April 27, 2024
  • April 27, 2024
Breaking News
  • Home
  • Uncategorized
  • சில நொடிகளில் திரைப்பட விமர்சனம்

சில நொடிகளில் திரைப்பட விமர்சனம்

By on November 28, 2023 0 73 Views

நல்லதும் சரி கெட்டதும் சரி சில நொடிகளில் நடந்து முடிந்து விடுகிறது ஆனால் அதனுடைய விளைவுகள் பல காலம் நம் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

இந்த விஷயத்தை மூன்று பாத்திரங்களை வைத்து நம்மிடம் கடத்தி இருக்கிறார் இயக்குனர் வினை பரத்வாஜ். 

லண்டனில் நடக்கும் கதையில் மருத்துவரான ரிச்சர்ட் ரிஷி, மாடல் அழகி யாஷிகாவுடனான தொடர்பில் இருக்கிறார். இருவரும் மது போதை பொருள்கள் உடன் படுக்கையையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அதன் பிறகு தான் நமக்கு தெரிகிறது ரிச்சர்ட் ரிஷி ஏற்கனவே புன்னகை பூ கீதாவுடன் திருமண உறவில் இருக்கிறார் என்பது.

ஆனால் கள்ளத்தொடர்பில் இருக்கும் யாஷிகாவிடம் சீக்கிரம் புன்னகை பூ கீதாவை தன் வாழ்வில் இருந்து வெளியேற்றிவிட்டு யாஷிகாவே திருமணம் செய்து கொள்வதாக அவர் சொல்ல நமக்கு கதை ஒரு மாதிரி புரிந்து விடுகிறது.

தனது வீட்டில் வைத்தே படுக்கையே யாஷிகாவுடன் பகிர்ந்து கொள்ளும் இரண்டாவது ஆட்டத்திற்கு தயாராகும் போது அசந்தர்ப்பமாக மனைவி வீட்டுக்கு வந்து விட யாஷிகாவை வெளியேற்ற நினைக்கையில் எதிர்பாராத விதமாக அவர் இறந்து போகிறார்.

ஒரு வழியாக ஆசியாவின் உடலை ஓரிடத்தில் கொண்டு புதைத்து விட்டு, அத்துடன் பிரச்சனை முடிந்ததாக நினைக்கிறார். ஆனால் ஒரு பெண் பத்திரிகையாளர் இந்த விஷயத்தை ஓபன் படுத்த து பிளாக்மெயில் செய்ய… அதற்குப் பின் என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்.

ரிச்சர்ட் அரிசி ஏன் ஒரு மருத்துவராக இருக்க வேண்டும் என்பது தெரியவில்லை. ஆனால் அந்த பாத்திரத்துக்கு மெத்த பொருத்தமாக இருக்கிறார் அவர். அவரது கட்டுக்கோப்பான உடம்பை பல பெண்களை கவரும் சாத்தியத்துடன் இருக்கிறது.

இந்தப் படத்தை தயாரித்திருக்கும் புன்னகை பூ கீதாவே ரிச்சர்ட் அரிசியின் மனைவியாக வருவதும் ஆச்சரியமான விஷயம். ஒரு மனைவியாக ரிச்சர்ட் அரிசியின் மனதில் இருக்கும் பிரச்சனைகளை தான் வாங்கிக் கொண்டு வருகும் காட்சிகளில அற்புதமாக நடித்திருக்கிறார் கீதா.

நடிப்புடன் தனக்கு நடனம் ஆடவும் தெரியும் என்று அறிவிக்க ஓரிடத்தில் அற்புதமான பாலு டான்ஸ் ஆடி அசத்துகிறார்.

யாஷிகா ஆனந்த் மிக அழகாக இருக்கிறார் அவரது அழகில் சொக்கி போகும் இருவர் எவரும் ஆசியாவின் தொடர்பு கிடைத்தால் அதனை கள்ளத்தொடர்பாக மாற்றவே செய்வர்.

யாஷிகா கொலை கொண்டதை தெரிந்து கொண்டு தன்னை மிரட்டும் பெண் பத்திரிகையாளரைஉம் ரிச்சர்ட் அரிசி கொள்ளும் போது நமக்கு பகீர் என்கிறது