June 28, 2026
  • June 28, 2026

இந்திய சுதந்திர நாளில் தோனியும் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ஏன்

by on August 15, 2020 0

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாக தான் இருக்கும். ஆம்..! சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி திடீரென அறிவித்திருக்கிரார். இதற்கு அடுத்த அதிர்ச்சியாக அடுத்த சில  நிமிடங்களில் சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். தோனி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி இன்று 7.29 மணி முதல் நான் ஓய்வுப்பெறுகிறேன்” என பகிர்ந்துள்ளார். இதனையடுத்து […]

Read More

தமிழ்நாட்டுக்குள் செல்ல விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் – முதல்வர் உத்தரவு

by on August 14, 2020 0

முக்கியப் பணிகளுக்காக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்குமாறும் தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. […]

Read More

யோகிபாபு ஸ்டேட்மென்ட் குறித்து தௌலத் தயாரிப்பாளர் குமுறல் – யோகிபாபு விளக்க வீடியோ

by on August 14, 2020 0

ரைட் ஆர்ட்ஸ் நிறுவனம் திரு முகம்மது அலி தயாரிப்பில் சக்தி சிவன் இயக்கத்தில் உருவான ‘தௌலத்’ திரைப்படத்தை பற்றி யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த டுவிட்டர் செய்தியில், தனக்கும் ‘தௌலத்’ படத்திற்கும் எந்த வித சம்பந்தமுமில்லை; நான் நடிக்கவும் இல்லை என்று தெரிவித்திருந்தார். இதுபற்றி இப்படத்தின் தயாரிப்பாளர் எம்பி முகம்மது அலியிடம் கேட்ட போது, ‘தௌலத்’ படத்தை தயாரிக்க முடிவு செய்தபோதே, இப்படத்தின் முக்கியத் திருப்பமாக கதாநாயகனும், வில்லனும் ஒருவரையொருவர் […]

Read More

அவசர சிகிச்சைப் பிரிவில் எஸ்பிபி – வைரல் ஆகும் புகைப்படம்

by on August 14, 2020 0

இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக எஸ்.பி.பி கடந்த 5 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை கூறியிருந்த நிலையில், இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இரவு முதல் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் […]

Read More

கொரோனா பாதித்த நிக்கி கல்ராணியின் அனுபவங்கள்

by on August 13, 2020 0

கொரோனா பாதிப்பில் இது நட்சத்திரங்களின் சீசன் போலிருக்கிறது இந்தியா முழுவதிலும் அனேக சினிமா நட்சத்திரங்களையும் அரசியல் நட்சத்திரங்களையும் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. அந்தவகையில் தமிழ் தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நிக்கி கல்ராணி யையும்  கொரோனா விட்டு வைக்கவில்லை. அவர் தனது அனுபவங்களை இப்படி பகிர்ந்து கொண்டிருக்கிறார். “கடந்த வாரம் நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அது எனக்கு பாசிட்டிவ்வான ரிசல்ட தந்தது. மற்ற கொரோனா நோயாளிகளை போலவே எனக்கும் […]

Read More
CLOSE
CLOSE