April 28, 2024
  • April 28, 2024
Breaking News

Monthly Archives: July 2019

நடிகர் சூர்யாவுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு நன்மையே – வைகோ

by on July 21, 2019 0

புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு, வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்து அறிக்கையிலிருந்து… “இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து, சமூக நீதிக்கு கொள்ளி வைத்து, ஏழை–எளிய, தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை சூன்ய மயமாக்கும் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு கலை உலகின் ஒளிவிடும் நட்சத்திரமான நடிகர் சூர்யா தனது நியாயமான எதிர்ப்பை பதிவு செய்தார். நாட்டின் எதிர்காலத்துக்கே ஆபத்தான கூடாரத்திலிருந்து […]

Read More

கடாரம் கொண்டான் திரைப்பட விமர்சனம்

by on July 21, 2019 0

தமிழில் நடிப்போச்சிய நடிகர்களை வகை பிரித்தால் சிவாஜி வழியில் கமலும், கமல் வழியில் விக்ரமும் வருவார்கள். அதிலும் தன்னை வருத்திக்கொண்டு கதபாத்திரத்துக்கு நியாயம் சேர்ப்பதில் விக்ரமின் அர்ப்பணிப்பு ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையானது (அதுவும் கோலிவுட் சம்பளத்தில் என்பது கூடுதல் செய்தி…) அந்த வகையில் கமல் தயாரித்து விக்ரம் நடிக்கிற படமென்றால் எதிர்பார்ப்பு எப்படி எகிறும்..? அப்படியே இந்த ‘கடாரம் கொண்டான்’ படத்தின் மீதும் எதிர்பார்ப்புச் சுமை கூடியிருக்கிறது. அதை எதிர்கொண்டு படத்தைச் சுமந்திருக்கிறார் விக்ரம். கதைத் திருட்டுகள் […]

Read More

ஹீரோ சிவகார்த்திகேயன் வில்லனாக பிரபல இந்தி நடிகர்

by on July 20, 2019 0

சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் ‘ஹீரோ’ படத்தில் வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர் அபய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த திறமையான நடிகரை இந்தப் படத்தில் கொண்டு வருவதைப் பற்றி படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் சொல்கிறார். “இந்தப் படத்தில் அவர் ‘ஹீரோ’வின் சாகசத்தை உயர்த்துவார். எனது முதல் படமான ‘இரும்புத்திரை’ அர்ஜுன் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்காக மிகவும் கவனிக்கப்பட்டது. உண்மையில் இந்தப் படம் கடுமையான குணாதிசயங்களுடன் கூடிய ஒரு வில்லனைக் கொண்டிருந்தது. யார் இந்தக் கதாபாத்திரத்துக்கு பொருந்துவார்கள் […]

Read More

லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல்

by on July 19, 2019 0

சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.   தனா இப்படத்தை இயக்குகிறார். மேலும், மணிரத்னம் இப்படத்தை தனாவுடன் இணைந்து எழுதியுள்ளார். பல வெற்றி பாடல்களைப் பாடி அதன்மூலம் ரசிகர்களைத் தன் வசப்படுத்திய பிரபல பாடகர் சித் ஸ்ரீராம், இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை விவேக் எழுதுகிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத் குமார், ராதிகா […]

Read More

தனுஷ் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் இங்கிலாந்தில் தயாராகிறது

by on July 19, 2019 0

இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ் படத்தை ‘ரிலையன்ஸ் என்டர்டெயிண்மன்ட்’ நிறுவனத்துடன் இணைந்து ‘ஒய்நாட் ஸ்டுடியோஸ்’ தனது 18வது படைப்பாக தயாரிக்கிறது. ஒரு ‘கேங்ஸ்டர் திரில்லர்’ வகையைச் சார்ந்த இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடிக்க, இப்படம் முழுவதுமே இங்கிலாந்தில் படமாக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. கார்த்திக் சுப்பாராஜ் எழுதி இயக்கும் இப்படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பாக எஸ் சஷிகாந்த் தயாரிக்க, இணை தயாரிப்பாளராக சக்கரவர்த்தி ராமசந்திரா இணைகிறார். இப்படத்திற்கு சந்தோஷ் […]

Read More

குறும்பட பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு – ஷார்ட் ஃப்ளிக்ஸ் செயலி

by on July 18, 2019 0

‘நெட்ஃபிளிக்ஸ்’ (NetFlix) கேள்விப்பட்டிருப்பீர்கள்… அதைப்போலவே புதிதாக குறும்படங்களுக்கான ஒரு செயலி ‘ஷார்ட் ஃப்ளிக்ஸ்’ (ShortFlix) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Youtube-ல் சென்று குறும்படங்களைத் தேடி கண்டுபிடுத்து பார்ப்பதற்கு பதில் இந்த Shortflix செயலி மூலம் மிக எளிமையாக இருந்த இடத்திலிருந்தே தரமான குறும்படங்களை கைப்பேசி வாயிலாக கண்டு ரசிக்கலாம். குறும்பட இயக்குனர் அல்லது அந்தக் குழுவினர் அவர்களது படைப்புகளை Shortflix-ன் வலைதள முகவரியிலோ அல்லது நேரடியாகவோ சென்று சமர்ப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட குறும்படங்கள் தரமானதாக இருக்கும் பட்சத்தில் அவை Shortflix செயலியில் […]

Read More

சரவண பவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

by on July 18, 2019 0

சரவண பவன் ஓட்டல்களின் உரிமையாளர் ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 74. முன்னதாக, சரவண பவன் ராஜகோபாலுக்கு பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட, உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 9-ம் தேதி நீதிபதியின் முன் ராஜகோபால் ஆஜராகினார். அப்போது நீதிபதி அவரைப் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஆனால் சிறைக்கு செல்லும் போதே ராஜகோபாலின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. அதனால், ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கான வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டார். […]

Read More