August 18, 2026
  • August 18, 2026

மன்சூர் அலிகானை கைது செய்தால் என்ன செய்வாராம் தெரியுமா..?

by on April 20, 2021 0

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.  அதற்கு முதல்நாள் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாஜகவின் பாரத பிரதமர் மக்கள் நலத் திட்டங்கள் பிரச்சார விளம்பர அமைப்பின் செயலாளர் ராஜசேகரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அதில், ‘கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் நடிகர் விவேக்குக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும், யாரும் […]

Read More

தமிழ்நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்படும்

by on April 19, 2021 0

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நேற்று அளித்த பேட்டி, “தமிழக அரசு தற்போது இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அறிவித்துள்ளது. இதனால் தியேட்டர்களில் இரவு காட்சிகள் திரையிடுவதை ரத்து செய்தும், ஞாயிற்றுகிழமைகளில் முழுமையாக தியேட்டர்களை மூடவும் நடவடிக்கை எடுத்துள்ளது. தியேட்டர்களுக்கு பார்வையாளர்கள் முக கவசம் அணியாமல் வந்தால் எங்களுக்கு தண்டனையாம். இது விசித்திரமாக இருக்கிறது. தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருபவர்கள் முக கவசம் அணியாமல் இருந்தால் நாங்கள் என்ன செய்ய […]

Read More

ஆர்ட்டிக்கிள் 15 தமிழ் பதிப்பின் படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின்

by on April 19, 2021 0

“ஆர்ட்டிக்கிள் 15 ” (ஹிந்தி) படத்தின் உரிமையை முறையே பெற்று அப்படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சில தினங்களுக்கு முன் பொள்ளாச்சியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். படப்பிடிப்பு துவங்கும் முன் படக்குழுவினருடன் இணைந்து மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். M. செண்பகமூர்த்தி (இணை தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவிஸ்), ராஜா.C (விநியோக நிர்வாகம் – ரெட் ஜெயன்ட் […]

Read More

ஞாயிறு தோறும் தமிழகத்தில் முழு ஊரடங்கு

by on April 18, 2021 0

கொரோனா அதிகரிப்பை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் […]

Read More

நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி பத்திரிகையாளர் சந்திப்பு

by on April 18, 2021 0

மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர், விவேக்கின் மனைவி அருள்செல்வி மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி மைத்துனர் செல்வகுமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருள்செல்வி, “எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய மாநில அரசிற்கு நன்றி, அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி, இறுதி வரை உடன் இருந்த காவல்துறைக்கும், ஊடக்கத்துறைக்கும் நன்றி. இறுதி அஞ்சலியில் பங்கு பெற்ற கோடான கோடி ரசிகர்கர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்..!” என்றார்.

Read More

சின்னக் கலைவாணர் விவேக் காலமானார்

by on April 17, 2021 0

தான் நடித்த படங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை நகைச்சுவை மூலம் சொல்லிி வந்ததால் சின்னக்்் கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று 4:45 அளவில் தனியார் மருத்துவமனையில் காலமானார். நேற்று முன்தினம் அவர் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட நிலையில் நேற்று மாரடைப்பின் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு  ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு உயிர் காக்கும் கருவியாக எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டும் அந்த சிகிச்சைகள் பலனின்றி இன்று அதிகாலை இயற்கை எய்தினார். இந்த […]

Read More

என்னதான் ஆச்சு விவேக்குக்கு..?

by on April 16, 2021 0

நம்மை வாழ்வில் அதிகம் சிரிக்க வைத்தவர்களின் வாழ்க்கை நிறைய நேரங்களில் சோகமாகவே முடிவதை பார்த்திருக்கிறோம்.  உலகின் நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் தொடங்கி கலைவாணர் என் எஸ் கே தொடர்ந்து சந்திரபாபு வரை பல நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கை சோகத்திலேயே முடிந்திருக்கிறது. அப்படி ‘ சின்ன கலைவாணர் ‘

Read More

விக்ரம் பிரபு வியந்த கதை கொண்ட பகையே காத்திரு இன்று தொடக்கம்

by on April 16, 2021 0

கந்தன் ஆர்ட்ஸ் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பகையே காத்திரு”.   விக்ரம் பிரபு இதுவரை ஏற்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், இதுவரையில் அவர் நடித்த படங்களில் இருந்து மாறுபட்ட படமாகவும், முழுக்க முழுக்க ஆக் ஷன் த்ரில்லர் நிறைந்த சமூகபடமாகவும் உருவாகிறது.   கதாநாயகியாக ஸ்முருதி வெங்கட் மற்றும் வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், சாய்குமார் தமிழ் திரைப்படங்களில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் சிவா ஷாரா, பாலா மற்றும் பல […]

Read More

லீகல் நோட்டீஸ் அனுப்பிய ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஷங்கர் பதில் நோட்டீஸ்

by on April 15, 2021 0

தமிழில் வெளியான ‘ அந்நியன் ‘படத்தை இயக்கிய ஷங்கர் அதே படத்தை இந்தியில் இயக்க விருப்பதாக நேற்றைய தினம் மீடியாக்களில் பரவலாக செய்திகள் வெளிவந்தன. அந்நியன் படத்தை தயாரித்தது ஆஸ்கார் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனம். இந்நிலையில் அந்நியன் ஹிந்தி தயாரிப்பு குறித்து நேற்று வெளிவந்த தகவல்களை பார்த்த ஆஸ்கர் ரவிச்சந்திரன் இன்று ஷங்கருக்கு ஒரு லீகல் நோட்டீஸ் அனுப்பினார். அதில் அந்நியன் படத்தின் கதையை எழுதியவர் எழுத்தாளர் (காலஞ்சென்ற) சுஜாதா. அவரிடம் கதையின் உரிமையை ஆஸ்கர் […]

Read More

நடிப்பில் பார்டர் தாண்டும் அருண் விஜய்

by on April 15, 2021 0

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பார்டர்’. அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார். ‘AV31’ என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர […]

Read More
CLOSE
CLOSE