’ படத்தில் பேசி ஒரு வரலாறையே ஏற்படுத்திய அதே பெயரை சந்தானம் படத்துக்கு வைத்திருக்கிறார்கள். பெயரிலே இப்படி காமெடியை அள்ளிக்கொண்ட இப்படத்தில் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்க இருக்கிறார். பிரபல எழுத்தாளரும், தமிழ்சினிமாவில் பல வெற்றிகரமான திரைப்படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்தவருமான ‘கார்த்திக் யோகி’ இப்படத்தை இயக்குகிறார். ‘கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்’ சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும் ‘சோல்ஜர் […]
Read Moreபடைப்பாளன் படத்தை LS.பிரபுராஜா எழுதி இயக்கியிருக்கிறார். கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை பிரசாத்லேப்-ல் நேற்று நடைபெற்றது. விழாவில், இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது, “இந்தப் படைப்பாளன் படம் கதைத்திருட்டு சம்பந்தப்பட்ட கதை. கதை என்பது ஒருவனின் அறிவு. அதனால் அதை பாதுகாப்பாக வைக்க வேண்டியது நமது கடமை. இடம் பொருள் ஏவல் என்று ஒரு படம் எடுத்தேன். அக்கதையை எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னார். அந்தக்கதைக்கு நான் தயாரிப்பாளரிடம் அழைத்துச் சென்று பத்துலட்சம் ரூபாய் வாங்கிக்கொடுத்தேன். […]
Read Moreபல முயற்சிகளுக்குப் பின் நாளை வெளியாகவிருந்த ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படம் இம்முறையும் ஏமாற்றி விட்டது. கௌதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடித்த இந்தப் படம் நாளை வெளியாகாதது எல்லோருக்கும் ஏமாற்றமே. இந்நிலையில் வெளியீடு எப்போது என்பது குறித்து படத்தைத் தயாரித்திருக்கும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அறிவிப்பு கீழே…
Read More