நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனும், பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா சில மாதங்களுக்கு முன் திடீர் மரணம் அடைந்ததும், அப்போது அவரது மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தும் தெரிந்த விஷயங்கள். இந்நிலையில் மேக்னா ராஜ்க்கு கடந்த மாதம் வளைகாப்பு நடத்தப் பட்டது. அப்போது அவரது கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் கட்டவுட்டை நிற்க வைத்து அதன் முன்னிலையில் வளைகாப்பை நடத்தினார்கள். இந்நிகழ்ச்சியை கண்டவர்கள் மனம் நெகிழ்ந்து போனார்கள். இப்போது மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்து இருக்கிறது. இப்போதும் […]
Read Moreசூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கி சூர்யா நாயகனாக நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று ‘. இப்படம் இந்திய விமானியின் சாதனையை பற்றியது. இதில் நடிப்பதற்காக சூர்யா தன் உடலை வருத்தும் மற்றும் பல்வேறு பயிற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடி இருக்கும் இந்த நேரத்தில் சூரரை போற்று படத்தை ஓ டி டி தளத்தில் வெளியிட முதலில் ஆர்வம் காட்டி வந்த சூர்யா பிறகு தியேட்டர்களிலும் அதனை வெளியிட […]
Read Moreஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இன் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் 800 படத்தில் முத்தையா முரளிதரனின் வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்ததும், அவரை அதில் நடிக்க கூடாது என்று உலகத் தமிழர்களும் இங்குள்ள தமிழர்களும் கேட்டுக்கொண்டதன் பேரில, அவர் அதில் இருந்து விலகியதும் தெரிந்த விஷயங்கள். இந்நிலையில் அந்தப்படத்தில் இருந்து அவர் விலகும் தருவாயில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த அப்படி செய்தால்தான் […]
Read Moreகனடா வாழ் தமிழ் கலைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். ‘மின்னல் இசைக்குழு’ என்கிற பெயரில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். பல வருடங்களுக்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் வெளியான, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற, ‘சொன்னது நீ தானா’ என்கிற பாடலுக்கு தற்போது புதிய வடிவிலான கவர் ட்ராக் அமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார். தனது வசீகர குரலால் ரசிகர்களை […]
Read Moreநடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு சமூக வலைதளம் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்தால், அவரது மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிவிடுவேன் என ஆபாசமாக ரித்திக் என்ற பெயரில் டிவிட்டரில் பதிவிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் வன்கொடுமை […]
Read Moreஇலங்கை கிரிக்கெட் வீரர் முததையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகும் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாதென பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வந்தும் விஜய் சேதுபதி அமைதி காத்தார். இந்நிலையில் இன்று முததையா முரளிதரன் ஒரு அறிக்கை அனுப்பினார்.அதில் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாதென எதிர்ப்புகள வருவதால் அவர் படத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம் என முரளிதரன் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகுவதாக செய்திகள் வந்தன. அவரிடம் […]
Read More