ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த திரைப்படம் முந்தானை முடிச்சு. 1983-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அப்போது திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றி பெற்றது. மேலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதே படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஊர்வசி, தீபா, கே.கே.சௌந்தர், தவக்களை சிட்டிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 36 வருடங்களுக்கு பின்னர் ரீமேக் செய்யப்பட இருப்பதாக […]
Read Moreதமிழ் திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் கே. பி. சுந்தராம்பாள், மறைந்த நாள் இன்று (செப்-19/1980) இன்றைக்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன் தாராவை பெண் சூப்பர் ஸ்டார் என்கிறோம். ஆனால், இந்த சாதனையை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே செய்து காட்டியவர் கே.பி.சுந்தராம்பாள் என்பது இன்றைய தலைமுறையினருக்கு வியப்பாகவும் புதுமையாகவும் இருக்கலாம். ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தன் சம்பளத்தை ஒரு லட்சமாக உயர்த்தியவர் கே பி சுந்தராம்பாள். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு லட்ச ரூபாய் […]
Read Moreகோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஷாலு ஷம்மு. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டர் லோக்கல்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் ஷாலு ஷம்மு, தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருவதோடு, மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஷாலு ஷம்மு ரசிகர்களுக்காக செய்த ஒரு விஷயத்தால், தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். பொதுவாக ரசிகர்கள் தான் தங்களது […]
Read Moreசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்தை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்து உள்ளார். அதில், “நடிகர் சூர்யா வெளியிட்ட நீட் தேர்வு குறித்த அறிக்கையை ஊடகங்கள், சமூக ஊடக வலைத்தளங்கள் செய்தியாக வெளியிட்டன. அது குறித்து முழுமையாக அறியாமல் எந்த புரிதலும் இல்லாமல், பதிவுகளை முறையாக ஆராயாமல், நீதித்துறை நிர்வாக மனப்பான்மை சிறிதும் இன்றி ஒரு தன்னிச்சையான முடிவில், மலிவான விளம்பரத்திற்காக நடிகர் சூர்யா […]
Read Moreதஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஏரியாவில் பி.ஜே.பி சார்பில் மோடியின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. இதற்கான ஏற்பாட்டை தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜீவஜோதி செய்திருந்தார். அங்கே சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு பின்னர் ஜீவஜோதி செய்தியாளர்களிடம் பேசியது. “பி.ஜே.பி-யின் வளர்ச்சி தமிழகத்தில் அமோகமாக இருக்கிறது. நிறைய இளைஞர்கள் கட்சிக்கு வருகிறார்கள். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு பிரதமர் மோடியின் பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாடியிருக்கிறோம். இதுவே பி.ஜே.பி வளர்ந்திருக்கிறது என்பதற்குச் […]
Read Moreஇந்த லாக் டவுன் காலம் நீண்டுகொண்டே இருந்தாலும், நடிகர் சிவகார்த்திகேயனின் “டாக்டர்” படக்குழு படப்பாடல்களை ஒவ்வொரு சிங்கிளாக வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சியிலேயே வைத்திருக்கிறது. ‘செல்லமே’ மற்றும் ‘நெஞ்சமே’ பாடல்கள் வெளியான நொடியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அவர்களின் விருப்பபட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இந்நேரத்தில் “டாகடர்” படக்குழு மேலும் ஒரு நல்ல செய்தியை வெளியிட்டிருக்கிறது. இன்று செபடம்பர் 17 அன்று “டாக்டர்” படக்குழு படத்தின் டப்பிங் பணிகளை சென்னையில் ஒரு சிறு பூஜையுடன் துவங்கியுள்ளது. அரசு அறிவித்துள்ள […]
Read Moreவிஜய்யை வைத்து வேட்டைக்காரன் என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் இயக்குனர் பாபுசிவன். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென மயங்கி விழுந்திருக்கிறார் மருத்துவமனையில் சேர்த்தபோது அவருடைய கல்லீரலும் சிறுநீரகமும் செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இரண்டு நாட்களாக மயங்கிய நிலையில் இருந்த பாபுசிவன் இன்று சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார் என்று தெரிகிறது. இந்தச் செய்தி கோலிவுட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி வருகிறது.
Read More